பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்த மேலும் ஒரு புதிய நபர். மகிழ்ச்சியில் துள்ளி குதிக்கும் பிரியங்கா ? (மீண்டும் ஒரு விஜய் டிவி பிரபலமோ)

0
404
BiggBoss
- Advertisement -

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி தொடங்கி 53 நாட்களை கடந்து பயங்கர விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கின்றது. இந்த நிகழ்ச்சி தொடங்கிய ஆரம்பத்திலிருந்து இன்று வரை ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்று வருகிறது. மேலும், இந்த நிகழ்ச்சியில் முகம் தெரிந்த நபர்களை விட தெரியாத நபர்கள் தான் அதிகம் கலந்து கொண்டிருக்கிறார்கள். இருந்தாலும் அவர்களும் மக்கள் மத்தியில் பிரபலமாகி வருகிறார்கள்.

-விளம்பரம்-

வழக்கம் போல் பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கி இரண்டு நாட்களிலேயே போட்டியாளர்களுக்கு சச்சரவும் சலசலப்பும் தொடங்கி விட்டது. அதிலும் நாட்கள் செல்ல செல்ல போட்டிகளும், சவால்களும் அதிகமாகி வருவதால் போட்டியாளர்கள் மத்தியில் வன்மம் ஏற்பட்டு இருக்கிறது. மேலும், வார வாரம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து ஒருவர் எலிமினேட் செய்து வருகிறது. அந்த வகையில் 18 பேருடன் தொடங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் 8 பேர் எலிமினேட் ஆகி தற்போது இரண்டு பேர் வைல்ட் கார்ட்டு என்ட்ரீயாக வந்து இருக்கிறார்கள்.

- Advertisement -

இரண்டாவது எலிமினேட் ஆன அபிஷேக் மீண்டும் வைல்ட் கார்ட் என்ட்ரி கொடுத்திருக்கிறார். பின் சில தினங்களுக்கு முன்பு அமீர் என்ற நடனக் கலைஞரும் வீட்டிற்குள் வைல்ட் கார்ட்டு என்ட்ரி கொடுத்திருக்கிறார். இது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. இந்த நிலையில் நிகழ்ச்சியில் மீண்டும் ஒருவர் வைல்ட் கார்ட்டு என்ட்ரீ கொடுக்க இருக்கிறார் அது குறித்த ப்ரோமோ ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. அதில், எந்த டாஸ்க் இருந்தாலும் வீட்டின் வேலைகள் கண்டிப்பாக செய்ய வேண்டும். அப்படி செய்யாதவர்களை நேரடியாக எழிமினேஷனுக்கு தேர்வு செய்யப்படுவார்கள் என்று பிக்பாஸ் அறிவித்திருந்தார்கள்.

அதற்குப் பிறகு பிக்பாஸ் வீட்டின் கதவைத் திறக்கிறார்கள். அதைப் பார்த்த போட்டியாளர்கள் அனைவரும் மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்து யார்? என்று ஆவலாக பார்க்கிறார்கள். ஆனால், அது யார்? என்று தெரியவில்லை. மேலும், சில தினங்களாகவே சோஷியல் மீடியாவில் சின்னத்திரை நடிகர் சஞ்சீவ் தான் வைல்ட் கார்ட்டு என்ட்ரீயாக வரப்போகிறார் என்று கூறப்படுகிறது. அவராக இருக்குமோ? என்றும், இல்லை சிறப்பு விருந்தினரா அல்லது ப்ரீஸ் டாஸ்க் துவங்கப்பட்டு போட்டியாளரின் குடும்பத்தினர் யாரவது வந்து இருக்கிறார்களா என்று பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.

-விளம்பரம்-

Advertisement