த்து, நீயெல்லாம் பொண்ணே இல்லடி நாயே போடி வெளிய – அர்ச்சனாவை தரக்குறைவாக பேசிய நிக்சன்

0
256
- Advertisement -

விஜய் டிவியில் பிக் பாஸ் 7 நிகழ்ச்சி தொடங்கி 9வது வாரத்தை கடந்து இருக்கிறது. இந்த சீசனில் கூல் சுரேஷ், பூர்ணிமா ரவி, ரவீனா தாஹா, பிரதீப் ஆண்டனி, நிக்சன், சரவணா விக்ரம், மாயா எஸ் கிருஷ்ணா, விஷ்ணு, ஜோவிகா, அக்ஷ்யா உதயகுமார், மணிசந்திரா, வினுஷா தேவி, யுகேந்திரன் வாசுதேவன், விசித்ரா, பவா செல்லதுரை, விஜய் வர்மா என்று பலர் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்று இருந்தார்கள். இதில் அனன்யா, பவா, விஜய் வர்மா, வினுஷா மற்றும் யுகேந்திரன், அன்னபாரதி,பிரதீப், ஐஷு, கானா பாலா, அக்ஷயா, பிராவோ. ஜோவிகா ஆகியோர் வெளியேறி இருக்கின்றனர்.

-விளம்பரம்-

கடந்த சில நாட்களுக்கு முன்னர் பிக் பாஸ் வீடு பள்ளிக்கூடமாக மாறிய நிலையில் நேற்று பிக் பாஸ் வீடு கல்லூரியாக மாறியது. இதில் போட்டியாளர்கள் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களாக பிரிந்தனர். இந்த டாஸ்கில் அர்ச்சனா, மாயா மற்றும் பூர்ணிமாவை வச்சி செய்த நிலையில் நிக்சன், அர்ச்சனாவை வச்சி செய்தார். இறுதியில் இந்த டாஸ்கின் முடிவில் நிக்சன் மற்றும் ரவீனாவிற்கு Gold ஸ்டார் வழங்கப்பட்டது.

- Advertisement -

இந்த டாஸ்க் வின்னர் அர்ச்சனா மற்றும் நிக்ஸன் ஆகிய இருவருக்கும் சில வாக்குவாதம் ஏற்பட்டு இருந்தது. அப்போது நிக்சன் ‘ ஒருவரை துள்ரவன், பலியாடு என்றெல்லாம் முத்திரை குத்துவது நீங்கள் தான். நீங்கள் மற்றவர்களை மிகவும் கேவலமாக பேசிக்கொண்டு இருக்கிறீர்கள். முதல் வாரத்தில் அழுது இப்போ வரை அதை செய்கிறீர்கள் என்று நிக்சன் கூறியதும் கடுப்பான அர்ச்சனா ‘ நான் முதல் வாரத்தில் செய்ததை பற்றி எல்லாம் பேசுனா நான் நிறைய விஷயம் பேச வேண்டியது இருக்கும்’ என்று பதிலடி கொடுத்தார்.

இதனை தொடர்ந்து நிக்சன் நேற்று அர்ச்சனாவிடம் எதுவும் பேசாமல் அமைதியாக சென்றுவிட்டார். இப்படி இருக்க தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில், அர்ச்சனாவை ‘நீங்கள் எதற்கும் லாய்க்கி இல்லாதவர். நீ வாய மூடு, இது வெளிய போடி நாயே என்று வாய்க்கு வந்தபடி பேசி இருக்கிறார். அப்போது வந்த விசித்ரா, அவனை ஏன் நீ சீண்டுற என்று அர்ச்சனாவிடம் கேட்டு இருக்கிறார்.

-விளம்பரம்-

தற்போது பிக் பாஸ் வீட்டில் விஜய் வர்மா, அனன்யா, விசித்ரா, தினேஷ், அர்ச்சனா, கூல் சுரேஷ், மணி, ரவீனா, மாயா, பூர்ணிமா, நிக்சன், விக்ரம்,விஷ்ணு ஆகிய 13 பேர் மட்டும் உள்ளே இருக்கின்றனர். இந்த வாரம் நடைபெற்ற நாமினேஷனில் நிக்சன், அர்ச்சனா, தினேஷ், விசித்ரா, மணி ஆகிய 5 பேர் நாமினேட் ஆகி இருகின்றனர். மேலும், இதில் மணி அல்லது நிக்சன் இருவரில் தான் கண்டிப்பாக ஒருவர் வெளியேறுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இப்படி ஒரு நிலையில் இந்த வாரம் எலிமினேஷன் இல்லை என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இதுகுறித்து அறிவித்த விஜய் டிவி ‘மிக்ஜாம் புலன் காரணமாக பெரும்பான்மையான மக்கள் வாக்களிக்க இயலாததால், இந்த வார எலிமினேஷன் ரத்து செய்யப்படுகிறது’ என்று அறிவித்து இருந்தது. இந்த வாரம் நிக்சன் தான் நிச்சயம் வெளியேறுவார் என்று எதிர்பார்த்த நிலையில் விஜய் டிவி இப்படி ஒரு ட்விஸ்டை கொடுத்துவிட்டது.

Advertisement