எல்லா டாஸ்க்கும் பந்து வச்சி தானா – பாருங்க மக்களே இதான் இரண்டாம் பூகம்ப டாஸ்காம்.

0
181
Raveena
- Advertisement -

விஜய் டிவியில் பிக் பாஸ் 7 நிகழ்ச்சி தொடங்கி 7வது வாரத்தை கடந்து இருக்கிறது. இந்த சீசனில் கூல் சுரேஷ், பூர்ணிமா ரவி, ரவீனா தாஹா, பிரதீப் ஆண்டனி, நிக்சன், சரவணா விக்ரம், மாயா எஸ் கிருஷ்ணா, விஷ்ணு, ஜோவிகா, அக்ஷ்யா உதயகுமார், மணிசந்திரா, வினுஷா தேவி, யுகேந்திரன் வாசுதேவன், விசித்ரா, பவா செல்லதுரை, விஜய் வர்மா என்று பலர் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்று இருந்தார்கள். இதில் அனன்யா, பவா, விஜய் வர்மா, வினுஷா மற்றும் யுகேந்திரன், அன்னபாரதி,பிரதீப், ஐஷு, கானா பாலா ஆகியோர் வெளியேறி இருக்கின்றனர்.

-விளம்பரம்-

கடந்த வாரம் ஸ்டார் அதிகம் பெற்று இருக்கும் போட்டியாளர்கள் அவர்களுக்குள் கலந்துபேசி ஒருவருக்கு ஸ்டார் கொடுக்கலாம். அந்த ஒரு நபர் இரண்டு நபரை அடுத்த வார நேரடியாக நாமினேட் செய்யலாம் என்ற பவர் கொடுக்கப்பட்டது. இதில் விஷ்ணு, மாயா மற்றும் அக்ஷயா ஆகிய இருவரை நாமினேட் செய்தார்.பின் நாமினேஷன் நடைபெற்றது. அதில் விஷ்ணு நாமினேட் செய்த மாயா, அக்ஷயா உட்பட அர்ச்சனா, பூர்ணிமா, விசித்ரா, ரவீனா, மணி, பிராவோ ஆகியோர் நாமினேட் ஆகி இருக்கின்றனர்.

- Advertisement -

நேற்றய நிகழ்ச்சியில் முதல் பூகம்ப டாஸ்க் கொடுக்கட்டது. இதில் தினேஷ் மற்றும் விஷ்ணு பங்கேற்று இருந்தனர். ஆனால், இருவரும் இந்த டாஸ்க்கில் தோற்றுவிட்டனர். இதனை தொடர்ந்து மணி மற்றும் நிக்சன் இந்த டாஸ்கில் பாகேற்றனர். இதிலும் இருவரும் டாஸ்கில் வெற்றி பெற்றனர். இதனை தொடர்ந்து ப்ரவரோ மற்றும் விக்ரம் பங்கேற்று இருந்தனர். இதில் இருவரும் தோற்றனர்.

விசித்ரா, அர்ச்சனா இருவரும் விளையாடி தோற்றனர். இதனால் முதல் பூகம்ப டாஸ்கில் பிக் பாஸ் போட்டியாளர்கள் தோற்றதால். இந்த வார இறுதியில் Wild Card போட்டியாளர்கள் உள்ளே நுழைவது உறுதியாகிவிட்டதாக பிக் பாஸ் அறிவித்தார். மேலும், இனி மீதம் இருக்கும் இரண்டு பூகம்ப டாஸ்கை பொறுத்து எத்தனை Wild Card என்பது உறுதியாகும் என்றும் பிக் பாஸ் அறிவித்து இருந்தார்.

-விளம்பரம்-

இதனை தொடர்ந்து போட்டியாளர்கள் தங்கள் வாழ்வில் நடந்த பூகம்மான சம்பவம் குறித்து சொல்ல வேண்டும் என்று பிக் பாஸ் அறிவித்து இருந்தார். இதில் தினேஷ் தனது மனைவியுடனான பிரிவு குறித்து மிக உருக்கமுடன் பேசி இருந்தார். அதே போல விசித்ரா, சினிமாவில் தனக்கு நடந்த பாலியல் சீண்டல் குறித்தும் சினிமாவில் இருந்து விலகிய காரணம் குறித்தும் கண்ணீருடன் பேசி இருந்தார்.

அதிலும் அந்த படத்தில் நடித்த ஹீரோ முதல் நாளே தன்னை ரூமிற்கு அழைத்தாகவும்., தினமும் குடித்துவிட்டு அறைக்கு வந்து தொல்லை செய்ததாகவும் ஷாக் கொடுத்து இருந்தார். இதனை தொடர்ந்து மாயா மற்றும் ஜோவிகா ஆகிய இருவரும் தங்கள் வாழ்வில் நடந்த பூகம்பம் குறித்து பேசி இருந்தார்கள். இப்படி ஒரு நிலையில் தற்போது வெளியாகி ப்ரோமோவில் இரண்டாம் பூபங்க டாஸ் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

Advertisement