இத கேக்கலைனா பாருங்கன்னு சொன்னீங்களா, கேட்கேலனா என்ன பண்ணுவீங்க என்ன? கமல் ஆவேசம்.

0
394
- Advertisement -

விஜய் டிவியில் பிக் பாஸ் 7 நிகழ்ச்சி தொடங்கி 8வது வாரத்தை கடந்து இருக்கிறது. இந்த சீசனில் கூல் சுரேஷ், பூர்ணிமா ரவி, ரவீனா தாஹா, பிரதீப் ஆண்டனி, நிக்சன், சரவணா விக்ரம், மாயா எஸ் கிருஷ்ணா, விஷ்ணு, ஜோவிகா, அக்ஷ்யா உதயகுமார், மணிசந்திரா, வினுஷா தேவி, யுகேந்திரன் வாசுதேவன், விசித்ரா, பவா செல்லதுரை, விஜய் வர்மா என்று பலர் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்று இருந்தார்கள். இதில் அனன்யா, பவா, விஜய் வர்மா, வினுஷா மற்றும் யுகேந்திரன், அன்னபாரதி,பிரதீப், ஐஷு, கானா பாலா ஆகியோர் வெளியேறி இருக்கின்றனர்.

-விளம்பரம்-

கடந்த வாரம் ஸ்டார் அதிகம் பெற்று இருக்கும் போட்டியாளர்கள் அவர்களுக்குள் கலந்துபேசி ஒருவருக்கு ஸ்டார் கொடுக்கலாம். அந்த ஒரு நபர் இரண்டு நபரை அடுத்த வார நேரடியாக நாமினேட் செய்யலாம் என்ற பவர் கொடுக்கப்பட்டது. இதில் விஷ்ணு, மாயா மற்றும் அக்ஷயா ஆகிய இருவரை நாமினேட் செய்தார்.பின் நாமினேஷன் நடைபெற்றது. அதில் விஷ்ணு நாமினேட் செய்த மாயா, அக்ஷயா உட்பட அர்ச்சனா, பூர்ணிமா, விசித்ரா, ரவீனா, மணி, பிராவோ ஆகியோர் நாமினேட் ஆகி இருக்கின்றனர்.

- Advertisement -

தற்போது பிக் பாஸ் வீட்டில் 14 பேர் இருக்க பாஸ் வீட்டில் மேலும் 3 wild card போட்டியாளர்கள் வர இருப்பதாக அறிவிக்கப்பட்டது. மேலும், போட்டியாளர்களுக்கு மூன்று டாஸ்க் கொடுக்கப்படும், அதில் வென்றால் பிக் பாஸ் வீட்டில் தொடரலாம், தோற்றால் wild card போட்டியாளருக்கு வழிவிட்டு பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற வேண்டும் என்று போட்டியாளர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்து இருக்கிறார் பிக் பாஸ்.

இதுவரை கொடுக்கப்பட்ட மூன்று பூகம்ப டாஸ்க் கொடுக்கப்ட்டது. இந்த மூன்று டாஸ்கில் இரண்டு பூகம்ப டாஸ்கில் தோற்றதால் இந்த வார இறுதியில் எத்தனை பேர் உள்ளே செல்ல போகிறார்கள் எத்தனை பேர் வெளியில் போவார்கள் என்பது தெரியவரும் என்றும் பிக் பாஸ் அறிவித்து இருக்கிறார். இப்படி இருக்கும் நிலையில் பிராவோ- அக்ஷயா இருவரும் எலிமினேட் ஆகிருக்கிறார்கள்.இதில் பிராவோ நேற்றே வெளியேற்றப்பட்டார்.

-விளம்பரம்-

இப்படி ஒரு நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் கமல் ஆவேசத்துடன் பேசிஇருக்கிறார் இருக்கிறார். இதில் ‘நான் என்ன கேட்க வேண்டும் என்று நீங்கள் முடிவு பண்ண வேண்டாம். இந்த வார கடைசில இத கேக்கலனா பாருன்னு சொன்னீங்க, அப்படி கேட்கலன என்ன பண்ணிடுவாங்க என்ன என்று மிகவும் ஆவேசமாக பேசி இருக்கிறார். மேலும், இது பூர்ணிமாவை தான் சொல்வது போல இருக்கிறது.

Advertisement