அப்போ கெட்டவங்க கூட டைட்டில் ஜெயிக்கலாம் – தினேஷ் தொடர்ந்து அர்ச்சனா குறித்து வயிறெரிந்த விச்சு

0
196
- Advertisement -

விஜய் டிவியில் பிக் பாஸ் 7 நிகழ்ச்சி தொடங்கி 90 நாட்களை கடந்து இறுதி கட்டத்தை நெருங்கி கொண்டு இருக்கிறது. இந்த சீசனில் கூல் சுரேஷ், பூர்ணிமா ரவி, ரவீனா தாஹா, சுரேஷ், ஆண்டனி, நிக்சன், சரவணா விக்ரம், மாயா எஸ் கிருஷ்ணா, விஷ்ணு, ஜோவிகா, அக்ஷ்யா உதயகுமார், மணிசந்திரா, வினுஷா தேவி, யுகேந்திரன் வாசுதேவன், விசித்ரா, பவா செல்லதுரை, விஜய் வர்மா என்று பலர் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்று இருந்தார்கள்.

-விளம்பரம்-

இதுவரை இதில் பவா, வினுஷா மற்றும் யுகேந்திரன், அன்னபாரதி, பிரதீப், ஐஷு, கானா பாலா, அக்ஷயா, பிராவோ, ஜோவிகா, அன்னயா, கூல் சுரேஷ், சரவணா விக்ரம் ஆகியோர் வெளியேறி இருக்கின்றனர். மேலும், கடந்த வாரம் டிக்கெட் டு பினாலே டாஸ்க் கொடுக்கப்பட்டு இருந்தது. அதில் போட்டியாளர்கள் இரண்டு நபரை தேர்வு செய்து TTF போட்டியில் கலந்து கொள்ள வேண்டாம் என்று பிக் பாஸ் அறிவித்திருந்தார். அந்த வகையில் அனைவருமே சேர்ந்து அர்ச்சனா, விஜய் வர்மாவை தேர்ந்தெடுத்து இருந்தார்கள்.

- Advertisement -

இதில் முதல் டாஸ்க்கில் விஷ்ணு வென்று மூன்று புள்ளிகளை பெற்றார். இரண்டாம் டாஸ்கில் நிக்சன் முதல் இடத்தையும், பூர்ணிமா இரண்டாம் இடத்தையும் பிடித்து இருந்தார்கள். ஆனால், அதில் நிக்சன் ஏமாற்று வேலை செய்து வெற்றி பெற்றது அனைவரும் அறிந்த ஒன்று. பின் மூன்றாவது Ticket To Finale டாஸ்க்கில் போட்டியாளர்கள் நேருக்கு நேர் அமர்ந்து தங்கள் கருத்துகளை கூறி வெல்வது போல வடிவைமைக்கப்ட்டு இருந்தது.

அந்த வகையில் போட்டியாளர்கள் இரு அணிகளாக பிரிந்து பலகையின் மீது கை வைத்திருந்தார்கள். அதில் விஷ்ணு மூன்று மதிப்பெண்களை பெற்றிருந்தார். ஏற்கனவே அவர் 7 புள்ளிகளை வைத்திருந்தார். மொத்தம் டாஸ்க் வெற்றிக்கு தேவையான 10 புள்ளிகளை பெற்று இந்த டிக்கெட் டு பினாலே டாஸ்க்கின் வெற்றியாளர் ஆனார் விஷ்ணு. நேற்றய நிகழ்ச்சியில் இந்த வாரம் நடந்ததை பற்றி கமல் எல்லாம் பேசி இருந்தார்.

-விளம்பரம்-

அதே போல கடந்த வாரம் டாஸ்கில் சிலர் ஏமாற்று வேலைகளை செய்தார்கள் என்ற குற்றசாட்டு இருந்தது. குறிப்பாக விஜய் வர்மா, நிக்சன் ஆகிய இருவரும் கார்ட் டாஸ்கில் மோசடி செய்ததாக விமர்சனங்கள் எழுந்தது. ஆனால், அவர்கள் மீது எந்த தவறும் இல்லை என்று முட்டுகொடுத்துவிட்டார் கமல். இதனை தொடர்ந்து நேற்றய நிகழ்ச்சியில் டபுள் ஏவிக்ஷன் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் ரவீனா மற்றும் நிக்சன் இருவரும் வெளியேற்றப்பட்டன்ர்.

இப்படி ஒரு நிலையில் இந்த வாரம் யார் நாமினேட் ஆகப் போகிறார்கள் என்ற மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்து வந்தது. ஆனால், இந்த வாரம் அனைவரும் நாமினேட் ஆகி இருப்பதாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது. எனவே இந்த வாரம் விஜய் வர்மா, மணி ஆகிய இருவரில் யாராவது ஒருவர் தான் வெளியேறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இந்த வாரமும் பூர்ணிமா மற்றும் மாயா இருவரும் எஸ்கேப் ஆகிவிட்டனர்.

Advertisement