அடுத்தவங்க திசைதிருப்பி எலிமினேஷன் பன்றாங்க, அதுல என்னவும் பலியிட பாத்தாங்க – மாயா பூர்ணிமா குறித்து விஷணு.

0
221
- Advertisement -

விஜய் டிவியில் பிக் பாஸ் 7 நிகழ்ச்சி தொடங்கி 13 வாரங்களை கடந்து இறுதி கட்டத்தை நெருங்கி இருக்கிறது. இந்த சீசனில் கூல் சுரேஷ், பூர்ணிமா ரவி, ரவீனா தாஹா, சுரேஷ், ஆண்டனி, நிக்சன், சரவணா விக்ரம், மாயா எஸ் கிருஷ்ணா, விஷ்ணு, ஜோவிகா, அக்ஷ்யா உதயகுமார், மணிசந்திரா, வினுஷா தேவி, யுகேந்திரன் வாசுதேவன், விசித்ரா, பவா செல்லதுரை, விஜய் வர்மா என்று பலர் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்று இருந்தார்கள்.

-விளம்பரம்-

இதுவரை இதில் பவா, வினுஷா மற்றும் யுகேந்திரன், அன்னபாரதி, பிரதீப், ஐஷு, கானா பாலா, அக்ஷயா, பிராவோ, ஜோவிகா, அன்னயா, கூல் சுரேஷ், சரவணா விக்ரம் ஆகியோர் வெளியேறி இருக்கின்றனர். மேலும், கடந்த வாரம் டிக்கெட் டு பினாலே டாஸ்க் கொடுக்கப்பட்டு இருந்தது. அதில் போட்டியாளர்கள் இரண்டு நபரை தேர்வு செய்து TTF போட்டியில் கலந்து கொள்ள வேண்டாம் என்று பிக் பாஸ் அறிவித்திருந்தார். அந்த வகையில் அனைவருமே சேர்ந்து அர்ச்சனா, விஜய் வர்மாவை தேர்ந்தெடுத்து இருந்தார்கள்.

- Advertisement -

இதில் முதல் டாஸ்க்கில் விஷ்ணு வென்று மூன்று புள்ளிகளை பெற்றார். இரண்டாம் டாஸ்கில் நிக்சன் முதல் இடத்தையும், பூர்ணிமா இரண்டாம் இடத்தையும் பிடித்து இருந்தார்கள். ஆனால், அதில் நிக்சன் ஏமாற்று வேலை செய்து வெற்றி பெற்றது அனைவரும் அறிந்த ஒன்று. பின் மூன்றாவது Ticket To Finale டாஸ்க்கில் போட்டியாளர்கள் நேருக்கு நேர் அமர்ந்து தங்கள் கருத்துகளை கூறி வெல்வது போல வடிவைமைக்கப்ட்டு இருந்தது.

அந்த வகையில் போட்டியாளர்கள் இரு அணிகளாக பிரிந்து பலகையின் மீது கை வைத்திருந்தார்கள். அதில் விஷ்ணு மூன்று மதிப்பெண்களை பெற்றிருந்தார். ஏற்கனவே அவர் 7 புள்ளிகளை வைத்திருந்தார். மொத்தம் டாஸ்க் வெற்றிக்கு தேவையான 10 புள்ளிகளை பெற்று இந்த டிக்கெட் டு பினாலே டாஸ்க்கின் வெற்றியாளர் ஆனார் விஷ்ணு. கடந்த வாரம் கொடுக்கப்பட்ட Ticket To Finale டாஸ்க் எதுவும் ஸ்வாரசியமாக இல்லை.

-விளம்பரம்-

அதே போல கடந்த வாரம் டாஸ்கில் சிலர் ஏமாற்று வேலைகளை செய்தார்கள் என்ற குற்றசாட்டு இருந்தது. குறிப்பாக விஜய் வர்மா, நிக்சன் ஆகிய இருவரும் கார்ட் டாஸ்கில் மோசடி செய்ததாக விமர்சனங்கள் எழுந்தது. ஆனால், அவர்கள் மீது எந்த தவறும் இல்லை என்று முட்டுகொடுத்துவிட்டார் கமல். இதனை தொடர்ந்து கடந்த வார இறுதி நிகழ்ச்சியில் டபுள் ஏவிக்ஷன் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் ரவீனா மற்றும் நிக்சன் இருவரும் வெளியேற்றப்பட்டன்ர்.

இது ஒருபுறம் இருக்க இன்றைய எபிசோடில் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த பணப் பெட்டி டாஸ்க் துவங்கி இருக்கிறது. இப்படி ஒரு நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் போட்டியாளர்கள் ஒருவரை தேர்ந்தெடுத்து அவர்களின் பிக் பாஸ் பயணம் குறித்து பேச வேண்டும் என்று பிக் பாஸ் அறிவித்து இருக்கிறார். இதில் விஷ்ணு குறித்து பேசி இருக்கும் பூர்ணிமா, விஷ்ணு தன்னை பயன்படுத்தி கசக்கி தூக்கி போட்டுவிட்டதாக அனைவர் முன்பும் பேசி இருக்கிறார்.

Advertisement