பிக் பாஸில் இருந்து வெளியேறிய தர்ஷன்.! பார்வையாளர்களின் ரியாக்ஷனை பாருங்க.!

0
7606
tharshan
- Advertisement -

பிக்பாஸ் நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது அடுத்த வாரம் வெற்றியாளர்கள் யார் என்பது தெரிய வரும் நிலையில் இந்த வாரம் கவின் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியது மிகப்பெரிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இறுதி வாரம் என்பதால் நேரடி போட்டிக்கு தகுதி பெற்ற முகெனை தவிர மற்ற 5 போட்டியாளர்களும் நாமினேஷனில் இடம் பெற்றனர்.

-விளம்பரம்-

ஆனால், ஓட்டிங் முடிய இரண்டு நாட்கள் இருக்கும் நிலையில் கவின் பிக்பாஸ் அறிவித்த 5 லட்ச ரூபாய் பரிசுத் தொகையை எடுத்துக் கொண்டு போட்டியில் இருந்து வெளியேறி இருந்தார். இதனால் கடைசி இரண்டு நாளில் யாரும் எதிர்பாராத மாற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த வாரம் ஷெரின் தான் வெளியேறுவார் என்று எதிர்பார்த்த நிலையில் அனைவருக்கும் ஷாக் கொடுக்கும் வகையில் தர்ஷன் வெளியேறி இருக்கிறார்.

இதையும் பாருங்க : கண் கலங்கி வெளியேறிய தர்ஷன்.! மேடையில் உருக்கமான பேச்சு.! எக்ஸ்க்ளூசிவ் அப்டேட்.!

- Advertisement -

தர்ஷன் இந்த வாரம் வெளியேற்றபட்டார் என்று அறிவித்தும் ரசிகர்கள் மத்தியிலும் போட்டியாளர்கள் மத்தியிலும் பெரும் அமைதியும் அதிர்ச்சியும் நிலவியது. மேலும், தர்ஷனும் தனது கண்களில் கலங்கியவாரு அமர்ந்திருந்தார். பின்னர் மேடையில் தர்ஷன் வந்ததும் ரசிகர்கள் கத்தி ஆரவாரம் செய்தனர். அதே போல கமலும், ஏன் இப்படி மக்கள் செய்தார்கள் என்று தெரிவதில்லை இருப்பினும் வந்த வேலையை நீங்கள் முடித்து விடீர்கள் என்று கூறியதும் இந்த வார்த்தையே போதும் சார் எனக்கு என்றார் தர்ஷன்.

மேலும், தர்ஷன் வெளியேறியதை கண்டதும் ஒரு சில பார்வையாளர்களும் பெண்களும் கண் கலங்கி அழுதனர். அப்போது கமல் அழுகிறர்வர்கள் எல்லாம் ஒட்டு போடீர்களா என்று கேட்டதற்கு கண்ணீருடன் தலையாட்டினார். இதுவரை எந்த போட்டியாளரின் வெளியேற்றத்தின் போதும் பார்வையாளர்கள் அழுததே கிடையாது. இதில் இருந்தே தர்ஷன் மீது ரசிகர்கள் எவ்வளவு அன்பை வைத்துள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.

-விளம்பரம்-
Advertisement