அல்டிமேட்டில் இருந்து இந்த வாரம் வெளியேறியது யார் தெரியுமா? (இவர போன வாரமே எதிர்பாத்துச்சி)

0
396
Bigg
- Advertisement -

பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் எட்டாம் வாரம் வெளியேறியவர் குறித்த தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழில் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி தொடங்கி எட்டாவது வாரத்தின் இறுதியை நெருங்கி உள்ளது. நிகழ்ச்சி இறுதி கட்டம் நெருங்க நெருங்க போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் பயங்கரமாக விளையாடி வருகிறார்கள். மேலும், தமிழில் புது வித்தியாசமான முயற்சியில் விஜய் டிவி அறிமுகப்படுத்திய நிகழ்ச்சி தான் பிக் பாஸ் அல்டிமேட். இந்தியில் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி ஓடிடியில் ஒளிபரப்பானது. இதே கான்சப்டில் தமிழில் டிஸ்னி ஹாட் ஸ்டாரில் ஒளிபரப்பாகி வருகிறது.

-விளம்பரம்-
biggboss

இந்த நிகழ்ச்சி டிவி ஷோ போல் ஒரு மணி நேரம் இல்லாமல் 24 மணி நேரமும் டிஸ்னி ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பி வருகிறார்கள். இதில் பிக் பாஸ் சீசன் 1முதல் 5 வரையிலான போட்டியாளர்கள் கலந்துகொண்டு இருக்கின்றனர். மேலும், இந்த நிகழ்ச்சியில் இருந்து இதுவரை சுஜா வருணி, ஷாரிக், அபிநய், தாடி பாலாஜி, சினேகன் வெளியேறிய நிலையில் வனிதா தாமாக வெளியேறினார். ஏற்கனவே வெளியேறிய சுரேஷ் சக்ரவர்த்தி மற்றும் Kpy சதிஷ் வைல்ட் கார்ட் எண்ட்ரியாக நுழைந்தனர்.

இதையும் பாருங்க : எதிர்பார்த்த தேதிக்கு முன்பாகவே இரண்டாம் குழந்தையை பெற்ற ஆல்யா, குழந்தையின் குயூட் புகைப்படம் இதோ (என்ன குழந்தை தெரியுமா )

- Advertisement -

வைல்ட் கார்ட் எண்ட்ரி ஆனவர்:

அதே போல விக்ரம் பட ஷூட்டிங்கால் கமல் வெளியேறியதை தொடர்ந்து தற்போது சிம்பு இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். சிம்பு நிகழ்ச்சியை தொகுத்து வழங்க ஆரம்பித்ததில் இருந்து நிகழ்ச்சியும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. பின் மீண்டும் வைல்ட் கார்ட் எண்ட்ரியாக ரம்யா பாண்டியன் வந்தார். கடந்த வாரம் நடைபெற்ற நாமினேஷனின் அனிதா, சுருதி, நிரூப், தாமரை, ஜூலி,சதீஷ் ஆகிய 6 பேர் நாமினேட் ஆகி இருந்தனர்.

சுரேஷ் தாத்தா வெளியேறிய காரணம்:

இதில் ஜூலி இந்த சீசனில் நல்ல பெயரை எடுத்து வருவதால் அவர் இந்த வாரம் போக மாட்டார் என்று கூறப்பட்டது. இதில் சதிஷ் தான் வெளியேறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கடந்த வாரம் அனிதா வெளியேறி இருக்கிறார். உண்மையில் இதை யாரும் எதிர்பார்க்கவில்லை. பின் சில தினங்களுக்கு முன் திடீரென்று அல்டிமேட் நிகழ்ச்சியிலிருந்து சுரேஷ் சக்ரவர்த்தி வெளியேறி இருந்தார். இது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

-விளம்பரம்-

கடந்த வாரம் எலிமினேட் ஆனவர்:

சுரேஷ் தாத்தா உடல் நிலை சரியில்லாத காரணத்தினால் தான் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது. பிறகு சில தினங்களுக்கு முன்பு நிகழ்ச்சியில் சாண்டி மற்றும் தீனா ஆகியோர் என்ட்ரி ஆகி இருந்தார்கள். இவர்கள் இருவரும் உள்ளே நுழைந்தவுடன் வீடே கலகலப்பாக மாறி சிரிப்பு மழையை பொழிந்து வருகிறது. இந்த நிலையில் இந்த வாரத்திற்கான எழிமினேஷன் குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது.

இந்த வாரம் எலிமினேட் ஆனவர்:

இந்த வாரம் நடந்த நாமினேஷனில் பாலாஜி, ஜூலி, சுருதி, ரம்யா பாண்டியன், அபிராமி, சதீஷ் ஆகியோர் இடம் பிடித்திருந்தார்கள். இதில் இந்த வாரம் கே பி ஒய் சதீஷ் தான் வெளியேறி இருக்கிறார். இவர் சென்ற வாரமே வெளியேறி விடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இந்த வாரம் சதிஷ் குறைந்த வாக்குகள் எண்ணிக்கையின் அடிப்படையில் வெளியேறி இருக்கிறார். தற்போது இந்த தகவல் சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது.

Advertisement