தர்ஷன் வெளியேறியதற்கு நீ தான் காரணம்.! உள்ளே சென்ற உடனே பத்த வைத்த வனிதா.!

0
2953
Vanitha
- Advertisement -

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. கடந்த வார நிகழ்ச்சியில் இருந்து தர்ஷன் வெளியேற்றப்பட்டதால் இந்த சீசனில் லாஸ்லியா, சாண்டி,முகென் ,ஷெரின் ஆகியோர் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர். இன்னும்7 நாட்களில் இந்த சீசனின் டைட்டில் வின்னர் யார் என்பது தெரிய வந்துவிடும்.

-விளம்பரம்-

கடந்த வார நிகழ்ச்சியில் தர்ஷன் வெளியேறி இருந்துதான் ரசிகர்களுக்கும் சக போட்டியாளர்களுக்கும் பெரும் அதிர்ச்சியாக அமைந்து இருந்தது. கடந்த வாரம் ஷெரின் தான் வெளியேறுவார் என்று பலரும் எதிர்பார்த்து வந்த நிலையில் தர்ஷன் வெளியேற்றப்பட்டது மிகப் பெரிய ஏமாற்றமாக கருதப்பட்டு வருகிறது. இதனால் பிக்பாஸ் நிகழ்ச்சியையும் விஜய் டிவியையும் ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.

- Advertisement -

அதேபோல இந்த சீசனில் தான் இறுதிப்போட்டிக்கு இரண்டு ஆண்களும் இரண்டு பெண்களும் தகுதியாகி உள்ளார்கள். முதல் சீசனில் ஆண்(ஆரவ்) டைட்டில் வின்னர் ஆகியிருந்த நிலையில் இரண்டாவது சீசனில் பெண்(ரித்விகா) டைட்டில் வின்னர் ஆக வந்திருந்தார். எனவே, இந்த சீசனில் வெற்றி பெறப் போவது ஆணா இல்லை பெண்ணா என்ற மிகப் பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.

மேலும், கடந்த வாரம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றிய பல்வேறு போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் வந்து சென்ற வண்ணம் இருந்தனர். இந்த நிலையில் இன்றைய நிகழ்ச்சியில் வனிதா மற்றும் சாக்க்ஷி மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்றுள்ளனர். உள்ளே சென்றவுடன் வனிதா, ஷெரினிடம் தர்ஷன் வெளியேறியதற்கு நீ தான் காரணம் என்று கூறி ஷெரீனை அழ வைத்துள்ளார் .

-விளம்பரம்-

மேலும், உன்னை பற்றையும் தர்ஷனை பற்றியும் நான் சொன்ன விஷயத்தை மக்கள் முதலில் ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால், பின்னர் ஏற்று கொண்டு விட்டனர் என்று கூறியுள்ளார். இதனால் கடுப்பான சாக்க்ஷி, வணிதாவிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டுள்ளார். கடந்த சில முன்னர் தனது ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் செய்திருந்த வனிதா, ஷெரின் தான் தர்ஷன் வெளியேற்றத்திற்கு காரணம் என்றும், அவர் தான் தர்ஷனை வலையில் விழ வைத்தார் என்றும் கூறி இருந்தார்.

இதனால் கடுப்பான ரசிகர்கள் தர்ஷன் மற்றும் ஷெரின் மீது இருக்கும் கோபத்தில் இப்படி என்னவேண்டுமானாலும் சொல்லாதீர்கள் என்று வனிதாவை கடுமையாக விமர்சித்து இருந்தனர். ஆனால், இப்போது தான் சொன்ன கருத்தினை மக்கள் ஏற்றுக்கொண்டது போல வனிதா, ஷெரினிடம் கூறியுள்ளதை வைத்து பார்க்கும் போது ஷெரீனுக்கு வாக்கு விழ கூடாது என்பதற்காக வனிதா வேண்டுமென்றேயு இப்படி செய்கிறார் என்பது அப்பட்டமாக தெரிகிறது.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் உங்களுக்கு பிடித்தமான போட்டியாளர்களை காப்பாற்ற நீங்கள் ஓட்டிங் சிஸ்டம் மூலம் வாக்களிலாம் அல்லது மிஸ்டு கால் மூலம் வாக்களிக்கலாம். நீங்கள் வாக்களிக்க ‘ BIGG BOSS TAMIL VOTE‘ இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

Advertisement