‘தப்பு எந்த குடும்பத்துல நடக்கல, என்னால ரஜினி அங்கள் கூட அப்பா கூட பேசறது இல்ல’ – கண் கலங்கிய வனிதா. வீடியோ இதோ.

0
713
vanitha
- Advertisement -

தனது தந்தை தன்னை ஒதுக்கியது குறித்து வனிதா கண் கலங்க பேசிய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான வணிதாவிற்கும் அவரது குடும்பத்தாருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டு இருந்தது. இதனால் வனிதாவின் சகோதரர்களான அருண்விஜய், ப்ரீதா, ஸ்ரீதேவி, அனிதா, கவிதா என்று அனைவருமே வனிதாவிடம் பேசுவதை நிறுத்தி விட்டார்கள். இதனால் இரண்டு திருமணம் ஆன பின்னரும் வனிதா தனியாகத்தான் வாழ்ந்து வருகிறார். சமீபத்தில் பிரபல பத்திரிக்கை ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ள வனிதா பேசுகையில் நான் செய்த தவறை எண்ணி எனது குடும்பத்தார் அனைவருக்கும் ஒரேவிதமான கடிதம் எழுதி அதனை ஈமெயில் செய்தேன்.

-விளம்பரம்-

ஆனால், அதற்காக எனக்கு எந்த பதிலும் யாரிடமும் இருந்தும் வரவில்லை. என் அம்மா இருந்த வரை நான் என் குடும்பத்தாருடன் தொடர்பில் தான் இருந்தேன். ஆனால் என் அம்மா இறந்த பிறகு என் உடன் பிறந்த சகோதரர் மற்றும் சகோதரிகள் கூட என்னை கண்டுகொள்வது இல்லை.நான் என் தவறை எண்ணி மன்னிப்பு கேட்டும் அவர்கள் என்னை ஒரு பொருட்டாக எண்ணவில்லை என் அப்பா விஜயகுமாரும் சரி என் சகோதரரான அருண் விஜய்யும் சரி ஹீரோவாக இருந்து என்ன பிரயோஜனம்.

இதையும் பாருங்க : அல்டிமேட்டில் இருந்து இந்த வாரம் வெளியேறியது யார் தெரியுமா? (இவர போன வாரமே எதிர்பாத்துச்சி)

- Advertisement -

தன் குடும்பத்தினரை விலகிய வனிதா :

எத்தனையோ பேர் என்னை உங்கள் குடும்பத்தில் சேர்த்துக்கொள்ள கூறுகிறார்கள். இதனால் அவர்கள் உங்களை எப்படி கழுவி ஊற்றுகிறார்கள் என்பதும் நான் கண்டிருக்கிறேன். இப்போதும் நான் ஒரு தனியாக தைரியமான பெண்ணாக தான் இருந்து வருகிறேன். மேலும், நான் இப்போதும் வனிதா விஜயகுமார் தான் என் மகளும் விஜயகுமார் குடும்பத்தை சேர்ந்தவர்தான் என்பதை பெருமையாக சொல்வேன் என்று அந்த பேட்டியில் கூறி இருந்தார்.

வனிதாவும் விஜய் டிவி நிகழ்ச்சிகளும் :

வனிதாவிற்கும் சர்ச்சைகளுக்கும் என்றும் பஞ்சம் இருந்தது இல்லை. விஜய் டிவியில் பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் ரம்யா கிருஷ்ணனுடன் சண்டை போட்டு நிகழ்ச்சியில் இருந்து பாதியில் வெளியேற்றப்பட்ரார். சமீபத்தில் கூட வனிதா, பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். ஆனால், அங்கு தனுக்கு மரியாதை இல்லை என்றும் அங்கு நடக்கும் விஷயங்களில் தனக்கு உடன்பாடு இல்லை, அங்கு இருந்து தனது பெயரை கெடுத்துக்கொள்ள விரும்பவில்லை என்றும் வெளியேறி இருந்தார்.

-விளம்பரம்-

தன் தந்தை குறித்து பேசிய வனிதா :

தற்போது வனிதா பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். அந்த வகையில் பிரசாந்த் நடித்து வரும் ‘அந்தாதுன்’ படத்திலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இப்படி ஒரு நிலையில் பிரசாந்தின் தந்தை தியாகராஜனுடன் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்று இருந்தார் வனிதா அப்போது, தியாகராஜன், வனிதாவின் தந்தை குறித்து கேட்டு இருந்தார். அப்போது பேசிய வனிதா, தான் தனது அப்பாவுடன் இணைய நிறைய முயற்சிகள் எடுத்ததாகவும் ஆனால் சிலர் என்னை என் அப்பாவுடன் இணைய தடுக்கின்றனர் என்றும் அவர் கண்ணீர் மல்க கூறினார்.

வீடியோவில் 3 : 28 நிமிடத்தில் பார்க்கவும் :

ரஜினி சொல்லியும் கேட்காத விஜயகுமார் :

மேலும் கபாலி படம் ஷூட்டிங் போது ரஜினியிடம் தான் அப்பாவுடன் சேர்த்து வைக்குமாறு பேசியதாகவும் ஆனால் அதற்கும் பயன் இல்லை என்றும், அதற்கு பின்னர் ரஜினி கூட அப்பாவிடம் அவ்வளவாக பேசுவது இல்லை என்று கூறி இருக்கிறார் வனிதா. எந்த குடும்பத்தில் பிரச்சனை நடக்க, ஒரு குடும்பத்தின் தலைவர் தான் அதை சரி செய்ய வேண்டும். கண்டிப்பாக ஒரு நாள் நடக்கும் என்றும் கூறியுள்ளார் வனிதா.  

Advertisement