அவ கஞ்சா வியாபாரி, ரெண்டு முற டைவர்ஸ் பண்ணவ – போலீசில் புகார் அளித்த வனிதா பரபரப்பு பேட்டி.

0
1784
vanitha
- Advertisement -

பிக்பாஸ் வனிதா மற்றும் பீட்டர் அவளின் திருமண விஷயம் தான் கடந்த சில வாரமாக சமூக வலைத்தளத்தில் வைரலாக பேசப்பட்டு வரும் ஒரு விஷயமாக இருந்து வருகிறது.ரசிகர்களை தாண்டி வனிதாவின் திருமண விஷயத்தில் பல்வேறு பிரபலங்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதில் முக்கியமாக தயாரிப்பாளர் ரவீந்திரன் தொடர்ந்து வனிதா குறித்து பேட்டி அளித்து வருகிறார். அதேபோல தேவி என்பவர் தனது யூடியூப் சேனலில் தினமும் வனிதாவை திட்டி தீர்த்து வீடியோவை பதிவிட்டு வருகிறார்.

-விளம்பரம்-

இந்த ஒரு நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்றுள்ள வனிதா தன்னை விமர்சிப்பவர்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார். அதிலும் குறிப்பாக தயாரிப்பாளர் ரவீந்திரன், கஸ்தூரி, சூர்யா தேவி போன்றவர்களை குப்பை என்றும் நாய்கள் என்றும் தன்னை பற்றி பேசினால் செருப்பால் அடிப்பேன் என்றும் கண்டமேனிக்கு வெளுத்து வாங்கியிருக்கிறார் வனிதா. மேலும், என்னைப் பற்றி பேசியவர்கள் அனைவர் மீதும் நான் புகார் கொடுத்திருக்கிறேன் அவர்கள் மீது கண்டிப்பாக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும்கூறியிருந்தார்.

இதையும் பாருங்க : உங்கள விட உங்க அம்மா போஸ்ட்ஸ் நல்லா இருக்கு – தனது அம்மா குறித்து வந்த மீம். ஷேர் செய்த ஷிவானி.

- Advertisement -

குறிப்பாக சூர்யா தேவி குறித்து பேசிய வனிதா, அது ஒரு குப்பை என்று கூறியிருந்தார். மேலும், என்னை பற்றி பேச நீ யாரு, என்னை பற்றி பேச உனக்கு என்ன தகுதி இருக்கு. நீ என்னமோ ஜட்ஜ் மாதிரி பேசிட்டு இருக்க. உன் முகர கட்டைய பாக்கவா உன் வீடியோவ பாக்கறாங்க, அடுத்த மாசம் இதெல்லாம் ஜெயில்ல இருக்கும். இதெல்லாம் ஒரு குப்பை, அதெல்லாம் தூக்கி போடுங்க என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில் வனிதா சொன்னது போலவே, ரவீந்திரன் மீதும் சூர்யா தேவி மீதும் வனிதா புகார் அளித்துள்ளார். மேலும், சூர்யா தேவி குறித்து பேசிய வனிதா, அவள் ஒரு கஞ்சா வியாபாரி என்றும் அவளுக்கு ஏற்கனவே இரண்டு முறை விவாகரத்து ஆகிவிட்டது என்றும் கூறியுள்ளார் வனிதா. மேலும், அவர் மீது இன்னும் இரண்டு நாட்களில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் கூறியுள்ளதாக அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார் வனிதா.

-விளம்பரம்-
Advertisement