பிக் பாஸிலும் சரி, BB ஜோடியிலும் சரி என்ன இதுக்கு தான் கூப்பிட்டாங்க – BB ஜோடியில் இருந்து வெளியேற்றப்பட்ட போட்டியாளர் புலம்பல்.

0
966
bb
- Advertisement -

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள், சீரியல்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. குறிப்பாக சீரியல்களை விட ரியாலிட்டி நிகழ்ச்சிகளுக்கு என்று தான் ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. அந்த வகையில் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் நிகழ்ச்சி பிக் பாஸ் ஜோடிகள். முதல் சீசனை தொடர்ந்து தற்போது இரண்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. இது முழுக்க முழுக்க டான்ஸ் ரியாலிட்டி ஷோ.

-விளம்பரம்-

மேலும், இந்த நிகழ்ச்சி கடந்த மே மாதமே விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்கள் பங்கேற்று இருக்கிறார்கள். இந்த நிகழ்ச்சியில் தாமரை – பார்த்தசாரதி, சுஜா வருணி – சிவக்குமார், ஆர்த்தி – கணேஷ் என்ற ரியல் ஜோடிகளும், வேல்முருகன் – இசைவாணி, ஐக்கி பெரி – தேவ், அபிஷேக் – சுருதி, அமீர்-பவானி என்ற ரீல் ஜோடிகள் கலந்து கொண்டு தங்களுடைய திறமைகளை காட்டி வருகிறார்கள்.

இதையும் பாருங்க : அப்பா இருந்தும் இல்லாத மாதிரி தான், வறுமை நிலையிலும் அம்மாவின் ஆசைக்காக கலெக்டராக படித்து வரும் களவாணி சிறுமிக்கு தமிழ் நடிகர் உதவி.

- Advertisement -

பிபி ஜோடிகள் 2:

மேலும், இந்த நிகழ்ச்சி தொடங்கியதிலிருந்தே விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கின்றது. இந்த நிகழ்ச்சியை ராஜி பிரியங்கா, தொகுத்து வழங்கி வருகிறார்கள். ரம்யா கிருஷ்ணன், சதீஸ் இந்த நிகழ்ச்சிக்கு நடுவர்களாக பங்கேற்று வருகிறார்கள். இந்நிலையில் இந்த நிகழ்ச்சி தொடங்கி சில வாரங்கள் முடிவடைந்த நிலையில் எவிக்ஷன் தொடங்கி இருக்கிறது. இதில் முதல் ஜோடியாக டேனி – என்.எஸ்.கே.ரம்யா வெளியேறி இருந்தார்கள்.

இரண்டாவது எவிக்ஷனில் வெளியேறிய ஜோடி:

தற்போது இரண்டாவது எவிக்ஷன் நடந்து முடிந்துள்ளது. சில தினங்களுக்கு முன்பு தான் இதற்கான சூட்டிங் நடந்தத்து. இதில் நாட்டுப்புற பாடகர் வேல்முருகன்- இசைவானி ஜோடி வெளியேறி இருப்பதாக கூறப்படுகிறது. மேலும், இது தொடர்பாக வேல்முருகன் இடம் பேட்டி எடுத்தபோது அதில் அவர் கூறியிருந்தது. பிக் பாஸ் ஜோடிகள் என்று சொல்லிக் கூப்பிடும் போதே எப்படியும் முதல் இரண்டு வாரத்தில் வெளியேற்றி விட போகிறார்கள் என்று அவர்களிடமே நேரடியாக சொன்னேன்.

-விளம்பரம்-

வேல்முருகன் அளித்த பேட்டி:

அது இப்போ நடந்து விட்டது. அவ்வளவு தான் பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் சரி, இப்ப இந்த நிகழ்ச்சியிலும் சரி ஒரு என்டர்டைன்மென்ட்காக தான் என்னைக் கூப்பிட்டு இருக்காங்க. ஆனால், நான் எப்பவும் எதையுமே சீரியஸாக எடுத்துக்கொள்வதில்லை. அது என் சுபாவம். இந்த இரண்டு அனுபவமே எனக்குக் கிடைத்த வாய்ப்பாக பார்த்தேன். அதில் என்னால் என்ன செய்ய முடியுமோ? அதை முழு ஈடுபாட்டுடன் செய்திருக்கிறேன்.

நிகழ்ச்சி குறித்து வேல்முருகன் சொன்னது:

இந்த நிகழ்ச்சி கூட பாடகரான என்னை ஆட வைத்தது இல்லையா? அந்த கோணத்தில் நமக்கு சாதகமாக எடுத்துக்க வேண்டியது தான் என்று கூறியிருந்தார். இப்படி இவர் அளித்திருக்கும் பேட்டி தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. மேலும், இவர் வெளியேறிய எபிசோடு அடுத்த வாரம் ஒளிபரப்பாகும் என்று கூறப்படுகிறது. நிகழ்ச்சியில் வேல்முருகன்-இசைவாணி என்ன சொல்லி இருக்கார்கள் என்பதை பொறுத்து இருந்து பார்க்கலாம்.

Advertisement