மனைவின் பிறந்தநாளுக்கு வேல் முருகன் கொடுத்த Costly Gift – என்ன தெரியுமா ? வைரலாகும் வீடியோ.

0
1688
Velumurugan
- Advertisement -

பாடகர் வேல்முருகன் தன்னுடைய மனைவியின் பிறந்தநாளுக்கு தக்காளியை பரிசாக அளித்திருக்கும் தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தென்னிந்திய சினிமா உலகில் மிக பிரபலமான பின்னணி பாடகராக திகழ்பவர் வேல்முருகன். இவர் விருதாச்சலம் பகுதியை சேர்ந்தவர். இவர் பின்னணி பாடகர் மட்டுமில்லாமல் நடிகர் ஆவார். ஆரம்பத்தில் இவர் நாட்டுப்புற பாடகராகத் தான் மக்கள் மத்தியில் பரிச்சயமானார். அதற்குப் பிறகு தான் இவர் சினிமாவில் களம் இறங்கினார்.

-விளம்பரம்-

இவர் சுப்பிரமணியபுரம் படத்தில் ‘மதுர குலுங்க’ என்ற பாடலின் மூலம் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானார். ஜேம்ஸ் வசந்தனால் தான் இவருடைய திரை பயணத்திற்கு ஒரு திருப்புமுனையாக இருந்தது என்று சொல்லலாம். அதனைத் தொடர்ந்து இவர் நாடோடிகள் படத்தில் ஆடுங்கடா மச்சான் ஆடுங்கடா, ஆடுகளம் படத்தில் ஒத்த சொல்லால, கழுகு படத்தில் ஆம்பளைக்கும் பொம்பளைக்கும் போன்ற பல சூப்பர் ஹிட் பாடல்களை பாடி அசத்தி இருக்கிறார்.

- Advertisement -

வேல்முருகனின் திரைப்பயணம்:

கடைசியாக இவர் ஜி வி பிரகாஷ் இசையில் தனுஷ் நடிப்பில் வெளிவந்து பிளாக் பஸ்டர் ஹிட் கொடுத்த அசுரன் படத்தில் கத்தரி பூவழகி என்ற பாடலை பாடியிருந்தார். இந்த பாடலுக்காக இவர் பல விருதுகளை வாங்கி இருந்தார். தற்போதும் இவர் பல படங்களில் கமிட்டாகி பாடுவது மட்டும் இல்லாமல் நடித்து கொண்டும் இருக்கிறார். அதுமட்டுமில்லாமல் 2020 ஆம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் போட்டியாளராக வேல் முருகன் கலந்து கொண்டிருந்தார்.

வேல்முருகன் குடும்பம்:

இந்த நிகழ்ச்சியின் மூலம் இவர் மக்கள் மத்தியில் படு பேமஸ் ஆனார். ஆனால், இவரால் நீண்டநாள் பிக்பாஸ் வீட்டில் நீடித்திருக்க முடியவில்லை. அதற்கு பிறகு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை 2 என்ற ரியாலிட்டி நிகழ்ச்சியில் தன் மனைவியுடன் பங்குபெற்று இருந்தார். இந்த நிகழ்ச்சியில் இவருடைய திறமை, நடிப்பெல்லாம் மக்கள் மத்தியில் பாராட்டுக்குரிய வகையில் இருந்தது. இதனிடையே வேல்முருகன் அவர்கள் தன்னுடன் படித்த கலா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

-விளம்பரம்-

வேல்முருகன் மகள் செய்த கின்னஸ் சாதனை:

இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளார்கள். அதில் மூத்த மகள் பெயர் ரக்ஷனா. இவர் ஒரு நிமிடத்தில் 51 பல்கலைக்கழகத்தின் சின்னங்களை அடையாளம் கண்டு சொல்லியிருக்கிறார். இதனால் இவர் கின்னஸ் உலக சாதனை பட்டியலில் இடம் பிடித்து இருக்கிறார். இதனால் பலரும் வேல்முருகனை பாராட்டி வாழ்த்து தெரிவித்து இருந்தார்கள். தற்போதும் இவர் நிகழ்ச்சி, சினிமா என்று பிசியாக இருக்கிறார். இந்த நிலையில் வேல்முருகன் தன்னுடைய மனைவிக்கு பரிசளித்திருக்கும் தகவல் தான் இணையத்தில் வைரலாகி வருகிறது.

மனைவியின் பிறந்தநாளுக்கு கொடுத்த பரிசு :

அதாவது, வேல்முருகன் மனைவி நேற்று பிறந்தநாளை கொண்டாடி இருந்தார். அதற்கு அவர் தக்காளியை பரிசாக அளித்து இருக்கிறார். காரணம், தற்போது தக்காளியின் விலை தங்கத்தின் விலைக்கு நிகராக விற்கப்படுவதால் தக்காளியை பரிசாக அளித்திருக்கிறார். தற்போது வேல்முருகன் தன் மனைவிக்கு தக்காளி அளித்த புகைப்படம் தான் இணையத்தில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. சில மாதங்களாகவே இந்தியா முழுவதும் தக்காளியின் விலை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதனால் ஏழை எளிய மக்கள் அதிகமாக பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இதற்கு இந்திய அரசாங்கம் ஒரு நல்ல முடிவு எடுக்க வேண்டும் என்று மக்கள் சார்பில் கோரிக்கை வைத்து வருகின்றார்கள்.

Advertisement