Family Round ஆல் எலிமினேஷனில் ஏற்பட்ட மாற்றம் – இந்த வாரம் வெளியேற போவது இவர் தானா?

0
586
- Advertisement -

தமிழில் அனைவரும் எதிர்பார்த்த பிக் பாஸ் 7 நிகழ்ச்சி தொடங்கி 75 நாட்களை கடந்து இருக்கிறது. இந்த சீசனில் கூல் சுரேஷ், பூர்ணிமா ரவி, ரவீனா தாஹா, சுரேஷ், ஆண்டனி, நிக்சன், சரவணா விக்ரம், மாயா எஸ் கிருஷ்ணா, விஷ்ணு, ஜோவிகா, அக்ஷ்யா உதயகுமார், மணிசந்திரா, வினுஷா தேவி, யுகேந்திரன் வாசுதேவன், விசித்ரா, பவா செல்லதுரை, விஜய் வர்மா என்று பலர் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்று இருந்தார்கள். இதுவரை இதில் பவா, வினுஷா மற்றும் யுகேந்திரன், அன்னபாரதி, பிரதீப், ஐஷு, கானா பாலா, அக்ஷயா, பிராவோ. ஜோவிகா, கூல் சுரேஷ் ஆகியோர் வெளியேறி இருக்கின்றனர்.

-விளம்பரம்-

கடந்த வாரம் கூல் சுரேஷ் சுவர் ஏறி குதித்து பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற முயன்றது பரபரப்பை ஏற்படுத்தி இருந்ததது. கூல் சுரேஷ் இப்படி செய்ததால் இந்த வாரம் பிக் பாஸ் எவிக்ஷனில் குழப்பம் ஏற்பட்டது. இதன் காரணமாகவே அவரை சேனலே வெளியில் அனுப்பி இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. பொதுவாக சனிக்கிழமை எலிமினேஷன் நடந்தாலே அது டபுள் ஏவிக்ஷனின் அறிகுறி தான். இதனால் நிக்சன் வெளியேறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கடந்த ஞாயிற்று கிழமை நிகழ்ச்சியில் யாரும் வெளியேறவில்லை.

- Advertisement -

கடந்த வாரம் கூல் சுரேஷ் வெளியேறிய நிலையில் தற்போது அர்ச்சனா, தினேஷ், விசித்ரா, விஜய் வர்மா, மணி, ரவீனா, மாயா, சரவண விக்ரம், பூர்ணிமா, விஷ்ணு ஆகிய 10 பேர் மட்டும் பிக் பாஸ் வீட்டில் இருக்கின்றனர். இந்த வாரம் பிக் பாஸ் ரசிகர்கள் மற்றும் போட்டியாளர்கள் அனைவரும் எதிர்பார்த்த Family Round துவங்கி இருக்கிறது. இதில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் அர்ச்சனா, பூர்ணிமா, விஜய் வர்மா, விக்ரம் ஆகியோரின் குடுமபத்தினர் வந்து இருந்தனர்.

அதே போல நேற்றய நிகழ்ச்சியில் விக்ரம் பூர்ணிமா, மாயா ரவீனா ஆகியோரின் குடுமபத்தினர் உள்ளே சென்று இருந்தனர். இதில் மணியின் அம்மா, ரவீனாவிடம் பேசிய போது அவரது பிறந்த தேதியை கேட்டு இருந்தார். அப்போது உனக்கும் அவனுக்கும் 10 ஆண்டுகள் வித்யாசம் என்று கூறி இருந்தார். அதே போல நேற்று வந்த ரவீனாவின் சித்தி மற்றும் தம்பி மணி – ரவீனாவை கடுமையாக சாடி இருந்தனர்.

-விளம்பரம்-

இப்படி ஒரு நிலையில் இந்த வார நாமினேஷன் முடிவுகள் வெளியாகி இருக்கிறது. இந்தவாரம் நடைபெற்ற நாமினேஷனின் ரவீனா, விக்ரம், விசித்ரா ஆகிய மூவர் மட்டும் தான் நாமினேஷனில் இடம்பெற்று இருந்தனர். இதில் விசித்ரா வெளியேற நிச்சயம் வாய்ப்பு இல்லை. இதனால் ரவீனா மற்றும் விக்ரம் ஆகிய இருவரில் தான் யாராவது வெளியேறுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. இப்படி ஒரு நிலையில் இந்த வாரம் விக்ரம் வெளியேறி இருக்கிறாராம்.

இந்த வாரம் நிச்சயம் ரவீனா தான் வெளியேறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், Family Roundல் ரவீனா – மணி விஷயத்தை ஊதி பெருசாக்கி பரபரப்பை ஏற்படுத்தியதால் மணி – ரவீனா இருவரும் இனி வரும் நாட்களில் என்ன செய்ய போகிறார்கள் என்ற ஒரு ஆர்வத்தை தூண்டி இருக்கின்றனர். இதனால் அவர்கள் இனி வரும் நாட்களில் கண்டட் தான். ஆனால், விக்ரமை வைத்து இனி எந்த கன்டன்டையும் தேர்த முடியாது என்பதால் அவரை இந்த வாரம் வெளியேற்றி இருக்கின்றனர்.

Advertisement