என்ன அக்கானு கூப்பிட்டான் ஆனா ஒரு அக்காவா இப்படி தான் பேசுவயா? – நிக்ஸன் லட்சணத்தை சொன்ன வினுஷா

0
430
- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு வெளியே வந்து வினுஷா அளித்திருக்கும் பேட்டி வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழில் பிக் பாஸ் 7 நிகழ்ச்சி தற்போது ஐந்தாவது வாரம் சென்று கொண்டு இருக்கிறது. இந்த சீசனில் கூல் சுரேஷ், பூர்ணிமா ரவி,ரவீனா தாஹா, பிரதீப் ஆண்டனி, நிக்சன், சரவணா விக்ரம், மாயா எஸ் கிருஷ்ணா, விஷ்ணு, ஜோவிகா, அக்ஷ்யா உதயகுமார், மணிசந்திரா, வினுஷா தேவி, யுகேந்திரன் வாசுதேவன், விசித்ரா, பவா செல்லதுரை, விஜய் வர்மா என்று பலர் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்று இருந்தார்கள்.

-விளம்பரம்-

மேலும், இதுவரை நிகழ்ச்சியில் இருந்து அனன்யா, பவா, விஜய் வர்மா, யுகேந்திரன், வினுஷா ஆகியோர் வெளியேறி இருக்கிறார்கள். அதோடு கடந்த வாரம் 5 Wild கார்டு போட்டியாளர்களாக கானா பாலா, அர்ச்சனா, பிராவோ, தினேஷ் மற்றும் அன்னபாரதி ஆகியோர் பிக் பாஸ் வீட்டிற்கு வந்து இருக்கிறார்கள். தற்போது இரண்டு வீட்டிலும் கலவரம்,சண்டை வெடித்து கொண்டு இருக்கிறது. மேலும், இந்த நிகழ்ச்சியில் பரிச்சயமான நபர்களில் ஒருவர் தான் வினுஷா தேவி. இவர் இதற்கு முன்பு விஜய் டிவியில் ஒளிபரப்பாகி சூப்பர் ஹிட் கொடுத்த பாரதி கண்ணம்மா சீரியலின் முதல் பாகத்திலும், இரண்டாம் பாகத்திலும் கதாநாயகியாக நடித்திருந்தார்.

- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சியில் வினுஷா:

அதற்குப்பின் இவர் ஒரு சில ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் பங்கேற்று இருந்தார். அதேபோல் சமீபத்தில் வினுஷா நடித்த N4 படம் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தது. இதை அடுத்து வினுஷா பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து இருந்தார். இந்த நிகழ்ச்சி ஆரம்பத்திலிருந்து வினுஷா தேவி நன்றாக தான் விளையாடி வந்தார். ஆனால், இவர் பெரிதாக மற்ற போட்டியாளர்களுடன் சர்ச்சையில் சிக்கவில்லை. தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருந்தார். இதனால பிக் பாஸ் கடுப்பாகி நீங்கள் ஏதாவது சுவாரசியமாக செய்யவில்லை என்றால் உங்களை சிறையில் அடைத்து விடுவேன் என்றெல்லாம் வார்னிங் கொடுத்து இருந்தார்.

வினுஷா அளித்த பேட்டி:

பின் எப்படியோ வினுஷா தாக்குபிடித்து நான்காவது வாரம் வரை வந்தார். மேலும், கடந்த வாரம் நாமினேஷனில் குறைந்த வாக்குகள் பெற்று வினுஷா தேவி வெளியேறி இருந்தார். இந்த நிலையில் நிகழ்ச்சிக்கு பிறகு வினுஷா தேவி பேட்டி அளித்திருக்கிறார். அதில் அவர், இந்த முறை பிக் பாஸ் வீட்டிற்குள் நடப்பது எனக்கு பிடிக்கவில்லை. மத்த சீசன்களுடன் ஒப்பிட்டு பார்க்கும்போது இந்த முறை பிக் பாஸ் வீட்டில் நடப்பது பிடிக்கவில்லை. காரணம், உனக்கு இது வராது. உன்னால் செய்ய முடியாது. நீ இப்படித்தான் என்று ரொம்ப டாமினேட் செய்கிறார்கள்.

-விளம்பரம்-

பிரதீப் குறித்து சொன்னது:

மற்ற சீசன்களிலும் இந்த மாதிரி இருந்தது. ஆனால், அது எப்போவது தான் நடக்கும். இந்த முறை நிகழ்ச்சியில் இதையே ஒரு டார்கெட் ஆக வைத்து செய்கிறார்கள். குறிப்பாக, இதை அதிகமாக பிரதீப், மாயா, பூர்ணிமா ஆகியோர் செய்கிறார்கள். இது எனக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. நான் குரல் கொடுக்க வேண்டிய இடத்தில் குரல் கொடுத்து இருக்கிறேன். நியாயமாக நான் நின்று பேசி இருந்தேன். ஆனால், அதை காண்பித்தார்களா? என்று தெரியவில்லை. நிகழ்ச்சியில் பிரதீப் எப்ப பாத்தாலும் கொன்னுடுவேன், தூக்கிடுவேன் என்று பேசுவதெல்லாம் மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

நிக்சன் குறித்து சொன்னது:

ஒரு சிலரின் கைத்தட்டலால் தான் பிரதீப் உள்ளே இன்னும் இருந்து கொண்டிருக்கிறார். அதேபோல் நிக்சன் என்னைப் பற்றி பாடி ஷேமிங் செய்தது எனக்கு சுத்தமாகவே பிடிக்கவில்லை. அவர் முதலில் என்னை அக்கா என்று தான் அழைத்தான். இப்படி ஒருவரை பாடி ஷேமிங் செய்வது தவறான ஒன்று. அவர் முதல் மூன்று இடம் பிடிப்பார் என்று நினைத்தேன். ஆனால், இப்படி ஒருவரை பாடி ஷேமிங் செய்வதன் மூலம் இவர் நீண்ட நாட்கள் இருக்க மாட்டார் என்று பல விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார்.

Advertisement