இறுதியில் 3 அணியாக பிரிந்த வி ஆர் தி பாய்ஸ் கேங்.. கவலையில் ரசிகர்கள்..

0
27873
Bigg-bOss
- Advertisement -

தமிழில் விஜய் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி அனைவரும் எதிர்பார்த்து கொண்டிருந்தது போல் சிறப்பாக முடிவடைந்தது. மேலும், பிக் பாஸ் சீசன் 3ன் டைட்டில் வின்னர் முகென் தான் என்று அறிவித்தார்கள். பிக்பாஸ் வீட்டிற்குள் வரும் போட்டியாளர்கள் ஆரம்பத்தில் அனைவரும் ஒன்றாகவும், நட்பாகவும், விட்டுக் கொடுத்தும் தான் இருப்பார்கள் . ஆனா, போக போக அவங்க என்ன செய்கிறார்கள் என்று அறியாது ஒருவருக்கு ஒருவர் மாத்தி மாத்தி சண்டை போட்டும் வருவார்கள். இதுதான் வழக்கமான பழக்கம். அதிலும் இந்த பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் ரத்தமும் சதையுமாக இருந்த வி ஆர் தி பாய்ஸ் கேங் பிக் பஸ் முடிந்தும் மூன்று, நான்கு அணிகளாக பிரிந்து கொண்டாடி வருகின்றனர். இந்த நிகழ்வு ரசிகர்களிடையே அதிர்ச்சியையும், கவலையையும் ஏற்படுத்தி வருகிறது.

-விளம்பரம்-
Sandy

அது மட்டும் இல்லாமல் எல்லாருமே எதிர்பார்த்தது கவின், லாஸ்லியா காதல் குறித்து தான். ஆனால், கவின், லாஸ்லியா ஆகிய ரெண்டு பேரும் சேர்ந்து போய் யாரையுமே சந்திக்கவில்லையாம். இதுதான் ரொம்ப கஷ்டமா இருக்கு என ரசிகர்கள் கூறி வருகின்றனர். தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சி மத்த இரண்டு சீசன்களை விட இந்த முறை ஒளிபரப்பான சீசன் 3 நிகழ்ச்சி மிக பரபரப்பாகவும், பல எதிர்பார்ப்புகளுடனும் , பல திருப்பங்களுடனும் இருந்தது. இந்த பிக்பாஸ் நிகழ்ச்சிகளில் அந்த அளவிற்கு கஷ்டமான டாஸ்கள் இல்லை என்றாலும், அவர்களுடைய சண்டைகளும், காதல்களும் தான் மக்களிடையே பிரபலமாக ஆனது . இன்னும் சொல்லப்போனால் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி இந்த அளவிற்கு பிரபலம் ஆவதற்கு காரணம் வனிதா, சாண்டி, கவின், லாஸ்லியா தாங்க.

இதையும் பாருங்க : இறுதியில் தாயகம் திரும்பிய வெற்றி மகன் முகென்.. விமானத்தில் எடுத்துக்கொண்ட புகைப்படம் இதோ..

- Advertisement -

இதோடு ஒரு கட்டத்துக்கு மேல போட்டியாளர்கள் மத்தியில் கலவர போர் நடந்தது கூட சொல்லலாம். ஏனெனில்அந்த அளவிற்கு வெறித்தனமாக சண்டை போட்டார்கள். இதனால் மதுமிதா தன்னுடைய கையை அறுத்துகிட்டு பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார். பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சி இறுதி கட்டத்தை நோக்கி செல்லும் வேளையில் அனைத்து போட்டியாளர்களும் ஒருத்தருக்கு ஒருத்தர் பேசிக்கொண்டு சமாதானமாகவும் போனார்கள். இந்நிலையில் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்து உடன் போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டில் இருந்ததை விட தற்போது பல அணிகளாக பிரிந்து உள்ளனர்.

முதலில் பாய்ஸ் அணி தான் தனியாக தெரியவந்தது. இந்த அணியில் கவின், சாண்டி,முகென் ,தர்ஷன், லாஸ்லியா என்று இருந்து வந்தனர். இந்த அணியில கடைசிவரை ஷெரீனை சேர்த்துக்கவே இல்லைங்க. அவங்க அதற்கு பதிலாக லாஸ்லியாவை சேர்த்தாங்க. அது மட்டும் இல்லைங்க இவங்க ‘குருநாதா’ என்ற பெயரில் டீசர்ட் போட்டுக்கிட்டு பிக்பாஸ் வீட்ல பயங்கர சேட்டை பண்ணாங்க கூட சொல்லலாம். சேட்டையோட மட்டும் விடல அந்த பாய்ஸ் காங் பாடல்களை பாடியும், ரசிகர்களை தெறிக்கவிட்டாங்க .மேலும், பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்தவுடன் சாண்டி பாய்ஸ் அணிக்கு விருந்து கொடுத்திருந்தார். இந்த விருந்தில் கவின்,முகென் , தர்ஷன் வந்தார்கள். ஆனால் லாஸ்லியா மட்டும் வரவே இல்ல.

-விளம்பரம்-

ஆனா, எல்லாருமே எதிர்பார்த்தது கவின் ,லாஸ்லியா வெளியே வந்தவுடன் நேரில் சந்தித்து தங்களுடைய காதலை உறுதி செய்து பேசுவாங்க என்று தான். ஆனால், அவர்கள் இருவரும் அந்த மாதிரி எந்த ஒரு நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளவே இல்லைங்க. இதுகுறித்து லாஸ்லியாவிடம் கேட்டபோது நான் என்னுடைய ஃபேமிலியோட நேரம் ஒதுக்கி இருந்தேன். அதனால தான் என்னால பாய்ஸ் விருந்துக்கு வர முடியவில்லை.மேலும், இந்த விருந்தில் லாஸ்லியாவுக்கு பதில் அபிராமி கலந்து கொண்டார் என்ற தகவலும் வெளியானது. ஆனால், லாஸ்லியா சாண்டியின் நடன பள்ளிக்கு சென்றிந்தார். அங்கு லாஸ்லியா போட்ட குத்தாட்டம் வீடியோ ஒன்று இணையங்களில் வைரல் ஆகி உள்ளது.

இதனைத்தொடர்ந்து வனிதா வீட்டில் நடந்த ஒரு விசேசத்திற்கும் லாஸ்லியா போயிருந்தாங்க. லாஸ்லியா மட்டும் இல்லைங்க சேரன், பாத்திமா பாபு ஆகியோர்களும் இந்த விஷேசத்தில் கலந்து கொண்டார்கள். மேலும் லாஸ்லியா, அபிராமி இருவரும் தனியாக செம்ம ஃபன் பண்ணிட்டு வந்து இருக்கிறார்களாம். இவங்களை போல சாக்ஷியும்,ஷெரினும் கூட தனியாக ஊர் சுற்றி வருகிறார்கள். மேலும், சாக்ஷியும்,ஷெரினும் சேரனின் வீட்டிற்கு நேரில் சென்று சந்தித்து உள்ளார்கள். இது தொடர்பான புகைப்படங்கள் ,வீடியோக்களையும் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டார்கள். இது எல்லாம் வச்சு பார்த்தா பிக்பாஸ் குடும்பம் வெவ்வேறு அணியாகப் பிரிந்து கொண்டாடி வருகின்றனர். ஆகமொத்தம் எல்லாருமே சேர்ந்து கொண்டாடான மாதிரி ஒரு நிகழ்ச்சி கூட இல்லைங்க .இதனால்,ரசிகர்கள் கவலையில் உள்ளனர்.

Advertisement