என்னப்பா ஆச்சி இவங்க அர்மிகு எல்லாம், ஓட்டிங்கில் டாப் இடத்தில் வந்த நபர், வெளியேறிய போட்டியாளர்.

0
501
bb
- Advertisement -

பிக் பாஸ் சீசன் 6ல் எட்டாவது வாரத்தில் எலிமினேஷன் ஆகி இருக்கும் நபர் குறித்த தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. விஜய் டிவியில் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி தொடங்கி தற்போது 50 நாட்களை கடந்து இருக்கிறது. இந்த முறை நிகழ்ச்சியை விறுவிறுப்பாக கொண்டு செல்ல பிக் பாஸ் பல மாற்றங்களை செய்து இருக்கிறார். இதனால் நிகழ்ச்சி தொடங்கிய முதல் நாளில் இருந்தே போட்டியாளர்களுக்கு டாஸ்க் கொடுக்கப்பட்டு சண்டை தொடங்கி இருக்கிறது.

-விளம்பரம்-

மேலும், இந்த நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் ஜிபி முத்து, அசீம் , அசல், ராபர்ட், ராமசாமி, ஏடிகே, ஜனனி, அமுதவாணன், விஜே மஹேஸ்வரி, விஜே கதிரவன், ஆயிஷா, விஜே ரக்சிதா, மணிகண்டன், மெட்டி ஒலி சாந்தி, விக்ரமன், குயின்ஸி மற்றும் நிவாஷினி, சிவின் கணேசன் என 20 பேர் கலந்து கொண்டு இருக்கிறார்கள். பின் முதல் வாரத்திலேயே வைல்ட் கார்ட் எண்ட்ரியாக மைனா நந்தினி வந்து இருந்தார்.

- Advertisement -

பிக் பாஸ் சீசன் 6:

வழக்கம் போல் போட்டியாளர்கள் மத்தியில் கலவரம், சண்டைகளும் தொடங்கி நிகழ்ச்சி பரபரப்பாக சென்று கொண்டு இருக்கிறது. இதுவரை இந்த நிகழ்ச்சியில் இருந்து ஜி.பி.முத்து, மெட்டிஒலி சாந்தி, அசல் கோளாறு, ஷெரினா, மகேஸ்வரி, நிவாஷினி, ராபர்ட் ஆகியோர் வெளியேறி இருக்கிறார்கள். 21 போட்டியாளர்களில் இருந்து 7 போட்டியாளர்கள் போக தற்போது 14 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் விளையாடி வருகின்றனர்.

பழங்குடியினர் மற்றும் ஏலியன் டாஸ்க் :

இந்த வாரம் அசீம் கேப்டன் பதவியை வென்றார். அசீம் கேப்டன் ஆன உடனே பல அதிரடி மாற்றங்கள் செய்து இருந்தார். இது ரசிகர்கள் மத்தியிலும் வரவேற்கப்பட்டது. இந்த வாரம் பழங்குடியினர் மற்றும் ஏலியன் டாஸ்க் கொடுக்கப்பட்டிருக்கிறது. கடந்த சீசனில் இந்த டாஸ்கின் போது போட்டியாளர்கள் மத்தியில் கடுமையான சண்டைகள் ஏற்பட்டிருந்தது. தற்போது அதை தான் பிக் பாஸ் எதிர்பார்த்து இந்த முறை கொடுத்து இருக்கிறார்.

-விளம்பரம்-

நாமினேசன் பட்டியல்:

பழங்குடியினரிடம் இருக்கும் செல்வத்தை ஏலியன்கள் திருட வேண்டும். ஏலியன்கள், பழங்குடியினரை எப்படி வேண்டுமானாலும் கோபப்படுத்தலாம் என்று பிக் பாஸ் கூறி இருக்கிறார். இந்த டாஸ்க் கொடுக்கப்பட்டதிலிருந்து போட்டியாளர்கள் மத்தியில் கடுமையான வாக்குவாதம் சென்று கொண்டிருக்கின்றது. இந்நிலையில் இந்த வாரம் நிகழ்ச்சியை விட்டு வெளியேற இருக்கும் நபர் குறித்த தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

வெளியேறிய நபர்:

அதாவது, இந்த வாரம் நாமினேசன் பட்டியலில் கதிரவன், ஜனனி, ரக்ஷிதா, மைனா, தனலட்சுமி, குயின்சி பெயர் இடம் பெற்று இருக்கிறது. இதில் கதிரவன் அதிக வாக்குகள் பெற்று தப்பித்து விட்டார். இவரை அடுத்து ஜனனி, ரக்ஷிதா வாக்குகள் பெற்று இருக்கிறார்கள். ஆனால், மக்கள் மத்தியில் இவர்களுக்கு ஆதரவு குறைந்து இருக்கிறது. மேலும், இந்த நிகழ்ச்சியில் குறைந்த வாக்குகள் பெற்றது குயின்சி வெளியேற இருக்கிறார்.

Advertisement