சந்தானம் படத்தில் தனக்கு நேரந்த பாலியல் தொல்லை – யாஷிகா கிளப்பிய புதிய சர்ச்சை.

0
190
- Advertisement -

சந்தானம் படத்தினால் தனக்கு ஏற்பட்ட பாலியல் சீண்டல்கள் குறித்து மனம் திறந்து நடிகை யாஷிகா ஆனந்த் அளித்து இருக்கும் பேட்டி தான் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தமிழ் திரைப்பட உலகில் நுழைந்த குறுகிய காலத்திலேயே இளைசுகளின் மனதை கொள்ளை அடித்தவர் நடிகை யாஷிகா ஆனந்த். இவர் டெல்லியை சேர்ந்தவர். இவருக்கு சிறுவயதில் இருந்தே நடிப்பின் மீது அதிக ஆர்வம். இதனால் இவர் மாடலிங்கில் நுழைந்தார்.

-விளம்பரம்-

அதற்குப் பிறகு தான் இவர் படங்களில் படங்களில் நடிக்க ஆரம்பித்தார். அந்த வகையில் இவர் துருவங்கள் பதினாறு என்ற தமிழ் படத்தின் மூலம் தான் சினிமா துறையில் அறிமுகமானார். பின்னர் கௌதம் கார்த்திக் நடிப்பில் வெளியான இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற அடல்ட் காமெடி படத்தின் மூலம் யாஷிகா இளம் ரசிகர்கள் மனதில் மிகப் பெரிய அளவில் பிரபலமானர். அதோடு இவர் நடித்த படங்கள் எல்லாமே ஹாட்டான கவர்ச்சியான கதாபாத்திரங்கள் தான்.

- Advertisement -

யாஷிகா திரைப்பயணம்;

பின் இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெற்று இருந்தார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் இவர் பட்டத்தை வெல்லவில்லை என்றாலும் தனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொண்டு இளம் ரசிகர்களை கவர்ந்தார். அதற்கு முக்கிய காரணமே அம்மணியின் கவர்ச்சி தான். பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் இவருக்கு எக்கச்சக்க ரசிகர்கள் கூட்டம் உருவாகியது. மேலும், பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பின்னர் இவர் ஏகப்பட்ட படங்களில் கமிட்டாகி இருந்தார்.

யாஷிகா ஏற்பட்ட விபத்து;

ஆனால், சில வருடங்களுக்கு முன் ஏற்பட்ட ஒரு விபத்தில் யாஷிகா ஆனந்த் படுகாயகங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று இருந்தார். விபத்திற்குப் பின்னர் யாஷிகாவால் சரியாக நடக்க முடிய வில்லை. கடந்த ஆண்டு தான் யாஷிகா விபத்தில் இருந்து தேறி மீண்டும் படங்களில் நடிக்க துவங்கி இருக்கிறார். யாஷிகாவின் நடிப்பிற்கு இருக்கும் ரசிகர்களை விட இன்ஸ்டாகிராமில் இவர் பதிவிடும் கவர்ச்சியான புகைப்படங்களுக்கு இருக்கும் ரசிகர்கள் தான் அதிகம்.

-விளம்பரம்-

யாஷிகா நடிக்கும் படங்கள்;

தற்போது யாஷிகா இவன் தான் உத்தமன், ராஜ பீமா, பாம்பாட்டம், சல்பர், சிறுத்தை சிவா போன்ற பல படங்களில் கமிட்டாகி பிஸியாக நடித்து வருகிறார். இந்த படங்கள் எல்லாமே இந்த ஆண்டுக்குள்ளே அடுத்தடுத்து வெளியாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் யாஷிகா சமீபத்தில் அளித்த பேட்டியில், நான் பிரபல நடிகர் சந்தானம் நடித்த இனிமேல் இப்படித்தான் ஒரு படத்தில் நடிக்க கமிட் ஆகி இருந்தார்.

யாஷிகாவுக்கு நடந்த தொல்லை;

இந்த படத்தின் படப்பிடிப்பு பாண்டிச்சேரியில் நடந்தது. அப்போது என்னை ஒருவர் ரொம்ப தவறாக தொட்டு பாலியல் தொல்லை கொடுத்திருந்தார். அப்போது எனக்கு 13 வயது. அந்த வயதில் எனக்கு குட் டச், பேட் டச்சா என்று கூட தெரியவில்லை. ஆனால், அது தவறு என்று மட்டும் எனக்கு புரிந்து அவரை நான் எட்டி உதைத்து விட்டேன். அதனால் அவர் கீழே விழுந்தார். அதற்கு பிறகு தான் நான் அந்த படத்தில் இருந்து விலகி விட்டேன். பெண்களுக்கு எல்லா விஷயத்திலும் தைரியமாக இருக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார்.

Advertisement