கவலை வேண்டாம், துருவங்கள் 16 போன்ற படங்களில் ஓரமாக நடித்து பின்னர் ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ படத்தில் தனது கவர்ச்சியான நடிப்பின் மூலம் பல ரசிகர்கள் மனதை கொள்ளைகொண்டவர் நடிகை யாஷிகா ஆனந்த். பின்னர் கடந்த ஆண்டு பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் பங்குபெற்றார்.
இந்த நிகழ்ச்சியில் பங்குபெற்ற போது நடிகர் மஹத்துடன் காதலில் விழுந்தார். ஆனால், மஹத் பராச்சி மிஸ்ரா என்ற மாடல் அழகியை காதலித்து வந்ததால் யாஷிகாவின் ஆசை வீணாக போனது. இருப்பினும் இவர்கள் இருவருக்கும் ஒரு விதமான ரொமான்ஸ் ஓடிக்கொண்டு தான் இருந்தது.
இதையும் படியுங்க : கணவருடன் நீச்சல் உடையில் ஓய்வெடுத்த புகைப்படத்தை பதிவிட்ட சமந்தா.! இப்போ கூட இப்படியா.!
அதே போல இவர்கள் இருவரும் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஜோடி நிகழ்ச்சியில் நடுவார்களாகவும் பங்கு பெற்றனர். தற்போது ஒரு படத்தில் கூட ஜோடியாக நடித்து வருகின்றனர். மஹத்திற்கு சமீபத்தில் பிராச்சியுடன் நிச்சயம் ஆன நிலையில் தற்போது யாஷிகா மீண்டும் காதலில் விழுந்துள்ளார்.
சமீபத்தில் நடிகை யாஷிகா தனது புகைப்படத்தை பதிவிட்டு இறுதியில் அவனும் நானும் என்று லவ் சிம்பலை பதிவிட்டுள்ளார். இந்த பதிவை கண்ட பலரும் யார் அந்த நபர் என்று கேள்வி கேட்டு வருகின்றனர்.