95 நாட்களுக்கு பின் குழந்தை போல முதல் அடி எடுத்து வைக்கிறேன் – யாஷிகா பகிர்ந்த வீடியோ (பாக்கவே பாவமா இருக்கே)

0
1705
yashika
- Advertisement -

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சென்னை, மாமல்லபுரம் அருகே நடந்த கார் விபத்தில் நடிகை யாஷிகா ஆனந்த் படுகாயகங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்தில் வள்ளி ஷெட்டி பவானி என்ற பெண் பலியானார். மேலும், யாஷிகா மீதும் வழக்கு பதியப்பட்டு இருந்தது. இந்த விபத்தில் சிக்கிய யாஷிகாவிற்கு பல எலும்புகள் முறிந்த நிலையில் அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. தன் உடல் நலம் குறித்து பதிவிட்ட யாஷிகா, இடுப்பு எலும்பில் பல எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது.

-விளம்பரம்-

காலில் எலும்பு முறிவு. சர்ஜரிக்குப் பிறகு ஓய்வெடுத்து வருகிறேன். என்னால் அடுத்த 5 மாதத்திற்கு நிற்கவோ நடக்கவோ முடியாது. அதனால் இயற்கை உபாதைகள் உட்பட எல்லாமே படுக்கையில் தான். இடம், வலம் கூட திரும்ப முடியாது. எனது முதுகு பலத்த காயமடைந்துள்ளது. நிச்சயமாக இது எனது மறுபிறப்பு தான். கடவுள் என்னை தண்டித்து விட்டார். ஆனால் நான் இழந்ததை ஒப்பிடுகையில், இது ஒன்றுமே இல்லை என்றும் கூறி இருந்தார்.

இதையும் பாருங்க : ரஜினி, தனுஷ் விருது வாங்கிய அதே மேடையில் தேசிய விருது வாங்கிய மதுரை சிறுவன் – யார் தெரியுதா ?

- Advertisement -

மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்கு பின் வீடு திரும்பியுள்ள யாஷிகா கொஞ்சம் கொஞ்சமாக தேறி வருகிறார். சமீபத்தில் தான் படுக்கையில் இருக்கும் புகைப்படம் ஒன்றை பதிவிட்டு இருந்தார். அதில் சிறு நீர் போவதற்கு கூட பைப் பொருத்தப்பட்டு இருந்ததை காண முடிந்தது. இதை பார்த்த ரசிகர்கள் பலரும் யாஷிகா விரைவில் முழுமையாக குணமடைய வேண்டும் என்று ஆறுதல் கூறி வந்தனர்.

யாஷிகாவும் அடிக்கடி தண்னுடைய உடல் நிலை குறித்து தொடர்ந்து தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் விபத்திற்கு முதன் முறையாக பின் எழுந்து நடந்த வீடியோ ஒன்றை பதிவிட்டு இருக்கிறார் அதில்,

-விளம்பரம்-
Advertisement