கௌதம் கார்த்திக் நடிப்பில் வெளியான இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற அடல்ட் காமெடி படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் அறியப்பட்டவர் நடிகை யாஷிகா ஆனந்த். அதன் பின்னர் விஜய் தொலைக்காட்சியில் கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தார்.
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் அடுத்தடுத்து படங்களில் நடித்து வருகிறார் யாஷிகா. தற்போது யோகி பாபுவுடன் ‘ஜாம்பி’ என்ற படத்திலும் மஹத்துடன் ஒரு படத்திலும் நடித்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்னர் இவர் நடித்துள்ள ஜாம்பி படத்தின் டீஸர் ஒன்றும் வெளியாகி இருந்தது.
இதையும் பாருங்க : தற்கொலைக்கு முயன்ற மதுமிதா.! முதன்முறையாக வாய் திறந்த முன்னாள் போட்டியாளர்.!
எப்போதும் சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் யாஷிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படத்தை பதிவிடுவது வழக்கம். அதில் பெரும்பாலும் கவர்ச்சியான புகைப்படங்களாக தான் இருக்கும். இதனால் இவரை பின் தொடர்பவர்களும் அதிகமாகவே இருக்கின்றனர்.
இந்த நிலையில் யாஷிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பதிவிட்டிருந்தார். அதில் அவரது காலில் அடிபட்டுள்ளதை கண்ட ரசிகர்கள் காலில் செம சில்லறை போல என்று கிண்டலடித்துள்ளனர். ஒரு சிலரோ சனிக்கிழமை பார்ட்டிக்கு சென்று விழுந்து விடீர்களா என்று நக்கலடித்து வருகின்றனர்.