உங்க அம்மாகிட்ட காட்டு சந்தோசபாடுவாங்க. யாஷிகாவின் புகைப்படத்தை கழுவி ஊற்றும் ட்விட்டர் வாசிகள்.

0
37498
yashika
- Advertisement -

தமிழ் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான ‘துருவங்கள் பதினாறு’ என்ற படத்தின் மூலம் துணை நடிகையாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார் இளம் நடிகை யாஷிகா ஆனந்த். அந்த படத்தை தொடர்ந்து கவுதம் கார்த்தி நடிப்பில் வெளியான ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ என்ற அடல்ட் காமெடி படத்தின் மூலம் தமிழ் நாட்டு இளைஞர்களின் மனதில் அதிக இடம் பிடித்தார். மேலும், தமிழ் சினிமாவிலும் அதிக அளவு பிரபலமானார் மற்றும் இந்த ஒரு படத்திலேயே அதிக அளவிற்கு ரசிகர்களை ஈர்த்தார்.

-விளம்பரம்-

அந்த படத்தின் இரட்டை அர்த்த வசனங்களை பேசி இளசுகளை ஈர்த்த யாஷிகா, பின்னர் அடிக்கடி கவர்ச்சியான போட்டோ ஷூட்களை நடத்தி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். இருட்டு அறையில் முரட்டு குத்து படத்திற்கு பின்னர் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்த இவருக்கு விஜய் தொலைக்காட்சியில் கடந்த 2018 ஆம்ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் பங்குபெறும் வாய்ப்பும் கிடைத்தது.

இதையும் பாருங்க : பிரபல டபுள் மீனிங் காமெடி மன்னன் வெண்ணிற ஆடை மூர்த்தி என்னவானார். அவரின் தற்போதைய நிலை.

- Advertisement -

யாஷிகா ஆனந்த் பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் பங்கு பெறும் வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டார் என்று கூட சொல்லலாம் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் இவருக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலம் ஏற்பட்டது. மேலும், பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் இவருக்கு பல்வேறு பட வாய்ப்புகளும் கிடைத்த வண்ணம் இருக்கிறது. அதே போல இவருக்கு ரசிகர்கள் மத்தியில் பிரபலம் ஏற்பட்டது இவரது சமூக வலைதள பக்கங்கள் தான் என்றும் கூறலாம்.

எப்போதும் சமூக வலைதளத்தில் ஆக்ட்டிவாக இருக்கும் யாஷிகா ஆனந்த் அடிக்கடி தனது புகைப்படங்களை பதிவிடுவது வழக்கம். இதனால் இவரை ரசிகர்கள் தமிழ் சினிமாவின் மியா கலீபா என்றும் கூறி வருகின்றனர். எப்போதும் பார்ட்டி பப் என்று சுற்றும் இவர் இன்று வார இரவு என்பதால் நடிகை யாஷிகா இரவு பார்ட்டிக்கு சென்றிருக்கிறார். மேலும் இரவு பப்பில் எடுத்துக் கொண்ட சில புகைப்படங்களையும், வீடியோக்களையும் தனது இன்ஸ்டாகிராம் என் ஸ்டேட்டஸை தட்டியுள்ளார் யாசிகா. இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர் ஒருவர்

-விளம்பரம்-
Advertisement