‘நடு ரோட்டிலே என்னை அடிப்பார்’- முன்னாள் காதலன் செய்த கொடுமைகளை பிக் பாஸ் வீட்டில் பகிர்ந்த சௌந்தர்யா

0
239
- Advertisement -

பிக் பாஸ் 8 போட்டியாளர் சௌந்தர்யா நஞ்சுண்டன் தனது முன்னாள் காதலர் செய்த கொடுமைகள் பற்றி சக போட்டியாளர்களிடம் கூறியிருக்கும் வீடியோ தான் சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. விஜய் டிவியில் பிக் பாஸ் 8 நிகழ்ச்சி கோலாகலமாக தொடங்கி இன்று 12ஆம் நாள். இந்த முறை நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தான் தொகுத்து வழங்குகிறார். இந்த சீசனில் தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர், சாச்சனா நமிதாஸ், தர்ஷா குப்தா, சத்யா, தீபக், சுனிதா, கானா ஜெஃப்ரி, ஆர்ஜே ஆனந்தி, ரஞ்சித், பவித்ரா, தர்ஷிகா, அர்னவ், அன்ஷிதா, விஜே விஷால், முத்துக்குமரன், சௌந்தர்யா, ஜாக்குலின், அருண் பிரசாத் ஆகிய 18 போட்டியாளர்கள் பங்கேற்று உள்ளனர்.

-விளம்பரம்-

இந்த முறை ஆளும் புதுசு, ஆட்டமும் புதுசு என்பதால் பல்வேறு டீவ்ஸ்டுகளுடன் பிக் பாஸ் சீசன் 8 ஆரம்பமாகியுள்ளது. அதோடு முதல் நாளே பிக் பாஸ் வீட்டுக்கு நடுவே கோடு போடப்பட்டு ஆண்கள் ஒருபுறம், பெண்கள் ஒருபுறம் இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டது. பின் 24 மணி நேர எவிக்ஷனில் அதிக நாமினேஷன்களை சாச்சனா பெற்று பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறி, மீண்டும் வந்து இருந்தார். பின் முதல் வாரத்திற்கான நாமினேஷனில் ரவீந்தர் வெளியேறி இருந்தார்.

- Advertisement -

பிக் பாஸ் சீசன் 8:

மேலும், இரண்டாம் வாரத்திற்கான நாமினேஷனில் அதில் அதிக வாக்குகளை பெற்று சௌந்தர்யா, ஜெஃப்ரி, ரஞ்சித், அர்னவ், விஷால், முத்து, தர்ஷா, சாச்சனா, ஜாக்லின், தீபக் ஆகியோர் நாமினேட் ஆகி இருந்தார்கள். பின் இரண்டாம் வாரத்திற்கான கேப்டன்சி டாஸ்க்கில் சத்யா வெற்றி பெற்றார். அதற்குப்பின் ஆண்கள் அணியில் இருந்து தீபக்கும், பெண்கள் அணியில் இருந்து தர்ஷாவும் இடம் மாறினார்கள். நேற்று எபிசோட்டில் பிக் பாஸ் மூன்று டாஸ்க் கொடுக்கப்படும். யார் அறிவில், திறமையில், டீம் ஒற்றுமையில் சிறந்தவர் என்பதை காண்பிக்க வேண்டும். எந்த அணி வெற்றி பெறுகிறதோ அவர்கள் நாமினேஷனில் இருந்து ஒருவரை காப்பாற்றலாம் என்று அறிவித்தார்.

போட்டியாளர் சௌந்தர்யா:

இந்நிலையில், போட்டியாளர் சௌந்தர்யா வீடியோ ஒன்று தான் சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது‌. சௌந்தர்யா ஒரு மாடல் அழகி. இவரை instagramல் மட்டும் சுமார் 4 லட்சம் பேர் பின் தொடர்கின்றனர். இவர் ஆஹா ஓடிடி தளத்தில் ஒளிபரப்பான ‘வேற மாதிரி ஆபீஸ்’ நிகழ்ச்சியில் நடித்துபலரது கவனத்தை ஈர்த்தவர். கடந்த சீசனில் இறுதிவரை போட்டியாளராக இருந்த விஷ்ணுவின் நெருங்கிய தோழி சௌந்தர்யா ஆவார்.

-விளம்பரம்-

காதலன் குறித்து சௌந்தர்யா:

சமீபத்தில் சௌந்தர்யா தனது முன்னாள் காதலன் குறித்து பிக் பாஸ் வீட்டில் மற்ற போட்டியாளர்களிடம் கூறியுள்ளார். அதில் அவர் , நாங்க பள்ளியில் பதினோராம் வகுப்பு படிக்கும் போது இருந்தே காதலிக்க ஆரம்பித்து விட்டோம். கல்லூரி வரை இருவரும் காதலித்து வந்தோம். நான் கல்லூரியில் படிக்கும் போது தான் மாடலிங் துறையில் என்ட்ரி ஆனேன். அது என்னுடைய முன்னாள் காதலருக்கு பிடிக்கவில்லை.

கொடுமை செய்த முன்னாள் காதலன்:

இதனால் எனது காதலருக்கு தெரியாமல் மாடலிங் போட்டோ சூட் புகைப்படங்களை போனில் ஹைட் பண்ணி வைத்திருந்தேன். அதை அவர் ஒருமுறை பார்த்து விட்டார். அப்போது நடு ரோட்டிலே என்னை அடித்துவிட்டார். அது மட்டும் இல்லாமல் பலமுறை என்னை அவர் அடுத்து இருக்கிறார். ஒரு முறை சாஸ் பாட்டில் வைத்து கூட என் தலையில் அடித்திருக்கிறார். இப்படி நடந்து கொண்டே இருந்த நிலையில், எனக்கு என்னுடைய கேரியர் முக்கியம் என முடிவு செய்து நாங்க இருவரும் பிரிந்து விட்டோம் என்று சௌந்தர்யா சக போட்டியாளர்களிடம் கூறியுள்ளார்.

Advertisement