தனக்கு கொலை மிரட்டல் விடுப்பதாக ப்ளூ சட்டை மாறன் போலீஸில் கொடுத்திருக்கும் புகார் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. விமர்சகர் ப்ளூ சட்டை மாறனை தெரியாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். சினிமா உலகில் வெளிவரும் திரைப்படங்களை கிண்டலாகவும் ,கேலியாகவும் விமர்சனம் செய்து வருபவர் தான் ‘ப்ளூ சட்டை மாறன்’ இவர் பிரபலமான ஹீரோக்களான ரஜினி, கமல், விஜய், அஜித் என்று யாருடைய படமானாலும் பாரபட்சம் பார்க்காமல் கிண்டல் செய்து வருவார்.
நடிகர்கள் முதல் படத்தின் இயக்குனர், தயாரிப்பாளர் என யாரையும் விட்டுவைக்காமல் விமர்சித்து இருக்கிறார். மேலும், இவருடைய வீடியோக்களுக்கு என்று ஒரு தனி ரசிகர் கூட்டமும் இருந்து வருகிறது. ஆனால், இவருடைய விமர்சனங்களால் படத்தின் வசூல் பாதிக்கப்படுகிறது என சினிமா பட இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் புலம்பி கொட்டுகின்றனர். இவர் விமர்சகர் என்று சொல்லிக்கொண்டு திரைப்படங்களை சகட்டுமேனிக்கு விமர்சனம் செய்து வருகிறார். படத்தில் இருக்கும் நிறைகளை பேசுவதைவிட குறைகளை பேசுவது தான் அதிகம்.
இதனால் இவரை ரசிகர்கள் பலரும் கழுவி ஊற்றி இருக்கின்றன. அந்த வகையில் இவர் ரஜினியை வம்பிழுத்து இருப்பது ரசிகர்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தி இருக்கிறது. தற்போது ரஜினி நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் ஜெயிலர். இந்த படத்தில் தமன்னா, ரம்யா கிருஷ்ணன், மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ் குமார் என பலர் நடித்து இருக்கிறார்கள். இதனால் இந்த படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டு இருக்கிறது.
@tnpoliceoffl Please take against the person who is making death threat in this audio and also take action against the administrators who are responsible for instigating violence in this twitter space discussion.@CMOTamilnadu CM Stalin Sir, i hope you will maintain law and… pic.twitter.com/W2bhgTh6n3
— Blue Sattai Maran (@tamiltalkies) August 9, 2023
ரஜினியை விமர்சித்த மாறன்:
மேலும், இன்னும் சில நாட்களில் படம் வெளியாக இருக்கும் நிலையில் சமீபத்தில் தான் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்று இருக்கிறது. அதில் ரஜினி பேசியதை விமர்சித்து ப்ளூ சட்டை மாறன் பேசி இருக்கிறார். இதனால் ரஜினி ரசிகர்கள் கொந்தளித்து ப்ளூ சட்டை மாறனை வெளுத்து வாங்கி இருக்கிறார்கள். இந்நிலையில் ப்ளூ சட்டை மாறன் போலீசில் புகார் கொடுத்து இருக்கும் தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது.
ப்ளூ சட்டை மாறன் புகார்:
அதாவது, படம் ரிலீஸ் ஆக இருப்பதால் சினிமா பட விநியோகஸ்தர்கள் குரூப் காலில் ப்ளூ சட்டை மாறனை விமர்சித்து பேசி இருக்கிறார்கள். இந்த ஆடியோ வீடியோவை தன்னுடைய டீவ்ட்டர் பக்கத்தில் பகிர்ந்து தமிழ்நாடு போலீஸுக்கு சோசியல் மீடியா மூலம் ப்ளூ சட்டை மாறன் புகார் ஒன்று கொடுத்திருக்கிறார். அதில், நான் எங்கு செல்கிறேன். என்ன பண்ணுகிறேன் என்று தெரிந்து கொண்டு என் மீது கொலை மிரட்டல் விடுக்க கொலை மிரட்டல் விடுத்து இருக்கிறார்கள் என்று கூறி இருக்கிறார்.
ஊருக்கு உபதேசம். பார்ல சகவாசம்:
— Blue Sattai Maran (@tamiltalkies) August 5, 2023
* 'தயவு செஞ்சி கேட்டுக்கறேன். யாரும் சரக்கு அடிக்க வேண்டாம்' என்று சமீப காலமாக அறிவுரை சொல்லி வருகிறது பவ்யமான பருந்து.
* ஆனால் நிஜத்தில்… பருந்து செய்திருக்கும் செயலென்ன தெரியுமா? தலைநகரில் உள்ள நுங்குபாக்கம் பகுதியில் உள்ள பிரபல 'பனை தோப்பு'… pic.twitter.com/TkVHgdyU4b
ரசிகர் பதிவு:
இதை அடுத்து இவர் பதிவை பார்த்த ரசிகர் ஒருவர், ஏன்டா பிளாக் செஞ்ச. நீதான் போலீஸ்ல போய் புகார் கொடுக்கிறேன் சொன்னியே. அதுக்குள்ள பயமா? என் உடம்புல போலீஸ் ரத்தம் தாண்ட ஓடுது என்றெல்லாம் போட்டிருக்கிறார். இதற்கு ப்ளூ சட்டை மாறன், இது என்ன கேள்வி? பிளாக் ஆப்சன் இருக்கு பண்ணேன். வேணும்னா அந்த ஆப்ஷனை வைக்க வேணாம்னு எலன் ரஸ்க் ஐயா கிட்ட சொல்லு. அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம். நீ தான் தைரியமான ஆளாச்சே போய் புகார் கொடு. போலீஸ் ரத்தம் ஓடுதா, எது தர்பார் பட போலீசா? என்று கிண்டல் செய்துஇருக்கிறார்.