கன்னட ஹீரோவை வைத்து படம் எடுக்கும் சேரன் – காவேரி பிரச்சினையை சுட்டி காட்டி சரமாரி கேள்வி கேட்ட ப்ளூ சட்டை

0
849
- Advertisement -

சேரனை விமர்சித்து ப்ளூ சட்டை மாறன் பதிவிட்டு இருக்கும் பதிவு தான் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தமிழ் சினிமா உலகில் உள்ள பிரபலமான இயக்குனர்களில் ஒருவராக திகழ்பவர் சேரன். இவர் சினிமா உலகில் இயக்குனர் மட்டும் இல்லாமல் நடிகரும் ஆவார். இவர் சொல்ல இல்லாமல் கதை, தவமாய் தவமிருந்து, பொக்கிஷம், ராமன் தேடிய சீதை, யுத்தம் செய் உள்ளிட்ட பல படங்களை இயக்கியும், நடித்தும் இருந்தார்.

-விளம்பரம்-

அதிலும் சேரன் இயக்கி நடித்த ஆட்டோகிராப் படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் வரவேற்கப்பட்டு இருந்தது. மேலும், சேரன் இயக்கிய பல படங்கள் தேசிய விருதுகளை வாங்கி இருக்கிறது. பின் இடையில் சில காலம் சேரன் படம் இயக்குவதில் இருந்து விலகி இருந்தார். பின் இவர் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு இருந்தார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு சேரன் படங்களில் அதிக கவனம் செலுத்தி வந்தார்.

- Advertisement -

சேரன் திரைப்பயணம்:

அந்த வகையில் கடைசியாக இவர் 2019 ஆம் ஆண்டு வெளியான திருமணம் என்ற படத்தை இயக்கியிருந்தார். இந்த படத்தில் அவர் நடித்தும் இருந்தார். இதனை அடுத்து கடந்த நான்கு ஆண்டுகளாக சேரன் எந்த படத்தையும் இயக்கவில்லை நடித்து மட்டும் வந்தார். அந்த வகையில் சமீபத்தில் சேரன் நடிப்பில் வெளிவந்த படம் தமிழ்க்குடிமகன். இந்த படத்தை இயக்குனர் இசக்கி கார்வண்ணன் இயக்கி இருக்கிறார். இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று இருக்கிறது.

சேரன்-கிச்சா கூட்டணி:

இதனை அடுத்து தற்போது மீண்டும் சேரன் அவர்கள் இயக்கத்தில் இறங்கி இருக்கிறார். இவர் கன்னட நடிகர் கிச்சா சுதிப்பை வைத்து தான் புதிய படத்தை இயக்க இருக்கிறார். இந்த படத்தை சத்தியஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. மேலும் கிச்சா சுதிப் பிறந்த நாளை முன்னிட்டு இந்த படத்தினுடைய அறிவிப்பை படக்குழு அறிவித்திருந்தார்கள். இந்த படத்திற்கு கிச்சா 47 என்று பெயர் வைத்திருக்கிறார்கள். அது மட்டும் இல்லாமல் இந்த படமும் கன்னடத்தில் உருவாக இருப்பதாக கூறப்படுகிறது.

-விளம்பரம்-

ப்ளூ சட்டை மாறன் பதிவு:

நீண்ட இடைவெளிக்கு பிறகு சேரன் இயக்கத்தில் படம் வெளியாக இருப்பது ரசிகர்கள் மத்தியில் அதிக ஆர்வத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த நிலையில் இது தொடர்பாக சேரனை விமர்சித்து ப்ளூ சட்டை மாறன் பதிவு ஒன்று போட்டு இருக்கிறார். அதில் அவர், காவிரி எங்கள் சொத்து. விட்டுத்தர மாட்டோம் – கிச்சா. இவரை வைத்து பான் இந்தியா படம் இயக்கப்போகும் தமிழ் மண்ணின் மைந்தர் சேரன் அவர்களே.. ‘காவிரி ஒரு மாநிலத்தின் தனிப்பட்ட சொத்தல்ல. தேசத்தின் சொத்து.

தமிழ்நாடு-கர்நாடகா ப்ரச்சனை:

அதில் தமிழகத்திற்கும் பங்குண்டு’ எனச்சொல்ல தைரியம் இல்லையா? தமிழர் நலனை விட உங்கள் பான் இந்தியா படம்தான் முக்கியமானதா? என்று கூறி இருக்கிறார். இதற்கு பலர் ப்ளூ சட்டை மாறனுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகிறார்கள். இதற்கு காரணம், கடந்த சில வாரங்களாகவே காவிரி பிரச்சனை விவகாரம் தலைவிரித்து ஆடிக் கொண்டிருக்கின்றது. இதனால் தமிழ்நாடு- கர்நாடகாவிற்கு இடையே பல பிரச்சனைகள் நடந்து கொண்டிருக்கின்றது. அதோடு தன் படத்தின் பிரமோஷனுக்காக பெங்களூர் சென்ற சித்தார்த்தை கன்னட அமைப்பினர் மிரட்டி வெளியே அனுப்பியதால் பிரச்சனை இன்னும் அதிகமாகி விட்டது.

Advertisement