மருத்துவமனையில் இருந்த போது உன் ஆப்ரேசனுக்கு நான் பொறுப்புன்னு சொல்லி இத்தனை லட்சம் கொடுத்துட்டு போனார் – கலங்கிய போண்டா மணி.

0
509
bondamani
- Advertisement -

பிரபல காமெடி நடிகர் மயில்சாமி திடீர் மரணம் அடைந்திருக்கும் சம்பவம் திரைத்துறை மற்றும் ரசிகர்கள் மத்தியில் வெறும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.நேற்று சிவராத்திரியை முன்னிட்டு கேளம்பாக்கத்தில் உள்ள சிவன் கோயிலில் சிவராத்திரி பூஜை நடைபெற்றது. இதில் ட்ரம்ஸ் சிவமணி பங்கேற்று இசை கச்சேரி செய்து இருந்தார். இதில் மயிலசாமியும் கலந்துகொண்டு இருந்துள்ளார். விடிய விடிய சிவராத்திரி பூஜையில் இருந்துவிட்டு பின்னர் வீட்டிற்கு சென்று இருக்கிறார். சாமி தரிசனம் செய்துவிட்டு வீடு திரும்பிய போது அவருக்கு திடீர் மரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனை செல்லும் வழியிலேயே காலமாகி இருக்கிறது.

-விளம்பரம்-

மயில்சாமியின் இறுதி ஊர்வலம் நாளை நடைபெறும் நிலையில் இன்று அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள உடலுக்கு பிரபலங்கள் பலர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் நடிகர் போண்டா மணி, மயில்சாமி உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். பின்னர் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசிய போண்டாமணி ‘மயில்சாமி ஒரு குட்டி எம்ஜிஆர், கொடை வள்ளல்.

- Advertisement -

நாம் எல்லோரையும் விட்டு போய்விட்டான். நான் மருத்துவமனையில் சீரியஸ் ஆக இருந்தபோது ஓடி வந்து எல்லாரிடமும் பணத்தை வாங்கி ஒரு லட்சம் ரூபாய் இருக்கிறது என்று என்னிடம் கொடுத்து கவலைப்படாதே உன்னுடைய ஆப்பரேஷனுக்கு நான் தான் பொறுப்பு என்று எனக்கு ஆபரேஷன் ஏற்பாடு செய்தார். அடுத்த வாரம் எனக்கு ஆபரேஷன். ஆனால், அதற்குள் அந்த புண்ணியவான் நம்மை விட்டு சென்று விட்டார்.

அவருடைய ஆத்மா சாந்தியடைய வேண்டும் இதற்கு மேல் என்னால் பேச முடியவில்லை இது போன்ற கொடை வள்ளல்களை தமிழ் சினிமாவில் பார்ப்பது மிகவும் கஷ்டம் நான் எத்தனையோ கவிஞர்களை பார்த்திருக்கிறேன் ஆனால் மயில்சாமி போன்ற ஒரு கலைஞனை பார்த்தது இல்லை’ என்று உருக்கமாக பேசி இருக்கிறார். இதனை தொடர்ந்து லொள்ளு சபா, சாமிநாதன், மனோபாலா, எம் எஸ் பாஸ்கடர் என்று பலர் மயிலசாமி குறித்து கண்ணீர் வடித்தனர்.

-விளம்பரம்-

மயில்சாமியை போல மிகவும் பிரபலமான காமெடி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர் போண்டா மணி. இவர் 1991ஆம் ஆண்டு பாக்யராஜ் நடிப்பில் வெளியாகி இருந்த பவுனு பவுனு தான் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி இருந்தார். அதனை தொடர்ந்து இவர் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். மேலும், இவர் வடிவேலு, விவேக் உள்ளிட்ட பல காமெடி நடிகர்களுடன் சேர்ந்து நடித்திருக்கிறார்.

bonda

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் படப்பிடிப்பில் ஏற்பட்ட விஷவாயுவால் போண்டா மணி பாதிக்கப்பட்டு இருக்கிறார். பின்னர் நடிகர் போண்டா மணிசென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். ஆனால், சிகிச்சைக்கு பணம் இல்லாமல் உதவி கேட்டு வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார். நடிகர் சங்கம் சார்பில் போண்டா மணியை மனோபாலா நேரில் சென்று சந்தித்து இருந்தார். போண்டாமணியின் மருத்துவ செலவை முழுமையாக அரசே ஏற்றுக்கொள்ளும் என்று அமைச்சர் சுப்பிரமணியன் கூறி இருந்தார்.

Advertisement