Breaking News : கைகொடுக்காத சிகிச்சை, நடிகர் விஜயகாந்த் மரணம் – ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் கண்ணீர்.

0
628
- Advertisement -

நடிகரும் தே.மு.தி.க முன்னாள் தலைவருமான கேப்டன் விஜயகாந்த் மரணமடைந்துள்ள செய்தி ஒட்டுமொத்த தமிழகத்தையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக இவர் உடல் நல குறைவின் காரணமாக சினிமா மற்றும் அரசியல் என இரண்டிலும் விலகி சிகிச்சை பெற்று வருகிறார். அதோடு இவர் அடிக்கடி தொடர் சிகிச்சைக்கு சென்று வருகிறார். இப்படி இருக்கும் கடந்த மாதம் விஜயகாந்த் அவர்கள் இருமல், சளி அதிகமாக உள்ளதால் அவருக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டு இருந்தது.

-விளம்பரம்-

இதனால் இவரை நந்தம்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்திருக்கிறார்கள். பின் விஜயகாந்தின் நுரையீரலில் பிரச்சனை இருப்பதால் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், சில தினங்களுக்கு முன்பு மியாட் மருத்துவமனையில் இருந்து விஜயகாந்த் உடல்நிலை குறித்து அறிக்கை வெளியிட்டிருந்தார்கள். அதில், விஜயகாந்தின் உடலில் முன்னேற்றம் ஏற்பட்டது. ஆனால், கடந்த 24 மணி நேரமாக அவருடைய உடல்நிலை சீராக இல்லை.

- Advertisement -

விஜயகாந்த் உடல்நிலை:

அவருக்கு நுரையலுக்கான சிகிச்சை வழங்கப்பட வேண்டும். இதனால் அவர் 14 நாட்கள் மருத்துவமனையில் இருக்க வேண்டும் என்று கூறியிருந்தார்கள். இதை அறிந்த விஜயகாந்தின் ரசிகர்களும், தொண்டர்களும் கண்ணீர் மல்க கதறி அழுது இருக்கிறார்கள். அது மட்டும் இல்லாமல் பலருமே கோயில்களில் விஜயகாந்த் உடல் நலம் தேறி மீண்டு வர வேண்டும் என்று பிரார்த்தனைகளையும் அபிஷேகங்களையும் செய்து கொண்டு இருக்கிறார்கள்.

தொடர் சிகிச்சை :

கடந்த சில வாரமாகவே சோசியல் மீடியா முழுவதும் விஜயகாந்த் உடல்நிலை குறித்த செய்தி தான் வைரலாகி வருகிறது. அதில் விஜயகாந்த் உடல்நிலை குறித்து மோசமான வதந்திகள் பரவி இருந்தது. இதனால் ஆத்திரம் அடைந்த பிரேமலதா செய்தியாளர்களை சந்தித்து விஜயகாந்த் உடல்நிலை குறித்து பேட்டி அளித்து இருந்தார். பின் விஜயகாந்த் உயிருக்கு ஆபத்தான கட்டத்தை தாண்டி இருப்பதாக தகவல் வெளியாகி இருந்தது. பிரபலங்கள் பலருமே விஜயகாந்தை நேரில் பார்க்க சென்று இருந்தார்கள்.

-விளம்பரம்-

வீடு திரும்பிய கேப்டன்

மேலும், கடந்த 11-ம் தேதி விஜயகாந்த் வீடு திரும்பி இருக்கிறார். அவர் பூணமாக குணமடைந்து விட்டதாக அறிவிக்கப்பட்டிருந்தார்கள். இப்படி இருக்கும் நிலையில் தேமுதிக கட்சியின் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் இன்று நடைபெற்றிருக்கிறது. இந்த கூட்டம் திருவேற்காட்டில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இதில் பொருளாளராக இருக்கும் பிரேமலதாவிற்கு தற்போது தேமுதிக கட்சியின் பொதுச் செயலாளராக நியமனம் செய்திருக்கிறார்கள்.

இறப்பிற்கு காரணம் :

இப்படி ஒரு நிலையில் சமீபத்தில் நடிகர் விஜயகாந்த் மீண்டும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஆனால், இது வழக்கமான பரிசோதனை என்று கூறப்பட்டு வந்த நிலையில் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருப்பதாக தெரியவந்தது. இதனால் அவருக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்த போதிலும் அவர் சிகிச்சை பலனின்றி காலமாகி இருக்கிறார்.

Advertisement