ஷூட்டிங் போது பைக் விபத்தில் சிக்கிய யாரடி நீ மோகினி சைத்ரா – அவரின் தற்போதய நிலை.

0
618
chaitrareddy
- Advertisement -

கயல் சீரியல் படப்பிடிப்பின்போது விபத்தில் சிக்கிய நடிகையின் இன்ஸ்டா பதிவு தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. என்ன ஆச்சு என்று நலம் விசாரித்து வரும் ரசிகர்கள். மக்களின் பொழுது போக்கு அம்சங்களில் ஒன்றாக சின்னத்திரை சீரியல்கள் திகழ்கிறது. அதிலும் ஒவ்வொரு சேனலிலும் மக்களின் ஃபேவரிட் சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகிறது. அந்த வகையில் சன் டிவி சீரியல் என்றாலே மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்று வருகிறது. அதிலும் சன் டிவியில் புதிது புதிதாக சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. மேலும், சமீபத்தில் சன் டிவியில் ஒளிபரப்பான சீரியல் தான் கயல்.

-விளம்பரம்-

இந்த சீரியலில் கதாநாயகியாக சைத்ரா ரெட்டியும், கதாநாயகனாக சஞ்சீவ்வும் நடிக்கிறார்கள். மேலும், விஜய் டிவியில் ஒளிபரப்பான கல்யாணம் முதல் காதல் வரை சீரியலின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் சைத்ரா ரெட்டி. அதன் பின் இவர் ஜீ தமிழில் யாரடி நீ மோகினி சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து எல்லோருக்கும் பிடித்தமான வில்லியாக திகழ்ந்தவர். கொடூரமான வில்லியாக இருந்தாலும் இவருக்கு என்று ஒரு தனி ரசிகர் கூட்டம் சேர்ந்தது.

இதையும் பாருங்க :‘விஜய் சார் பிக் பாஸ் பாக்குறாரா’ – உள்ள நுழைந்த விஜய்யின் நெருங்கிய நண்பர். குஷியான போட்டியாளர்கள்.

- Advertisement -

இவருடைய சொந்த ஊர் பெங்களூர். சமீபத்தில் தான் இவருக்கு திருமணம் நடந்தது. திருமணத்திற்குப் பிறகும் இவர் சீரியலில் அதிக அழகுடனும், பொலிவுடனும் நடித்து வருகிறார். யாரடி நீ மோகினி சீரியல் முடிந்த பிறகு தற்போது இவர் சன் டிவியில் கயல் என்ற சீரியலில் நடித்து வருகிறார். இதுவரை நெகட்டிவ் கதாபாத்திரத்தில் பார்த்த இவரை பாசிட்டிவ் கதாபாத்திரத்தில் பார்க்க புதிதாக இருக்கிறது. இந்த சீரியலில் மூலம் இவர் ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்று வருகிறார். மேலும், சைத்ரா ரெட்டி எப்போதும் சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருப்பார்.

இந்நிலையில் சூட்டிங் ஸ்பாட்டில் தனக்கு நடந்த விபத்து குறித்து சைத்ரா ரெட்டி தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். அதில் அவர் கூறியது, சூட்டிங் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது பைக்கில் இருந்து நான் கீழே விழுந்து விட்டேன் என்று பதிவிட்டிருக்கிறார். மேலும், இந்த விபத்து நடந்து 3 நாட்கள் ஆகிவிட்டது என்றும் தற்போது நான் நலமாக இருப்பதாகவும் பதிவிட்டுள்ளார் சைத்ரா. சைத்ரா விரைவில் குணமடைய வேண்டுமென ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வந்துள்ளனர்.

-விளம்பரம்-
Advertisement