“9th படிக்கும்போது ஆரம்பிச்சாங்க” முடிவுக்கு வந்த சந்திரலேகா சீரியல் – நன்றி கூறி நினைவுகளை பகிரும் ரசிகர்கள்.

0
726
chandralekha
- Advertisement -

சன் டிவியின் சந்திரலேகா சீரியல் முடிவுக்கு வந்திருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. பொதுவாகவே மக்களின் பொழுது போக்கு அம்சங்களில் ஒன்றாக சின்னத்திரை சீரியல்கள் விளங்குகிறது. அதுவும் கொரோனா காலகட்டத்திலிருந்து சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை என பலரும் சீரியல்களை விரும்பி பார்த்து வருகிறார்கள். இதனால் ஒவ்வொரு சேனலும் புதுப்புது வித்தியாசமான கதைக்களத்துடன் தொடர்களை ஒளிபரப்பி வருகிறது.

-விளம்பரம்-
chandralekha

அந்த வகையில் சீரியலுக்கு பெயர்போன முன்னணி சேனலாக விளங்குவது சன் டிவி. இந்த சேனலில் பல மெகா சீரியல்கள் ஒளிபரப்பாகி குடும்பங்களின் மத்தியில் இடம் பிடித்திருக்கிறது. அந்த வகையில் சன் டிவியில் நீண்ட காலமாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் தொடர் சந்திரலேகா. இந்த தொடர் 2014 ஆம் ஆண்டு அக்டோபர் 6ஆம் தேதி ஒளிபரப்பப்பட்டது. இந்த சீரியலில் ஸ்வேதா பந்தேகர், நாகஸ்ரீ ஜி.எஸ், சந்தியா ஜகர்லமுடி, பந்தேகர், தனுஷ் உள்ளிட்ட பலர் நடித்து இருக்கிறார்கள்.

- Advertisement -

இதையும் பாருங்க : தப்பு தப்பா விளையாடாதீங்க. டென்ஷனான ஜி.பி முத்து. காட்டு கத்து கத்திய ரட்சிதா – அனல் பறக்கும் பிக்பாஸ்.

சந்திரலேகா சீரியல்:

சரிகம நிறுவனம் இந்த தொடரை தயாரித்து இருக்கிறது. இயக்குனர் ஏ.பி.ராஜேந்திரன் இந்த சீரியலை இயக்கி இருக்கிறார். இந்த கதையின் நாயகி சந்திரா. மேலும், சீரியலில் சந்திரா மற்றும் லேகா இருவரும் ஆரம்பத்தில் எதிரிகளாக இருந்தாலும் பின் தன் குடும்பத்திற்காக மாறிவிட்டார்கள். இவர்கள் இருவரும் சேர்ந்து வரும் பிரச்சனைகளை எதிர்கொண்டு இருந்தார்கள். இவர்களுக்கு இருவரின் கணவர்களும் துணையாக இருக்கிறார்கள்.

-விளம்பரம்-

சந்திரலேகா சீரியல் கதை:

ஆரம்பத்தில் இருந்தே இந்த சீரியல் விறுவிறுப்பான பல திருப்பங்களுடன் சென்று கொண்டிருக்கின்றது. இருந்தாலும், இடையில் சீரியல் கொஞ்சம் டல்லாக சென்றதால் பலரும் சீரியல் எப்போது முடிவு என்றெல்லாம் கேட்டு இருந்தார்கள். அதோடு சீரியலில் பல பிரபலங்கள் மாறி இருந்தாலும் கதை நன்றாக சென்று கொண்டு இருக்கிறது. அதுட்டுமில்லாமல் சந்திரலேகா சீரியலுக்கு என்றே ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது.

சந்திரலேகா சீரியல் முடிவு:

மேலும், இந்த சீரியலில் நடித்த நடிகர்களும் மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்திருக்கிறார்கள். இந்த சீரியல் கடந்த 8 வருடங்களுக்கு மேலாக ஒளிபரப்பாகி வருகிறது. தற்போது இந்த சீரியல் 2304 க்கும் அதிகமான எபிசோடுகளை கடந்து இருக்கிறது. இந்நிலையில் தற்போது இந்த சீரியல் முடிவடைந்து உள்ளது. இதை பார்த்த பெண் ஒருவர் பதிவு ஒன்றை போட்டிருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பது, நான் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் போது இந்த சீரியல் தொடங்கப்பட்டது. இப்போது இரண்டு குழந்தைகளுக்கு நான் தாயாகி விட்டேன் என்று கூறியிருந்தார்கள்.

ரசிகர்கள் பதிவு:

ஆண்கள் சிலர், நான் பள்ளி படிப்பின் போது ஒளிபரப்பான சீரியல். இப்போது டிகிரி முடித்து திருமணம் பண்ணி விட்டேன் என்று கமெண்ட் போட்டிருக்கிறார்கள். இன்னும் சில திருமணம் ஆகும் முன்பு தொடங்கப்பட்ட சீரியல் இப்போது குழந்தைகள் பள்ளிக்கு செல்கின்றது என்றெல்லாம் கூறி வருகிறார்கள். இப்படி இந்த சீரியல் பல ஆண்டுகளாக ஒளிபரப்பாகி தற்போது தான் முடிவுக்கு கொண்டு வந்திருக்கிறார்கள். ரசிகர்களின் கமெண்ட்களை பார்த்து சீரியல் பிரபலங்கள் சந்தோஷத்தில் நன்றி தெரிவித்திருக்கிறார்கள்.

Advertisement