இந்தியாவில் மட்டுமல்ல உலகம் முழுவதும் நடைபெறும் உள்ளூர் டி20 தொடர்களில் மிகவும் பிரபலமான தொடர் என்றால் ஐபிஎல் தொடர் தான். அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இருப்பதால் இந்தியாவில் நடப்பதற்கான சாத்தியம் குறைவே.
பொதுவாக ஐபிஎல் தொடருக்கான ஏலம் ஜனவரி அல்லது பிப்ரவரி மாதத்தில் தான் பெங்களூரில் இரண்டு நாட்கள் நடக்கும். ஆனால் இந்த முறை டிசம்பர் மாதம் 18 ஆம் தேதியே ஐபிஎல் ஏலம் ஜெய்பூரில் நடத்தப்பட இருப்பதாக நிர்வாக குழு அறிவித்துள்ளது.
மேலும், சென்ற ஆண்டு வரை காலை 9 – மாலை 6 வரை ஏலம் நடக்கும். இம்முரை மதியம் 3 – 9.30 மணியாக மாற்றியுள்ளது. இதற்கு முக்கிய காரணமே ஏலத்தை ரசிகர்கள் அனைவரும் தொலைகாட்சியில் கண்டு களிக்கலாம் என்பதற்காக தானம்.




