மக்கள் நீதி மய்யத்தில் இருந்து பத்மபிரியா விலகல் -காரணம் இது தானாம். (அவங்க வாங்கிய ஓட்டு எவ்ளோ தெரியுமா, எல்லாம் போச்சே)

0
3447
kamal
- Advertisement -

மக்கள் நீதி மய்யம் கட்சியின் துணைத் தலைவராக இருந்த டாக்டர் மகேந்திரன்,கட்சியில் இருந்து விலகியதையடுத்து அந்த கட்சியில் இருந்து பல்வேறு நபர்கள் வெளியேறி வருகின்றனர். இப்படி ஒரு நிலையில் சட்ட மன்ற தேர்தலில் மக்கள் நீதி மையம் சார்பாக போட்டியிட்ட சென்னை தமிழச்சி என்ற புனைப்பெயர் கொண்ட பத்மப்ரியாவும் மக்கள் நீதி மையம் கட்சியில் இருந்து விள்குவதாக அறிவித்துள்ளார். நடந்து முடிந்த சட்ட மன்ற தேர்தலில் மதுரவாயல் தொகுதியில் மக்கள் நீதி மையம் சார்பாக போட்டியிட்டவர் பத்மப்ரியா.

-விளம்பரம்-
பூத் ஏஜென்ட் தேவை' - பத்மப்ரியாவின் கோரிக்கையும் ம.நீ.ம விளக்கமும் | Story  about mnm candidate Padmapriya's Booth Agent Request

இதே தொகுதியில் அதிமுக அமைச்சர் பெஞ்சமின் போட்டியிட்டார்.ஆனால் அதைக் காட்டிலும் சென்னை தமிழச்சி பத்மபிரியா மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிட்டதால் ஸ்டார் தொகுதி என்ற அந்தஸ்தை பெற்றது. இதனால் மதுரவாயல் தேர்தல் முடிவுகள் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. இப்படி ஒரு நிலையில் இந்த தொகுதியில் திமுக வேட்பாளர் கணபதி 31 ஆயிரத்து 231 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார்.

இதையும் பாருங்க : நாம் தமிழர் கட்சி தலைவரும் நடிகருமான சீமானின் தந்தை சொந்த ஊரில் மரணம்.

- Advertisement -

மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பாக போட்டியிட்ட பத்மபிரியா 33,401 வாக்குகளைப் பெற்று மூன்றாவது இடம் பிடித்தார். நாம் தமிழர் கட்சி இந்த தொகுதியில் நான்காம் இடத்தை பிடித்தது. தேர்தளுக்கு பின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்த பத்மபிரியா, தேர்தல் முடிவுகள் குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள பத்மபிரியா, “நாம் (மக்கள் நீதி மய்யம்) மிகக் கடுமையான ஒரு போட்டியை இந்த தேர்தலில் சந்தித்தோம். மக்கள் நீதி மய்யத்தின் மதுரவாயல் வேட்பாளராக என்னுடைய முதல் தேர்தலில் சுமார் 33 ஆயிரம் வாக்குகளுக்கு மேல் பெற்றுள்ளேன்.

இந்த தேர்தல் களத்தில் எனக்கு ஆதரவாக இருந்த மக்கள், அதிகாரிகள், ஊடகங்கள் உள்ளிட்ட அனைவரும் எனது இதயப்பூர்வமான நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். நான் இந்த தேர்தலை முழு மூச்சோடு எதிர்கொண்டேன். மேலும், இதில் எனக்கு துணையாக இருந்த மக்கள் நீதி மய்யம் கட்சி உறுப்பினர்களுக்கு நன்றி. இது ஒரு நீண்ட அரசியல் பயணத்தின் ஆரம்பம் மட்டுமே” என்று கூறி இருந்தார். இப்படி ஒரு நிலையில் இவர் மக்கள் நீதி மையம் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

-விளம்பரம்-

இதுகுறித்து பதிவிட்டுள்ள அவர், அன்பு நிறைந்த மதுரவாயல் தொகுதி மக்களுக்கு என் மீது நம்பிக்கை கொண்டு எனக்கு வாக்களித்த மக்கள் அனைவருக்கும் எனது நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றேன்.என்னைப் போல் எவ்வித அரசியல் பின்புலம் இல்லாத ஒரு நடுத்தர குடும்பப் பெண்ணை உங்கள் வீட்டுப்பிள்ளையாக எண்ணி ஏற்றுக்கொண்டு வாக்களித்தமைக்கும் நம்பிக்கை கொடுத்து ஊக்கம் கொடுத்தமைக்கும் நான் என்றும் உங்களுக்கு கடமைப்பட்டுள்ளேன்.சில காரணங்களுக்காக நான் சார்ந்திருந்த மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து விலகுவதாக முடிவு செய்துள்ளேன். அதை எனது தொகுதி மக்களான உங்களுடன் பகிர்வது எனது கடமை என்று கருதி தெரிவித்துக்கொள்கின்றேன். எனது களப்பணி எப்போதும் போல இன்னும் சிறப்பாக தொடரும் என்று கூறியுள்ளார்.

Advertisement