‘காசுக்காக இப்படி cheapஆன கேரக்டரை பண்றீங்க’ விடுதலை படத்தில் சேத்தனுக்கு கிடைத்த பெயர் – அவரின் பதில்.

0
998
chetan
- Advertisement -

விடுதலை படத்தில் நடித்ததற்காக ரசிகர்கள் நடிகர் சேத்தனுக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் பதிவு சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிகப் பிரபலமான இயக்குனராக வலம் வருபவர் வெற்றிமாறன். இவருடைய படைப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. அந்த வகையில் தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் விடுதலை. இந்த படத்தில் கதாநாயகனாக சூரி நடித்திருக்கிறார்.

-விளம்பரம்-

விஜய் சேதுபதி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இவர்களுடன் இந்த படத்தில் பவானி ஸ்ரீ, கௌதம் மேனன். சேத்தன் உட்பட பல நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள். எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய துணைவன் என்ற நாவலை அடிப்படையாக வைத்து இந்த படம் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த படத்தை எல்ரெட் குமார் தயாரித்திருக்கிறார். இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா இசை அமைத்திருக்கிறார்.

- Advertisement -

வேல்ராஜ் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்து இருக்கிறார். இந்த படம் இரண்டு பாகங்களாக உருவாக்கப்பட்டு கடந்த வாரம் தான் முதல் பாகம் வெளியாகி இருக்கிறது. மேலும், படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மேலும், இந்த படத்தில் ஓசி என்ற கதாபாத்திரத்தில் நடிகர் சேத்தன் நடித்து இருக்கிறார். சர்வதிகார போலீசாக இருக்கும் சேத்தன் தனக்கு கீழே உள்ள சக காவல்துறையைச் சேர்ந்தவர்களை மதிக்காத கதாபாத்திரம்.

இது ரசிகர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இது குறித்து பலருமே சோசியல் மீடியாவில் விமர்சனம் தெரிவித்து இருந்தார்கள். இந்த நிலையில் விடுதலை படத்தில் நடித்தது குறித்து சேத்தன் அவர்கள் பேட்டி ஒன்று அளித்திருந்தார். அதில் அவர், எனக்கு நிறைய நெகட்டிவ் கதாபாத்திரங்களில் பண்ண பிடிக்கும். அதன் மூலம் ரொம்ப எளிதாக ரசிகர்களிடம் ரீச் ஆகுவேன். அதுவும் பிரபல இயக்குனர் வெற்றிமாறன் படங்களில் பண்ண வாய்ப்பு வந்தால் சும்மா விட முடியுமா! ஆரம்பத்தில் சூரி இந்த படத்தின் ஹீரோ என்று சொன்னவுடன் எதற்கு ரிஸ்க் எடுக்கணும் என்று தோன்றியது.

-விளம்பரம்-

ஆரம்பத்தில் இந்த கதாபாத்திரத்தில் சூரி பொருந்த ரொம்பவே கஷ்டப்பட்டார். நான் டப்பிங் பண்ணும் போது சூரி உடைய நடிப்பை பார்த்து மிரண்டு விட்டேன். மேக்கிங் பார்த்தால் சூரிக்கு நிறைய அடியெல்லாம் பட்டிருக்கிறது. கையில் தோல் கிழிந்து காயம் எல்லாம் ஏற்பட்டிருக்கிறது. இதனால் சூரி கீழே போய் தையல் போட்டுவிட்டு மீண்டும் நடிக்க வந்து விடுவார். அந்த அளவிற்கு பயங்கரமாக இந்த படத்திற்காக உழைத்தார். பொல்லாதவன் படத்தில் தான் நான் முதன் முதலாக நடித்தேன்.

அதற்கு பிறகு பல ஆண்டுகள் கழித்து வெற்றிமாறன் சார் என்னை அழைத்தார். இந்த படத்தில் இரண்டு ஆண்டுகள் அவருடன் பயணம் செய்தேன். படம் பார்த்துவிட்டு சோசியல் மீடியாவில் ஒருவர், நான் உங்களை மதிக்கிறேன். ஆனால், காசுக்காக இந்த மாதிரியான கதாபாத்திரங்களை பண்ணாதீர்கள் என்று சொன்னார். படம் எனக்கு ரொம்ப பிடித்திருக்கு. வெற்றிமாறன் உடைய எல்லா படங்களிலும் எந்த காட்சிகள் இருந்தாலும் இயற்கையாகவே இருக்கும். அவருக்கு ஒரு காட்சி எந்த அளவு இருக்க வேண்டும் என்பது தெரியும்.

நாம் அதிகமாக பண்ணிவிட்டால் அவ்வளவு வேண்டாம் என்று சொல்லுவார். படத்தில் வரும் நிர்வாண காட்சியை படமாக்கப்படும்போது கோபம், வன்மம், காமம் என அனைத்தும் கலந்த எமோஷன்களை உடல் மொழியில் கொண்டு வர வேண்டும் என்பதை வெற்றி சொல்லி தான் நடித்தேன். அவரோட படத்தில் நடிக்க முன்னணி நடிகர்கள் பல பேரும் காத்துக் கொண்டிருக்கிறார்கள். நான் என்னதான் பேசிக் கொண்டாலும் 13 ஆண்டுகள் கழித்து தான் இந்த படத்தில் நடித்திருக்கிறேன். என்னோட கதாபாத்திரம் நல்லா வந்திருக்கு என்று சொல்லும்போது எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது என்று கூறியிருந்தார்

Advertisement