உடல்நிலை பிரச்சனையால் சமந்தா வாங்கிய சம்பளம் குறித்து பாடகி சின்மயி கூறியிருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தென்னிந்திய சினிமாவில் பல ஆண்டு காலமாக முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருபவர் சமந்தா. இவர் தமிழ் மற்றும் தெலுங்கில் தான் அதிக கவனம் செலுத்தி நடித்து வருகிறார். அந்த வகையில் இவர் கடந்த ஆண்டு வெளிவந்த புஷ்பா படத்தில் “ஊ சொல்றியா” என்ற பாடலுக்கு நடனமாடி ரசிகர்களின் மனதை கவர்ந்திருந்தார்.
பின் சமந்தா நடிப்பில் காத்துவாக்குல ரெண்டு காதல், யசோதா போன்ற படங்கள் வெளியாகி இருந்தது. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தது. இதை அடுத்து கடைசியாக சமந்தா நடிப்பில் வெளியாகி இருந்த சாகுந்தலம் படம் மாபெரும் தோல்வியை தழுவியது. இதனால் சமந்தா மனம் உடைந்து போய் விட்டார். இதை அடுத்து இவர் விஜய் தேவர்கொண்டா நடிப்பில் உருவாகி இருக்கும் குஷி என்ற படத்தில் நடித்து இருக்கிறார்.
குஷி படம்:
இந்த படத்தை சிவா நிர்வாணா இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் விஜய் தேவர் கொண்டா, சமந்தா, சரண்யா பொன்வண்ணன், லக்ஷ்மி, ரோஹினி, ஜெயராம், சச்சின் கெட்டேகர் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இந்த படத்தின் பாடல்கள் எல்லாம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. பல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி இருந்த சமந்தாவின் குஷி படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்று வருவதாக கூறப்படுகிறது.
சின்மயி அளித்த பேட்டி:
மேலும், இந்த படம் மூன்று நாட்களிலேயே உலக அளவில் 70 கோடிக்கு மேல் வசூல் செய்திருப்பதாக கூறப்படுகிறது. இதனால் சமந்தா அதிக உற்சாகத்தில் இருக்கிறார். இந்நிலையில் நடிகை சமந்தா குறித்து பாடகி சின்மயி கூறி இருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வெளியாகி இருக்கிறது. அதில், சமந்தாவிற்கு என்னுடைய ஆழ்ந்த அபிமானத்தையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். என்னைக் குறித்து சோசியல் மீடியாவில் அவதூறு கருத்துகளை பரப்பியவர்கள் மீது கூட சமந்தா கருணையை காட்டினார்.
சமந்தா குறித்து சொன்னது:
சமந்தாவை ஒரு உத்வேகமாக கருதுங்கள். அதோடு தனக்கு உடல் நலத்தில் பிரச்சனை இருப்பதால் படப்பிடிப்பு தாமதம் ஆன காரணத்தினால் சமந்தா தன்னுடைய சம்பளத்தையும் குறைத்து இருக்கிறார். எப்போதுமே சமந்தா தன்னுடைய தொழில், பணி தரம், நேர்மை ஆகியவற்றில் கவனம் செலுத்தி வருகிறார். அவருடைய வாழ்க்கை முடிந்து விட்டது என்று பலரும் கூறியிருக்கிறார்கள். ஆனால், தற்போது அவர் வெற்றியின் புதிய பாதையை தொடங்கி இருக்கிறார். சமந்தா தைரியமானவர். உலகின் அழகான பெண். பல பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு நீங்கள் ஒரு ஹீரோ என்றெல்லாம் கூறியிருக்கிறார்.
சமந்தா நோய்:
கடந்த ஒரு வருடம் ஆகவே சமந்தா அவர்கள் மயோசிடிஸ் என்ற நோயால் பாதிக்கப்பட்டு அவஸ்தை பட்டு இருந்த தகவல் அனைவரும் அறிந்ததே. இதற்காக இவர் தொடர் சிகிச்சை எடுத்து வருகிறார். ஆனால், அந்த நோயிலிருந்து சமந்தா பூரணமாக குணமடையவில்லை. தற்போது அந்த நோயின் தாக்கம் அதிகமாகி இருக்கிறது. இதனால் சமந்தா அவர்கள் நடிக்க ஒப்புக்கொண்ட படங்களுக்கு வாங்கிய அட்வான்ஸ் தொகையை திருப்பிக் கொடுத்திருக்கிறார். அது மட்டும் இல்லாமல் ஒரு வருடத்திற்கும் மேலாக சினிமாவை விட்டு விலக சமந்தா முடிவு எடுத்து இருப்பதாக தகவல் வெளியாகி இருந்தது. தற்போது இவர் தனக்கு பிடித்த மற்றும் மனதிற்கு நிம்மதியான விஷயங்களில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார்.