ஹன்சிகா குறித்து மேடையில் எல்லை மீறி பேசிய ரோபோ ஷங்கர், வெளுத்து வாங்கிய பத்திரிகையாளரை பாராட்டி சின்மயி போட்ட பதிவு.

0
1583
- Advertisement -

சமீபத்தில் திரைப்பட நிகழ்ச்சி ஒன்றில் மேடையில் நடிகை ஹன்சிகா குறித்து ரோபோ ஷங்கர் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் தற்போது இந்த விவகாரம் குறித்து சின்மயியும் பதிவிட்டுள்ளார். தமிழ் சினிமா உலகில் காமெடி நடிகனாக பட்டைய கிளப்பி கொண்டு இருப்பவர் ரோபோ ஷங்கர். குறுகிய காலத்தில் தன்னுடைய நடிப்பாலும், நகைச்சுவை பேச்சின் மூலம் சினிமா உலகில் தனெக்கென ஒரு இடத்தை பிடித்தவர் ரோபோ சங்கர். இவர் 2007 ஆம் ஆண்டு வெளிவந்த தீபாவளி என்ற படத்தின் மூலம் தான் சினிமா திரைக்கு அறிமுகமானார். ஆரம்பத்தில் சினிமா உலகில் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்து வந்தார் ரோபோ ஷங்கர்.

-விளம்பரம்-

இதனை அடுத்து பல படங்களின் காமெடியனாக ரோபோ சங்கர் நடித்திருக்கிறார். இப்படி ஒரு நிலையில் தான் இவர் உடல் எடை குறைந்து பார்ப்பதற்கு மிக மோசமாக இருந்தார். தற்போது இவர் தேறி வருகிறார். மீண்டும் ரோபோ சங்கர் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் தற்போது ரோபோ சங்கர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் பார்ட்னர். இந்த படத்தில் நடிகர் ஆதி, ஹன்சிகா, யோகி பாபு, ரோபோ சங்கர் உட்பட பலர் நடித்து இருக்கிறார்கள். மேலும், இந்த படத்தின் டீசர் வெளியீட்டு விழா சென்னையில் சமீபத்தில் நடைபெற்றது.

- Advertisement -

நிகழ்ச்சியில் ரோபோ சங்கர் :

அதில் படக்குழுவினர் கலந்து கொண்டு இருந்தார்கள். அப்போது நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ரோபோ சங்கர் கூறியது, ஹன்சிகா அவ்ளோ அழகு! அப்படியே பார்க்க மெழுகு சிலை போல இருக்கிறார். உருட்டி வைத்த மைதா பொம்மை போல இருக்கிறார். மேலும், படத்தில் ஒரு சீனில் நடிகை ஹன்சிகாவின் முட்டிக்கு கீழே கால் பகுதியை டச் செய்வது போன்ற ஒரு காட்சி இருந்தது. ஆனால், ஹன்சிகா சம்மதமே சொல்லவில்லை.

ஹன்சிகா குறித்து சொன்னது:

நானும் இயக்குனர் மனோஜ் தாமோதரனும் அன்சிகாவிடம் காலில் விழாத குறையா கெஞ்சியும் ஹன்சிகா நோ சொல்லிவிட்டார். பின் அவர் கால் விரலையாவது தொட்டு கொள்கிறேன் என்று கேட்டதற்கு ஹீரோ ஆதி மட்டும்தான் டச் செய்ய வேண்டும். காமெடி நடிகர் மற்றும் யாரும் நோ டச்சிங் டச்சிங் என்று ஹன்சிகா சொல்லிவிட்டார். அப்போதான் புரிந்தது ஹீரோ ஹீரோ தான், காமெடியன் காமெடியன் தான் என்று ரோபோ சங்கர் பேசியது அரங்கத்தையே அதிர வைத்திருந்தது.

-விளம்பரம்-

கேள்வி கேட்ட பத்திரிகையாளர் :

இதனை தொடர்ந்து இந்த விழாவில் இருந்த பத்திரிகையாளர் ஒருவர் ‘பொது நிகழ்ச்சியில் எப்படி பேச வேண்டும் என்று தெரியாத ஒரு நபரை மேடை ஏற்றுவது மிகவும் கேவலம். அவர் ஹன்சிகாவை பற்றி எல்லை மீறி பேசியிருந்தால் இன்று ஹன்சிகா அவரது பேச்சைக் கேட்டு சிரித்துக்கொண்டு இருப்பதாக தெரியலாம் ஆனால் வேறு ஒரு நடிகை உட்கார்ந்து இருந்தால் அவரின் நிலையை நினைத்துப் பாருங்கள். இதையெல்லாம் நீங்கள் நான்கு சேர்த்துக்கொள் பேசிக் கொள்ளுங்கள். ஆனால்,இப்படி பொது வெளியில் பேசினால் ஒரு நடிகை பற்றி சமூக வலைதளத்தில் ஏன் இழிவாக பேச மாட்டார்கள்’ என்று சரமாரியாக கேள்வி கேட்டு இருந்தனர். இதனை தொடர்ந்து படக்குழு ரோபோ ஷங்கரின் செயலுக்கு மன்னிப்பும் கேட்டது.

சின்மயி பதிவு :

இந்த நிலையில் அந்த பத்திரிகையாளர் செயலை பாராட்டியுள்ள சின்மயி ‘ இந்த பத்திரிகையாளர் யார் என்று எனக்குத் தெரியாது, ஆனால் யாராவது அவருக்கு ஒரு விருது கொடுங்கள். சமீபத்தில் நடந்த ஆடியோ வெளியீட்டு விழாவில் ரோபோ ஷங்கரும் அவரது பேச்சும் அசத்தியது. இந்த ஊடகவியலாளர் மட்டும் (இந்த வீடியோவின் அடிப்படையில்) அவரை வெளியே அழைத்தார் மற்றும் மேடையில் மற்றும் வெளியே உள்ள அனைவரும் அமைதியாக இருந்தனர். சந்தேகத்திற்குரிய சில நன்மைகளை வழங்க – இதுபோன்ற பேச்சுகள் என்றென்றும் ஆடியோ வெளியீட்டின் ஒரு பகுதியாக இருந்தன, பார்வையாளர்கள் இதைத்தான் விரும்புகிறார்கள் என்று அவர்கள் நினைக்கிறார்கள். பிரபல நடிகர்கள் தமிழ் பார்வையாளர்கள் தங்கள் ஹீரோயின்கள் கொழு கொழு என இருக்க விரும்புகிறார்கள், சைஸ் ஜீரோ அல்ல என்றும் கூறியுள்ளனர். தெளிவாக, சில மாற்றம் நடக்கிறது’ என்று பதிவிட்டுள்ளார்.

Advertisement