அது என் இஷ்டம்.! இறுதியில் பல்டி அடித்த அபிராமி.! கடுப்பான வனிதா.!

0
3275
Vanitha
- Advertisement -

நேற்றைய பிக் பாஸ் நிகழ்ச்சியில் கமல், இந்த வாரம் யாரை வெளியேற்ற விரும்பிகிறீர்களோ அவர்கள் பெயர்களை டிக் செய்யுங்கள் என்று போட்டியாளர்களுக்கு ஒரு வாகெடுப்பை நடத்தினர். அதில் வனிதா, மதுமிதா தான் வெளியே போக வேண்டும் என்று மற்றவர்களுக்கும் சேர்த்து வாக்களித்தார். ஆனால், கமல் அப்படி மற்றவர்கள் வாக்கை நீங்கள் அளிக்க முடியாது என்றதும் பின்னர் அதனை அழித்துவிட்டார். அதே போல கவின், சரவணனன் வெளியேற வேண்டும் என்று கூறிய போது அனைவரும் சரவணன் மீது சொல்லி ஷேப்பாக விளையாடுறீங்க’ என்றார் வனிதா.

-விளம்பரம்-

அதன் பின்னர் அபிராமியும் மீரா தான் வீட்டைவிட்டு வெளியேற வேண்டும் என்று கூறியதும், நீ சரியாக தான் செய்கிறாயா, குழப்பத்தில் எதுவும் இல்லையா என்று வனிதா, அபிராமியிடன் கூற, அதற்கு நான் சரியாக தான் செய்கிறேன் என்று அபிராமி கூறி விடுகிறார்.

இதையும் பாருங்க : கலகம் மூட்டிய வனிதா.! பாத்திமாவிடம் கேவலமாக நடந்த மீரா.! இது ரெண்டாவது ஜூலி போல.! 

- Advertisement -

அதன் பின்னர் சரவணன் பிடிக்கும் என்பதால் அவருக்கு வாக்களிக்க கூடாது, யார் இந்த வீட்டில் இருக்க கூடாது என்று விரும்புகிறீர்களோ அவங்க பெயரை தேர்வு செய்யுங்கள் என்றதும் எழுந்து சென்ற வனிதா, சரவணனின் பெயரில் இருந்த அனைத்தையும் அழித்துவிட்டார்.

அதன் பின்னர் மீண்டும் பல பேர் மதுமிதா தான் வெளியேற வேண்டும் என்று தேர்வு செய்த்னர். அப்போதும் அபிராமி, மீரா தான் வெளியேற வேண்டும் என்று உறுதியாக இருந்தார். இறுதியில் மதுமிதா வெளியேற வீட்டில் உள்ளவர்கள் பெரும்பாலானோர் விரும்பினாலும், மக்கள் மதுமிதாவை காப்பாற்றிவிட்டார்கள் என்று கூறினார் கமல்.

-விளம்பரம்-

அதன் பின்னர் வனிதா முகத்திலும் ரேஷ்மா முகத்திலும் அப்படி ஒரு வன்மம் தெரிந்தது. அதன் பின்னர் அபிராமியிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்ட வனிதா ‘எதற்காக நீ மீராவை தேந்தெடுத்தாய்’ என்றதும் ‘அனைவருக்கும் அவர்கள் தனிப்பட்ட கருத்து இருக்காதா ‘ என்றார். மதுமிதா காப்பற்றபட்டது ஒரு புறம் வனிதாவுக்கு கடுப்பாக இருந்தாலும் மற்ற தான் விரும்பும் நபர் தான் வெளியேற்ற விரும்ப வேண்டும் என்ற எண்ணம் தான் வனிதாவுக்கு இருப்பது தெளிவாகவே தெரிந்தது.

Advertisement