கோவையில் ‘கொரோனா தேவி’ கோவில் – கட்டனவர் யார் தெரியுமா ? அதுக்கு அவர் கொடுத்த விளக்கத்தை கேளுங்க.

0
1684
corona
- Advertisement -

நடுமுழுதும் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக கொரோனாவின் கோர தாண்டவம் முடிவில்லாமல் தொடர்ந்து வருகிறது. இந்த நோயினால் இந்தியாவில் பல லட்சம் பேர் பலியான நிலையில் தமிழகத்தில் தற்போது இந்த வைரஸ் தீவிரமடைந்து உள்ளது. கொரோனா நோயை கட்டுப்படுத்த, உலகம் முழுக்க தடுப்பூசிகள், மருந்துகள் தொடர்பான ஆய்வுகள் நடந்து வருகின்றன. இந்தியாவில் பரவியுள்ள உருமாறிய கொரோனா மிக மோசமான தாக்குதலை தொடுத்து வருகிறது. தடுப்பூசி எடுத்துக்கொண்ட பலருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டு தான் வருகிறது.

-விளம்பரம்-

இப்படி ஒரு நிலையில் கொரோனாவிற்கு சிலை வைத்து காமாட்சிபுரி ஆதினம் சார்பில் வழிபாடு செய்யப்பட்டு வருகிறது. மேலும், அந்த கோவிலில் 48 நாட்கள் மகா யக்ஞம் நடத்தி வழிபடவும் இருக்கின்றனர். அந்த கோவிலில் பூசாரிகள் பூஜை செய்யும் வீடியோ ஒன்றும் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. கோவை இருகூர் காமாட்சிபுரி ஆதீனம் ஸ்ரீ சிவலிங்கேஸ்வர சுவாமிகள் கோவை இருகூர் காமாட்சிபுரி ஆதீனம் ஸ்ரீ சிவலிங்கேஸ்வர சுவாமிகள் கட்டியுள்ளார்.

இதையும் பாருங்க : அட, இவங்க தான் பாக்கியலட்சுமியின் உண்மையான மகளா ? முதன் முறையாக அவரே வெளியிட்ட வீடியோ.

- Advertisement -

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இதற்கு முன்பு அம்மை நோய், காலரா ஏற்பட்ட போது மக்கள் பல உயிர்களை இழந்தனர். அப்போது  தெய்வமே துணை என்ற வாக்கின்படி கிராமங்களிலே மாரியம்மன், மாகாளியம்மன், பிளேக் மாரியம்மன் என்ற வழிபாட்டினை ஏற்படுத்தினர். கோவிட்19 என்ற வைரஸ், மக்களின் வாழ்க்கையை பெரிதும் பாதித்துள்ளது. இதை மனதில் வைத்து, கொரோனா தேவி சிலையை வடித்துள்ளோம். 

கடவுள் மட்டுமே ஒரே நம்பிக்கை என்ற நிலையில், இதுபோல சிலைகள் வடிக்கப்பட்டு வழிபாடுகள் நடந்துள்ளன. அதே மாதிரிதான், கொரோனாவின் கோரத் தாண்டவத்தை நிறுத்த, கொரோனா தேவி சிலையை வடித்துள்ளோம்.48 நாட்கள் மகா யக்ஞம் நடத்தி, வழிபடுவோம். பக்தர்களுக்கு இந்த காலகட்டத்தில் பூஜையில் கலந்து கொள்ள அனுமதியில்லை. கோவில் பூசாரிகள் மட்டுமே பூஜைகள் நடத்துவார்கள். மாரியம்மன், மாகாளியம்மன் வழிபாட்டை போலவே, கொரோனா தேவி வழிபாடும் முக்கியமானது என்று கூறியுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement