நம்மை சிரிக்க வைத்த குமரிமுத்துவின் கல்லறையில் இப்படி தான் எழுதப்பட்டுள்ளது. வைரலாகும் புகைப்படம்.

0
93178
kumarimuthu
- Advertisement -

சினிமாவை பொறுத்த வரை ஒவ்வொரு காமெடி நடிகர்களுக்கும் தனிப்பட்ட பாடி லாங்குவேஜ் இருக்கும். ஆனால், தனது வித்யாசமான சிரிப்பையே தனது தனிப்பட்ட அடையாளமாக வைத்து சினிமாவில் கலக்கியவர் பிரபல காமெடி நடிகரான முறைமுத்து. மக்களை சிரிக்க வைக்க காமெடியன்கள் தனது காமெடிகள் மூலம் கஷ்டப்பட்ட நிலையில் வெறும் சிரிப்பை வைத்து ரசிகர்களை சிரிக்க வைத்த ஒரே நடிகர் என்றால் அது குமாரி முத்து தான் என்று சொன்னால் அது மிகையாகாது. நாகர்கோவிலில் பிறந்த இவர், கடந்த 1979 ஆம் ஆண்டு மகேந்திரன் இயக்கத்தில் வெளியான ‘உதிரி பூக்கள்’ அறிமுகமானார்.

-விளம்பரம்-
குமரிமுத்து மறைவு

- Advertisement -

அதன் பின்னர் பல்வேறு படங்களில் காமெடி நடிகராக நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு தனி அங்கீகாரத்தை பிடித்தார் குமரிமுத்து, தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் ரஜினி, கமல் துவங்கி விஜய், அஜித் வரை பல்வேறு தலைமுறை நடிகர்களின் படத்தில் நடித்துள்ளார் குமரிமுத்து. இறுதியாக விஜய் நடிப்பில் கடந்த 2009 ஆம் ஆண்டு வெளியான ‘வில்லு’ படத்தில் நடித்திருந்தார் குமரிமுத்து. அதன் பின்னர் உடல் நலக்குறைவால் சினிமாவில் நடிப்பதை நிறுத்திவிட்டார்.

இதையும் பாருங்க : 21 ஆண்டுகளாக சினிமாவில் இருந்தே காணாமல் போன நடிகை சிவரஞ்சனி. அவரது தற்போதைய நிலை.

நடிகர் குமரிமுத்து தனது 75 வது வயதில் கடந்த பிப்ரவரி மாதம் 29 ஆம் தேதி காலமானர். மூச்சு திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குமரிமுத்துக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். குமரிமுத்துவின் மறைவிற்கு பல்வேறு திரைப்பட கலைஞர்களும் அஞ்சலி செலுத்தினர்.மேலும், குமரிமுத்துவின் உடல் சென்னை மந்தைவெளியில் உள்ள கல்லறை தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டது. இந்த நிலையில் குமரிமுத்துவின் கல்லறையை நேரில் சந்தித்த போது மனதை நெகிழவைக்கும் வகையில் அவரது கல்லறையில் ஒரு வாசம் பொறிக்கப்பட்டிருந்தது.

-விளம்பரம்-
குமரிமுத்து கல்லறை

அவரது கல்லறையில், Its Time For The God, To Enjoy His Laughter அதாவது, இது கடவுளுக்கான நேரம், இவரது நகைச்சுவை அனுபவிக்க என்று எழுதப்பட்டிருக்கிறது. பல ஆண்டுகள் நம்மை சிரிக்கவைத்த இவரது நகைச்சுவையை மறக்காமல் குமரிமுத்துவின் குடும்பத்தினர் இப்படி கற்பனை திறனுடன் அன்புகலந்து எழுதியுள்ளதை கண்டு வியப்படைந்தோம். இதில் இதைவிட கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவெனில். குமரிமுத்துவின் மறைவிற்கு சில முன்னாள் உயிரிழந்த பிரபல இயக்குனர் மகேந்திரனின் கல்லறைக்கு அருகில் தான் குமரிமுத்துவின் கல்லறையும் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement