திருப்பதியை தொடர்ந்து திருமணத்தால் அடுத்த சர்ச்சையில் சிக்கிய நயன் – மனித உரிமைகள் ஆணையத்தில் புகார். இதான் காரணமாம்.

0
386
- Advertisement -

நயன்தாரா மீது மனித உரிமை ஆணையத்தில் புகார் அளித்து இருக்கும் சம்பவம் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. தென்னிந்திய சினிமா உலகில் பல ஆண்டு காலமாக லேடி சூப்பர் ஸ்டாராக கலக்கி கொண்டிருப்பவர் நயன்தாரா. இவர் முன்னணி நடிகையை மட்டுமில்லாமல் தயாரிப்பாளராகவும் திகழ்ந்து கொண்டிருக்கிறார். சமீப காலமாக இவர் கதாநாயகிகுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகின்றார். அதனால் நாட்கள் செல்ல செல்ல இவருடைய ரசிகர்கள் கூட்டமும் அதிகமாகிக் கொண்டிருக்கிறது.

-விளம்பரம்-
nayanthara

சமீபத்தில் வெளிவந்த காத்துவாக்குல ரெண்டு காதல் என்ற படத்தில் நயன் நடித்து இருந்தார். இந்த படத்தை விக்னேஷ் சிவன் இயக்கி இருந்தார். பல எதிர்பார்ப்புகளுடன் வெளிவந்த காத்துவாக்குல ரெண்டு காதல் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று இருந்தது. இதனைத் தொடர்ந்து தற்போது நயன்தாரா நடிப்பில் உருவாகி இருக்கும் படம் O2. வெங்கட் பிரபுவிடம் உதவி இயக்குனராக இருந்த ஜி கே விக்னேஷ் இந்த படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். இந்த படம் டிஸ்னி ப்ளஸ் அறிமுகமாகிறார்.

- Advertisement -

நயன் நடிக்கும் படங்கள்:

இந்த படம் ஜூன் 17 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்த படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பாக எஸ்ஆர் பிரபு தயாரித்திருக்கிறார். இப்படத்தை தொடர்ந்து நயன் அவர்கள் கனெக்ட், ஜவான், காட் ஃபாதர், திரில்லர் படம் என்று பல திரைப்படங்களில் நடித்து வருகிறார். இப்படி பல படங்களில் நயன் கமிட்டாகி இருந்தாலும் தன் காதலன் விக்னேஷ் சிவன் உடன் அடிக்கடி வெளிநாடு சென்று கொண்டு இருந்தார். அதோடு தமிழ் சினிமாவின் ஹாட் காதல் ஜோடிகளாக இருவரும் வலம் வந்துக்கொண்டிருந்தார்கள்.

நயன்தாரா -விக்னேஷ் சிவன் திருமணம்:

இதனால் இவர்களின் திருமணம் எப்போது? என்பது தான் பலரும் எதிர்பார்த்து வரும் ஒரு விஷயமாக இருந்தது. பின் சமீபத்தில் தான் இவர்களின் திருமண விழா மெஹந்தி நிகழ்ச்சியுடன் கோலாகலமாக தொடங்கி இருந்தது. அனைவரும் எதிர்பார்த்த ஜூன் 9 ஆம் தேதி மகாபலிபுரத்தில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் விக்னேஷ் சிவன்- நயன்தாரா திருமணம் படு விமர்சையாக பிரம்மாண்டமாக நடந்தது. இவர்களுடைய இல்லற வாழ்வு சிறக்க திரையுலகினரும், ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து இருந்தார்கள். மேலும், திருமணம் முடிந்த கையுடன் இந்த தம்பதிகள் ஜோடியாக திருப்பதி கோயிலுக்கு சென்றிருக்கின்றார்கள்.

-விளம்பரம்-

திருப்பதி கோவிலில் எழுந்த சர்ச்சை:

ஏழுமலையான் கோவில் முன்புறம் உள்ள பகுதியில் காலணியுடன் சென்று இருவரும் போட்டோ ஷூட் நடத்தி இருந்தார்கள். இதை அறிந்த தேவஸ்தான நிர்வாகம் நயன்-விக்கி மீது நடவடிக்கை எடுக்க முடிவு செய்து இருந்தது. இதனால் சோசியல் மீடியாவில் சர்ச்சை எழுந்தது. இது தொடர்பாக நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் தரப்பிலிருந்து மன்னிப்பு கடிதம் கொடுத்து இருந்தார்கள். இதனை தொடர்ந்து இருவரும் கேரள மாநிலத்திலுள்ள நயன்தாராவின் வீட்டிற்கு சென்றிருந்தார்கள். இந்த நிலையில் நடிகை நயன்தாரா மீது மீண்டும் ஒரு புகார் கிளம்பி இருக்கிறது.

nayanthara

மனித உரிமை ஆணையத்தில் நயன் மீது புகார்:

அதாவது கடந்த 9ஆம் தேதி நடைபெற்ற திருமணத்தில் ஏகப்பட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தது. இதனால் அந்த நாளில் பொதுமக்கள் கடற்கரை செல்ல அனுமதிக்கப்பட்டது. கடற்கரை பொதுவான இடம் அங்கு செல்ல பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இந்நிலையில் மனித உரிமை மீறல் என்று கோரி தேசிய மனித உரிமை ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதற்கு நயன்தாரா- விக்னேஷ் சிவன் தரப்பிலிருந்து என்ன பதில் வரப்போகிறது? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Advertisement