குக் வித் கோமாளி 3 நிகழ்ச்சியின் கடைசி ஷூட், டைட்டில் வின்னர் இவர் தான் – உண்மையை உடைத்த இயக்குனர்

0
598
- Advertisement -

குக் வித் கோமாளி சீசன் 3ல் நடந்த முடிந்த இறுதிச்சுற்றில் டைட்டில் வின்னர் ஆனவர் குறித்த தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. விஜய் தொலைக்காட்சியில் எத்தனையோ ரியாலிட்டி ஷோக்கள் வந்தாலும் ஒரு சில நிகழ்ச்சிகள் தான் மக்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் மூன்று வருடமாக ஒளிபரப்பாகி வரும் ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சிக்கு என்றே ஒரு பெரிய ரசிகர் பட்டாளம் இருக்கிறது. புது வித்தியாசமான முறையில் இந்த சமையல் நிகழ்ச்சியை விஜய் டிவி அறிமுகம் செய்து இருக்கிறது.

-விளம்பரம்-

முதல் சீசனுக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து இரண்டாம் சீசனும் ஒளிபரப்பாகி நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. அதற்கு முக்கிய காரணமே இந்த நிகழ்ச்சியில் வரும் கோமாளிகள் தான். அதுமட்டும் இல்லாமல் இந்த நிகழ்ச்சி தான் டிஆர்பி ரேட்டிங்கில் டாப்பில் இருக்கிறது. அதிலும் கொரோனா லாக்டவுனில் மக்களுக்கு இருந்த பிரச்சனைக்கு மருந்தாக குக் வித் கோமாளி நிகழ்ச்சி தான் இருந்தது. இந்த நிகழ்ச்சி சமையல் மட்டும் இல்லாமல் பலரையும் சிரிக்க வைக்கும் நிகழ்ச்சியாக இருக்கிறது.

- Advertisement -

இதையும் பாருங்க : நீ முஸ்லீமா இருந்துட்டு இப்படி பண்ணலாமா – மதத்தை குறிப்பிட்டு கேள்வி கேட்ட ரசிகருக்கு பரீனா கொடுத்த பதில்.

குக் வித் கோமாளி சீசன் 3 :

மேலும், இந்த நிகழ்ச்சியில் சீசனுக்கு சீசன் போட்டியாளர்கள் மற்றும் கோமாளிகள் மாறினாலும் கடந்த 3 சீசன்களாக மாறாமல் இருப்பது இந்த நிகழ்ச்சியின் நடுவர், தொகுப்பாளர் தான். வழக்கம் போல் குக் வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சி இந்த ஆண்டு தொடங்கப்பட்டது. இதில் அந்தோணிதாசன், கிரேஸ் கருணாஸ், மனோபாலா, சந்தோஷ் பிரதாப், வித்யூலேகா,ரோஷினி, ஸ்ருதிகா, அம்மு அபிராமி, தர்சன் என்று பல பிரபலங்கள் கலந்து கொண்டு இருந்தார்கள்.

-விளம்பரம்-

நிகழ்ச்சி குறித்த பிற தகவல்:

அதேபோல் கோமாளியாக சிவாங்கி, புகழ், பாலா, மணிமேகலை, சுனிதா, குரேஷி, மூக்குத்தி முருகன், பரத் போன்ற பலரும் கலந்து கொண்டிருந்தார்கள். இந்த நிகழ்ச்சியில் நடுவர் வெங்கடேஷ் பத் மற்றும் தாமு. தொகுப்பாளர் ரக்ஷன் ஆவார். கடந்த இரண்டு சீசனை விட மூன்றாவது சீசனுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து இருக்கிறது. இந்த முறை நிகழ்ச்சியில் பல வித்தியாசமான கான்செப்ட்களை கொண்டு வந்து இருந்தார்கள்.

வைல்ட் கார்டு:

மேலும், பல வாரங்களை கடந்து இந்த நிகழ்ச்சியின் இறுதி சுற்றுக்கு ஸ்ருதிகா, தர்சன், அம்ம அபிராமி, வித்யூலேகா சென்றிருக்கிறார்கள். கடந்த வாரம் குக் வித் கோமாளி சீசன் 3ன் வைல்ட் கார்டு சுற்று நடைபெற்று இருந்தது. இறுதியில் வித்யூலேகா, ஸ்ருதிகா, தர்சன், அம்மு அபிராமி, சந்தோஷ்,கிரேஸ் ஆகியோர் இறுதி சுற்றுக்கு தேர்வாகி இருந்தார்கள். தற்போது நிகழ்ச்சியின் கடைசி ஷூட்டிங் முடிவடைந்துள்ளது. இந்நிலையில் இது தொடர்பாக நிகழ்ச்சியின் இயக்குநர் பார்த்திபனிடம் பேட்டி எடுக்கப்பட்டு இருந்தது.

டைட்டில் வின்னர்:

அதில் அவர் கூறியிருந்தது, வழக்கம் போல இந்த சீசனுக்கும் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு கிடைத்தது. தற்போது நிகழ்ச்சி முடிவடைந்துள்ளது. கடந்த வாரம் ஷூட்டிங் நடந்தது. வித்யூலேகா, ஸ்ருதிகா, தர்சன், அம்மு அபிராமி, சந்தோஷ்,கிரேஸ் ஆகியோர் இறுதி சுற்றுக்கு தேர்வாகி இருந்தார்கள். இதில் மறைந்த நடிகர் தேங்காய் சீனிவாசனின் பேத்தியும், நடிகையுமான ஸ்ருதிகா சிறப்பாக சமைத்து டைட்டில் வின்னர் வென்றிருக்கிறார். நிகழ்ச்சியின் இறுதி எபிசோட் வரும் வாரம் ஞாயிற்றுக்கிழமை ஒளிபரப்பாகும்.

Advertisement