எங்களின் மிகப் பெரிய தொடக்கம் – தங்கள் ரசிகர்களுக்கு குட் நியூஸ் சொன்ன ஹுசைன் மணிமேகலை.

0
652
manimegalai
- Advertisement -

மிகப்பெரிய தொடக்கம் என்று உசைன்- மணிமேகலை தம்பதியினர் ரசிகர்களுக்கு சொல்லியிருக்கும் குட் நியூஸ் வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டிங் ஆகி வருகிறது. சன் மியூசிக்கில் பிரபலமான வி.ஜே வாக வேலை பார்த்து இருந்தவர் மணிமேகலை. அதன் பின் இவர் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இருக்கிறார். இதனை தொடர்ந்து மணிமேகலை தனியார் சேனலில் தொகுப்பாளராக அறிமுகம் ஆனார். இதனால் மணிமேகலை மக்கள் மத்தியில் பிரபலமான தொகுப்பாளினியாக ஆனார்.

-விளம்பரம்-
manimegalai

அதுமட்டும் இல்லாமல் இவருக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. இதனிடையே மணிமேகலை- உசேன் நீண்ட வருடமாக காதலித்து வந்தார்கள். ஆனால், இவர்கள் காதலுக்கு இருவீட்டாரும் சம்மதிக்காததால் பெற்றோர்களின் எதிர்ப்புகளை மீறி இருவரும் ரிஜிஸ்டர் மேரேஜ் செய்து கொண்டார்கள். மேலும், மணிமேகலை திருமணத்திற்குப் பின்னும் தொடர்ந்து நிகழ்ச்சியில் தொகுப்பாளராக பணி புரிந்து வருகிறார்.

- Advertisement -

மணிமேகலை-உசேன் திருமணம்:

அதோடு ஹுசைனின் மதத்திற்கு மணிமேகலை மாறாததால் ஹுசைன் வீட்டிலும் அவரை ஏற்றுக் கொள்ளவில்லை. சமீபத்தில் தான் இவர்களை குடும்பத்தினர் சேர்த்துக் கொண்டனர். மணிமேகலை திருமணத்திற்கு பின்னர் கொஞ்சம் பிரேக் எடுத்து கொண்டாலும் தற்போது இவர் பல நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். அதுமட்டும் இல்லாமல் இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான நிகழ்ச்சியான குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்தார்.

மணிமேகலை சின்னத்திரை பயணம்:

தற்போது இந்த நிகழ்ச்சி இரண்டு சீசன்களை கடந்து மூன்றாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது.
அதன் பின்னர் இவர் விஜய் டிவியிலேயே செட்டில்ஆகி விட்டார் என்று சொல்லலாம். மேலும், இவர் Vjவாக இதுவரை 2400க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இருக்கிறார், 2000க்கும் மேற்பட்ட லைவ் நிகழ்ச்சிகள், 120 க்கும் மேற்பட்ட பிரபலங்களின் பேட்டி, 250கும் மேற்பட்ட குழுவான நிகழ்ச்சிகள், 100க்கும் மேற்ப்பட்ட ரியாலிட்டி நிகழ்ச்சிகள் என்று 12 ஆண்டுகளில் செய்து இருக்கிறார். அதே போல இந்த தம்பதி யூடுயூப் சேனல் ஒன்றையும் நடத்தி வருகின்றனர்.

-விளம்பரம்-

யூடுயூப் சேனல்:

இந்த சேனலில் இவர்கள் புது புது வித்தியாசமான வீடியோக்களையும், புகைப்படங்களையும் பதிவிட்டு வருகிறார்கள். இதனால் இவர்களை லட்சக்கணக்கான ரசிகர்கள் பாலோ செய்கிறார்கள். இப்படி இருக்கும்போது சில மாதங்களுக்கு முன்பு இரண்டு ஏக்கர் நிலம் வாங்கி அதற்கு HM லேண்ட் என பெயர் வைத்து வீடியோ ஒன்றையும் யூடியூப்பில் வெளியிட்டு இருந்தார்கள். கொரோனா லாக் டவுனில் தங்கி இருந்த கிராமத்திற்கு அருகாமையில் தான் இந்த நிலத்தை வாங்கி இருந்தார்கள். இதற்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார்கள். ஆனால், அந்த அதற்கு பிறகு அந்த நிலம் என்ன ஆனது? என்று ரசிகர்கள் பலரும் கேள்வி எழுப்பினார்கள்.

ஹேப்பி நியூஸ் வீடியோ :

இந்த நிலையில் மணிமேகலை- உசைன் இருவருமே தங்களுடைய ரசிகர்களுக்காக ஹேப்பி நியூஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்கள். அதாவது, தாங்கள் வாங்கிய நிலத்தில் முதன்முறையாக ஒரு நல்ல விஷயத்தை செய்து இருக்கிறார்கள். வீடு கட்டும் பணிக்காக போர் போட்டு தண்ணீர் எடுத்து இருக்கிறார்கள். இந்த வீடியோவை யூ டியூப்பில் வெளியிட்டு இருக்கின்றனர். கல்யாணத்திற்கு பிறகு உழைத்து பணத்தை சேர்த்து அதில் நிலம் வாங்கி போர் போட்ட முதல் அனுபவத்தைப் பற்றி சந்தோஷத்துடன் இருவரும் பகிர்ந்து இருக்கின்றனர். இந்த வீடியோ தான் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இதை பார்த்த ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வீடியோவை ட்ரெண்டிங் ஆக்கி வருகின்றனர்.

Advertisement