கையில் கத்திரிக்கோல், முட்டிக்கு மேல் வரை புடவையை கிழித்துவிட்டு பவித்ரா கொடுத்த போஸ். கழுவி ஊற்றும் ரசிகர்கள்.

0
1424
pavithra
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் எத்தனையோ ரியாலிட்டி ஷோக்கள் வந்தாலும் ஒரு சில நிகழ்ச்சிகள் மக்களின் பேராதரவை பெற்று விடுகிறது. அந்த வகையில் கடந்த ஆண்டு ஒளிபரப்பான ‘குக்கூ வித் கோமாளி’ நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்றது. முதல் சீசனுக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து தற்போது இரண்டாம் சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. முதல் சீசனை விட இந்த சீசனுக்கு எக்கச்சக்க வரவேற்பு கிடைத்துள்ளது. அதற்கு முக்கிய காரணமே இந்த நிகழ்ச்சியில் வரும் கோமாளிகள் தான். தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஷோக்களில் இந்த நிகழ்ச்சி டாப் லிஸ்ட்டில் உள்ளது.

-விளம்பரம்-

சொல்லப்போனால் சமீபத்தில் நிறைவடைந்த பிக் பாஸ் 4நிகழ்ச்சியை விட இந்த ஷோவிற்கு தான் ரசிகர்கள் மத்தியில் ஏகபோக வரவேற்பு கிடைத்துள்ளது என்பது தான் தவிர்க்க முடியாத உண்மை. இந்த சீஸனில் ரசிகர்களுக்கு பரிட்சியமான மற்றும் பரிட்சியமில்லாத பல போட்டியாளர்கள் குக்காக கலந்து கொண்டு உள்ளனர். அதே போல இந்த சீசனில் கோமாளிகளாக புகழ், பாலா, சரத், சுனிதா, சக்தி, பார்வதி, மணிமேகலை, ஷிவாங்கி என்று பலர் கலந்து கொண்ட நிலையில் போட்டியாளராக மதுரை முத்து, ஷகிலா, தர்ஷா, பாபா பாஸ்கர், கனி, தீபா, அஸ்வின், தர்ஷா குப்தா, பவித்ரா என்று 8 பேர் கலந்து கொண்டனர்.

இதையும் பாருங்க : தாடி பாலாஜி மகள் போஷிகாவா இது ? எப்படி வளந்துட்டார் பாருங்க. எப்போதான் சேர போறாங்களோ.

- Advertisement -

இதில் மதுரை முத்துவும், தீபாவும், தர்ஷாவும் இதுவரை வெளியேறியுள்ளனர்.இந்த சீசனில் பல பெண் போட்டியாளர்கள் கலந்து கொண்டு இருந்தாலும் இந்த நிகழ்ச்சியில் இளசுகளின் கிரஷஷாக் இருந்து வருவது இரண்டு பேர் தான். ஒரு தர்ஷா குப்தா மற்றொருன்று பவித்ரா லட்சுமி. நடிகை பவித்ரா லட்சுமி ஆரம்பத்தில் குறும்படம் மூலமாக மீடியா துறைக்கு அறிமுகமானார். மேலும் மலையாளத்தில் உல்லாசம் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். இவர் கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மானாட மயிலாட என்ற நடன நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதுமட்டுமல்லாமல் இவர் இரட்டை வால் குருவி என்ற சீரியலிலும் நடித்து இருக்கிறார் இது சீரியலில் தான் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கு பெற்று வரும் அஸ்வினும் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மாடல் அழகியான இவர் அடிக்கடி வித்யாசமான போட்டோ ஷூட்டை நடத்துவது வழக்கம். அந்த வகையில் சமீபத்தில் இவர் புடவையில் போட்டோ ஷூட் நடத்தி இருந்தார். அதில் கையில் கத்திரிக்கோலுடன் பாதி புடவையை கிழித்து விட்டு இருக்கிறார் பவித்ரா. இதை பார்த்த ரசிகர்கள் பலர் பல்வேறு விமர்சனங்களை முன் வைத்து வருகின்றனர் .

-விளம்பரம்-
Advertisement