நிறைவடைந்த குக்கு வித் கோமாளி 2 – கண்ணீருடன் புகழ் போட்ட உருக்கமான பதிவு.

0
1095
pugazh
- Advertisement -

கடந்த சில மாதங்களாக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த குக்கு வித் கோமாளி நிகழ்ச்சி இந்த வாரத்தோட நிறைவடைவது எண்ணி ரசிகர்கள் சோகத்தில் இருந்து வருகின்றனர். இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியின் நிறைவு குறித்து புகழ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உருக்கமான பதிவை போட்டுள்ளார். விஜய் தொலைக்காட்சியில் எத்தனையோ ரியாலிட்டி ஷோக்கள் வந்தாலும் ஒரு சில நிகழ்ச்சிகள் மக்களின் பேராதரவை பெற்று விடுகிறது. அந்த வகையில் கடந்த ஆண்டு ஒளிபரப்பான ‘குக்கூ வித் கோமாளி’ நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்றது.

-விளம்பரம்-
This image has an empty alt attribute; its file name is 1-27.jpg

முதல் சீசனுக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து தற்போது இரண்டாம் சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. முதல் சீசனை விட இந்த சீசனுக்கு எக்கச்சக்க வரவேற்பு கிடைத்துள்ளது. அதற்கு முக்கிய காரணமே இந்த நிகழ்ச்சியில் வரும் கோமாளிகள் தான். தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஷோக்களில் இந்த நிகழ்ச்சி டாப் லிஸ்ட்டில் உள்ளது.செம ஜாலியாக சென்று கொண்டு இருந்த இந்த சீசன் விரைவில் நிறைவடைய இருக்கிறது. இறுதி போட்டிக்கு ஏற்கனவே கனி, பாபா பாஸ்கர், அஸ்வின் ஆகிய மூன்று பேர் தேர்வாகினர்.

- Advertisement -

இப்படி ஒரு நிலையில் கடந்த வாரம் நடைபெற்ற 4 வது இறுதி போட்டியாளருக்கான வைல்டு கார்டு போட்டியில் ஒருவர் தான் பைனலுக்கு தகுதி பெறுவார் என்று எதிர்பார்த்த நிலையில் ஷகீலா மற்றும் பவித்ரா ஆகிய இருவர் பைனலுக்கு தகுதி பெற்றுள்ளனர். இந்த வாரம் இறுதி போட்டி நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இந்த வாரம் செலிப்ரேஷன் வீக் கொண்டாடபட்டு வந்தது.

இப்படி ஒரு நிலையில் இந்த சீசனின் இறுதி போட்டிக்கான ஷூட்டிங் நிறைவடைந்து விட்டது. அதன் புகைப்படங்கள் கூட சமூக வலைதளத்தில் வைரலானது. இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியின் நிறைவு குறித்து புகழ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உருக்கமான பதிவை போட்டுள்ளார். அதில்,

-விளம்பரம்-
Advertisement