சமூக வலைதளத்தில் தொடர்ந்து ஆபாச வீடியோகளை பதிவிட்டு அதன் மூலம் பிரபலமடைந்த ரவுடி பேபி சூர்யா என்ற சுப்புலட்சுமியின் யூடுயூப் பக்கத்தை முடுக்க வேண்டும் என்று நீதி மன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. சமூக வலைதளமான டிக் டாக் மூலம் பலர் பிரபலமாகி இருந்தார்கள். அந்த வகையில் குறுகிய காலத்தில் மக்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் டிக் டாக் சூர்யா. இவர் திருப்பூர் மாவட்டம் செட்டிபாளையம் அடுத்த அய்யம்பாளையம் அருகே உள்ள சபரி நகரைச் சேர்ந்தவர். இவருடைய உண்மையான பெயர் சுப்புலட்சுமி. சமூக வலைதளமான டிக்டாக்கில் இவர் தன்னுடைய பெயரை சூர்யா என்று வைத்து கொண்டார்.
இந்த பெயரின் மூலம் இவர் மிகவும் பிரபலமானவர். மேலும், இவர் வெளியிடும் வீடியோக்களில் முரட்டுத்தன சுபாவங்களை வெளிப்படுத்துவதால் ‘ரவுடி பேபி சூர்யா’ என அழைக்கப்படார். நாளடைவில் அதனையே தனது பெயராக மாற்றினார்.இவருக்கு சமூக வலைத்தளத்தில் ரசிகர்களை விட ஹேட்டர்ஸ்கள் தான் அதிகமாக இருந்து வருகிறார்கள். மேலும், இவர் டிக்டாக்கில் இருந்தபோது இவர் மீது பலரும் பாலியல் குற்றச்சாட்டுகளை கூட வைத்திருந்தார்கள்.
கடந்த சில மாதங்களுக்கு முன் இவர் ஸ்பா ஒன்றில் பாலியல் தொழில் செய்ததாக திருச்சி மாநகர காவல் துறையினரால் பாலியல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார். ஆனால், தான் பாலியல் தொழிலில் ஈடுபடவில்லை என்றும் தனக்கும் அந்த ஸ்பாவிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும் கூறி இருந்தார் சூர்யா. இருப்பினும் டிக் டாக் தடை செய்யப்பட்ட பின்னர் இவர் யூடுயூபில் வீடியோ பதிவிட்டு வருகிறார்.
டிக் டாக்கை போல யூடுயூபிலும் ஆபாசமாக ஆடை அணிந்து ஆடுவது, ஆசைங்கமாக பேசுவது என்று தொடர்ந்து வீடியோகளை பதிவிட்டு வருகிறார். இப்படி ஒரு நிலையில் இவர் மீது தூத்துக்குடி சங்கரப்பேரியை சேர்ந்த, துணை மேலாளர் அந்தஸ்தில் வேலை பார்க்கும் ஒருவர் போலீசில் புகார் அளித்துள்ளார். சமீபத்தில் இவர் ரவுடி பேபி சூர்யாவின் வீடியோவை பார்த்துவிட்டு அவருக்கு, “இது தவறு’ என்று கமன்ட் பதிவிட்டுள்ளார்.
அவரின் போன் நம்பரை வைத்து அவரை தொடர்பு கொண்டு கொலை மிரட்டல் வந்துள்ளது. இதனால் சூர்யா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் போலீசில் புகார் அளித்துள்ளார். மேலும், “போலீஸே என் வீட்டுக்கு ஆளை அனுப்பிவிடுவான். உங்களால் ஒண்ணும் புடுங்க முடியாது’ என்று அவர் பேசிய ஆடியோவையும் இணைத்து புகார் அளித்துள்ளார்.
இது போக தன்னிடம் உதவி கேட்டு வரும் பெண்களிடம், மாணவிகளிடம், “உங்களுடைய உடல் உறுப்பை போட்டோ எடுத்து அனுப்புங்கள், நண்பர்கள் கேட்டுள்ளார்கள். அதைப் பார்த்தவுடன் பணம் தருவார்கள்’ என ஃபேஸ்புக் மெசெஞ்சரில் தூண்டில் போட்டு அந்தரங்க புகைப்படங்களை வாங்கி, அதனைக் காண்பித்து மிரட்டி விபச்சாரத்தில் ஈடுபட வைத்த புகாரும் சூர்யா மீது உண்டு.
இப்படி ஒரு நிலையில், ரவுடி பேபி சூர்யா மீது அளித்த புகார் தொடர்பான வழக்கு திருப்பூர் முதன்மை அமர்வு நீதிபதி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்பேதாது நீதிபதி காவல்துறைக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.அந்த கடிதத்தில், ரவுடி பேபி சூர்யா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் அந்த யூடியூப் சேனலை முடக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்தக் கடிதத்தில் உத்தரவிட்டுள்ளார்.