தரணி இயக்கத்தில் விஜய் மற்றும் திரிஷா நடிப்பில் கடந்த 2004 ஆம் ஆண்டு வெளியான ‘கில்லி’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் சூப்பர் டூப்பர் ஹிட் அடுத்துதது. இந்த படத்தில் திரிஷாவின் அம்மாவாக நடித்தது வேறு யாரும் இல்லை. சசி குமார் இயக்கத்தில் வெளியான ‘ஈசன்’ படத்தில் ஜில்லா விட்டு ஜில்லா’ என்ற பாடலில் தனது நடனத்தின் மூலம் பலரையும் கவர்ந்த சுஜாதா தான்.
சிறு வயதில் இருந்தே கோடம்பாக்கத்தில் இருந்து வந்துள்ள இவர் சிறு வயது முதலே நடனத்தின் மீது அதிகம் ஆர்வம் கொண்டவராக இருந்துள்ளார். பின்னர் நடன பள்ளியில் சேர்ந்து பல்வேறு பரிசுகளையும் வாங்கியுள்ளார். அதன் பின்னர் சினிமாவில் குரூப் டான்ஸரா சேர்ந்து ஆடத்தொடங்கினர். முதல்ல, ரகு மாஸ்டர்கிட்ட குரூப் டான்ஸரா சேர்த்துள்ளார்.
இதையும் பாருங்க : ஓராண்டு நட்பை குடியும் கூத்துமாக கொண்டாடிய யாஷிகா மற்றும் ஐஸ்வர்யா.? புகைப்படம் இதோ.!
அதன் பின்னர் சுந்தரம் மாஸ்டர்கிட்டசேர்ந்த இவர் சூப்பர் ஸ்டார் நடித்த தளபதி படத்தில் சூப்பர் ஹிட் அடித்த ‘ராக்கம்மா… கையத் தட்டு’, ‘காட்டுக்குயிலு’ போன்ற பாடல்களில் குரூப் டான்சராக ஆடியுள்ளார். தொடர்ந்து ரகுராம் மாஸ்டர், சுந்தரம் மாஸ்டர் போன்றவர்களிடம் உதவி நடன இயக்குனராக பணியாற்றியுள்ளார்.
அதன் பின்னர் இயக்குனர் கதிர் இயக்கிய ‘காதல் தேசம்’ படத்தில் இடம்பெற்ற ‘முஸ்தஃபா முஸ்தஃபா’ பாடல் மூலமாதான் நான் மாஸ்டர்ஆகியுள்ளார். அதன் மூலமாக இவருக்கு நல்ல பெயர் கிடைக்கவேய தொடர்ந்து ‘பகைவன்’, ‘நேசம்’ தொடங்கி சுமார் 200-க்கும் மேற்பட்ட படங்களுக்கு நடனம் அமைத்துள்ளார் சுஜாதா.
சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசியுள்ள விஜய்யின் கில்லி படம் குறித்து பேசுகையில், விஜய் சாரோட ‘கில்லி’ பட சமயம். டைரக்டர் தரணி சார் ஆபிஸ்ல இருந்து போன் வந்தது. முதல்முறையா எனக்குப் பிடிச்ச விஜய் சாருக்குக் கொரியோகிராஃபி பண்ணத்தான் கூப்பிடுறாங்கன்னு ஆர்வமா இருந்தேன். அப்புறம்தான் தெரிஞ்சது, அந்தப் படத்துல த்ரிஷாவுக்கு அம்மாவா நடிக்கக் கூப்பிடுறாங்கன்னு.
‘ஏன் சார்னு இப்படி’னு தரணி சார்கிட்ட கேட்டப்போ, ‘மாஸ்டர், நான் உதவி இயக்குநரா இருந்த காலத்துல இருந்து உங்க வொர்க்கைக் கவனிச்சிருக்கேன். இந்தப் படத்துல உங்ககூட சேர்ந்து வொர்க் பண்ண ஆசைப்பட்டேன். ஆனா, ராஜூ சுந்தரம் மாஸ்டருக்கும், விஜய்க்கும் கெமிஸ்ட்ரி சரியா இருக்கிறதால, அதை மாற்ற முடியல. அதனால, நீங்க இந்த ரோல்ல நடிங்க’னு சொன்னார். சரி, இவ்வளவு பெரிய ஹீரோ நடிக்கிற படமாச்சேனு நானும் நடிக்க ஒப்புக்கிட்டேன்.” என்று கூறியுள்ளார்.