சினிமா நடிகர்களை விட சீரியல் நடிகர்கள் இல்லத்தரசிகள் மத்தியில் பெரும் பிரபலமாக இருந்து வருகின்றனர். அந்த வகையில் சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ் போன்ற தொலைக்காட்சிகளில் ஒளிபரப்புகி வரும் பல்வேறு சீரியல்களில் பிஸியாக நடித்து வருபவர் ஸ்ரீ எனப்படும் ஸ்ரீ குமார்.
சீரியல் நடிகரான இவர் “சரோஜா,தெறி, ரங்கூன், ” போன்ற பல தமிழ் படங்களில் சிறு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தற்போது நடிகர் ஸ்ரீகுமார், ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் “தேவதையை கண்டேன், தலையணை பூக்கள்” போன்ற தொடர்களில் நடித்து வந்தார்.
இதில் தேவதையை கண்டேன் என்ற தொடரில் வாசுதேவன் என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். இந்நிலையில் திடீரென்று இந்த தொடரில் இருந்து விலகுவதாக நடிகர் ஸ்ரீ அறிவித்திருந்தார். இதற்கான காரணத்தை தெரிவித்தியுள்ளார்.
சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற நடிகர் ஸ்ரீ தெரிவிக்கையில், இந்த தொடரில் தன்னுடைய கதாபாத்திரத்தை திடீரென்று மாற்றியதாலும், புதிதாக கதாபாத்திரத்துக்கு கொடுக்கப்படும் கதை நன்றாக இல்லை என்பதாலும் இந்த முடிவை தான் எடுத்துள்ளதாக கூறியுள்ளார்.தற்போது ஸ்ரீ கதாபாத்திரத்தில் ஈஸ்வர் நடிக்க உள்ளாராம்.