‘புஷ்பா 2’ பிரமோஷனில் தயாரிப்பாளர்களை விளாசிய இசையமைப்பாளர் தேவ ஸ்ரீ பிரசாத்- வைரலாகும் வீடியோ

0
225
- Advertisement -

சென்னையில் நடந்த ‘புஷ்பா 2’ படத்தின் பிரமோஷனில் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் தயாரிப்பாளர்களை விமர்சித்த செய்தி தான் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. தெலுங்கு சினிமா வட்டாரத்தில் சூப்பர் ஸ்டார் ஆக கலக்கி கொண்டு இருப்பவர் அல்லு அர்ஜுன். இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. அந்த வகையில் , கடந்த 2021 ஆம் ஆண்டு அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியாகி இருந்த படம் புஷ்பா. இந்தப் படத்தை இயக்குனர் சுகுமார் இயக்கியிருந்தார்.

-விளம்பரம்-

மேலும், இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில், சுனில் அனுசியா உட்பட பலர் நடித்திருந்தார்கள். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருந்தார். ஆந்திரா பகுதியில் நடைபெறும் செம்மர கடத்தலை மையமாக வைத்து இந்த படம் உருவாகி இருந்தது. இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என ஐந்து மொழிகளில் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது.

- Advertisement -

புஷ்பா 2 :

அதைத்தொடர்ந்து ‘புஷ்பா 2’ திரைப்படம் தற்போது உருவாகி இருக்கிறது. புஷ்பா 2 படத்தின் ரிலீஸுக்காக ரசிகர்கள் பலரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டு இருக்கும் நிலையில் ஒரு வழியாக வருகின்ற டிசம்பர் 5ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. இந்த இரண்டாம் பாகத்திலும், அல்லு அர்ஜுன் மற்றும் ராஷ்மிகா முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க பகத் பாஸில் வில்லனாக நடித்துள்ளார். மேலும், சுனில், ராவ் ரமேஷ், பிரம்மாஜி மற்றும் ஜெகதீஷ் பிரதாப் போன்ற முக்கிய நடிகர்கள் படத்தில் நடித்துள்ளனர்.

புஷ்பா 2 ப்ரோமோஷன்:

அதோடு புஷ்பா 2 படத்திற்கு, குபா ப்ரோஜெக் ஒளிப்பதிவு செய்ய, தேசிய விருது பெற்ற எடிட்டர் நவீன் நூலி எடிட்டிங் செய்துள்ளார். தற்போது படக்குழு இந்தியா முழுவதும் பிரமோஷன் வேலைகளில் பிஸியாக உள்ளனர். அந்த வகையில் தமிழ் மக்களிடம் படத்தைக் கொண்டு சேர்க்கும் விதமாக சென்னையில் ‘புஷ்பா 2’ ப்ரோமோஷன் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டு மேடையில் பேசியிருந்தார்கள். அந்த வகையில் நிகழ்ச்சி மேடையில் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் பேசியது தற்போது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

-விளம்பரம்-

தேவி ஸ்ரீ பிரசாத் பேசியது:

அதில், தயாரிப்பாளர்களிடம் இருந்து பணம்பெறுவதாக இருந்தாலும் அல்லது படத்தின் கிரெடிட்டாக இருந்தாலும், நமக்கு என்ன தேவையோ அதை கேட்டு பெற வேண்டும். புஷ்பா படத்தின் தயாரிப்பாளர் ரவிக்கு என்ன பிரச்சனை என்று எனக்கு புரியவில்லை. ‘ரவி சார் நான் ஏதோ ஸ்டேஜ்ல ஏறி நிறைய நேரம் பேசுறேனு நினைக்காதீங்க. நீங்க என்னவோ டைமுக்கு பாட்டு குடுக்கல, டைமுக்கு பேக்ரவுண்ட் ஸ்கோர் குடுக்கல, டைமுக்கு ப்ரோக்ராமுக்கு வரல என்று சொல்றீங்க. உங்களுக்கு என் மேல் அதிக அன்பு இருக்கிறது. ஆனா, அன்பை விட அதிகமாக கம்பளைண்ட்ஸ் என் மீது ஏன் இருக்கிறது என்று எனக்கு புரியவில்லை. நான் வந்து 25 நிமிடங்கள் மேல் ஆகிவிட்டது. ஆனால், சார் கேமரால என்ட்ரி குடுங்க என்று சொல்றீங்க. உண்மைய சொல்லணும்னா எனக்கு ரொம்ப வெட்கமாக இருக்கிறது’.

ஓபன் ஆக இருப்பேன்:

எனக்கு மேடையில இருக்கும்போது தான் வெட்கமாக இருக்காது. மேடைக்கு வெளியே நான்தான் அதிகமாக வெட்கப்படுபவன். இல்லை நான் உள்ளே போய்விடுகிறேன் என்று சொன்னாலும் விடமாட்டீர்கள். சரி ஓகே என்று, பாடல் வந்த உடனே நான் ஓடி வந்தேன். ஆனால், நீங்க ராங் டைமிங் என்று சொன்னீங்க. நான் என்ன சார் பண்ண முடியும். இதெல்லாம் உங்ககிட்ட தனியாக கேட்டால் ஒரு கிக் இருக்காது. அதனால்தான் இப்படி மேடையில் கேட்கிறேன். நான் இதுபோல் தான் எப்பவும் ஓபன் ஆக இருப்பேன் என்று பேசியுள்ளார். சமீபத்தில் வெளியான தகவலின் படி, தேவி ஸ்ரீ பிரசாத் சரியான நேரத்தில் புஷ்பா படத்திற்கு பின்னணி இசை மற்றும் பாடல்களை தரவில்லை என்று கூறி, தயாரிப்பாளர்கள் எஸ் தமன் மற்றும் அஜனீஸ் லோக்நாத் ஆகியோரை படத்தில் சேர்த்துக் கொண்டுள்ளதாக கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Advertisement