நஷ்ட ஈடு கோட்டு தனுஷ் போட்ட வழக்கு, நயன்தாராவுக்கு நீதிமன்றம் கொடுத்த அதிரடி உத்தரவு

0
158
- Advertisement -

நயன்தாரா-தனுஷ் வழக்கு தொடர்பாக நீதிமன்றம் போட்டிருக்கும் உத்தரவு தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. கடந்த சில வாரங்களாக தனுஷ்- நயன்தாரா இடையேயான பஞ்சாயத்து தான் சோசியல் மீடியாவில் அதிகமாக பேசப்பட்டு வருகிறது. நடிகை நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து கடந்த 2022 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். பிரம்மாண்டமாக நடத்தப்பட்ட இவர்கள் திருமணத்தை ஆவணப்படுத்தி ஒளிபரப்பு உரிமையை Netflix நிறுவனம் பெற்று இருந்தது.

-விளம்பரம்-

விக்கி – நயன் திருமணத்தினுடைய ஆவணப்படுத்தப்பட்ட வீடியோவை ‘ Beyond The Fairy Tale’ என்ற பெயரில் உருவாக்கி இருந்தார்கள். மேலும், இந்த திருமண நிகழ்வு வீடியோ கடந்த நவம்பர் 18ஆம் தேதி வெளியான நிலையில், அதற்கு முன்பே இந்த வீடியோவின் ட்ரெய்லர் வெளியாகி இருந்தது. அதில் மூன்று வினாடி ‘நானும் ரவுடிதான்’ படத்தினுடைய காட்சிகள் இடம் பெற்றுள்ளது. இதனால் அந்த படத்தின் தயாரிப்பாளர் தனுஷ் 10 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு நயன்தாராவுக்கு நோட்டீஸ் அனுப்பி இருந்தார்.

- Advertisement -

நயன் அறிக்கை:

இதனால் தனுஷ்- நயன்தாரா இடையே பெரிய சர்ச்சை வெடித்து இருந்தது. பின் நயன்தாரா, தனுஷ் மீது குற்றம் சாட்டி கடிதம் ஒன்றை இணையத்தில் வெளியிட்டிருந்தார். அதில், என்னுடைய ஆவணப்படத்திற்கு எதிராக நீங்கள் கொண்டிருக்கும் பழிவாங்கும் என்னும் தெளிவாக புரிகிறது. இது ரொம்ப தவறான செயல். மக்களை நீங்கள் ஏமாற்ற முடியாது. நீங்கள் பொய்யான கதைகளையும், பஞ்ச் வசனங்களையும் ஆடியோ வெளியீட்டில் கொடுக்கலாம். ஆனால், கடவுள் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறார். உங்களின் கீழ்த்தரமான இந்த செயல் மூலம் மனிதராக நீங்கள் எப்படிப்பட்டவர்? என்பதை வெளிச்சம் போட்டு காட்டுகிறது என்று குறிப்பிட்டிருந்தார்.

தனுஷ் மீது குற்றச்சாட்டு:

அதோடு, கடந்த இரண்டு ஆண்டுகளாகவே , நானும் ரவுடிதான் படத்தின் காட்சிகளை பயன்படுத்த கோரிக்கை விடுத்தும் தனுஷ் NOC தரவில்லை என்றும் நயன்தாரா குறிப்பிட்டு இருந்தார். இந்த விவகாரம் இணையத்தில் பரவ தொடங்கியவுடன் நயன்தாராவிற்கு ஆதரவாக தனுஷுக்கு எதிராகவும் நிறைய நடிகைகள் ரியாக்ட் செய்திருந்தார்கள். இது திரையுலகில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. ஆனால், தனுஷின் எதிர்ப்பை மீறி கடந்த நவம்பர் 18ஆம் தேதி வெளியான நயன்தாரா ஆவணப்படத்தில் ‘நானும் ரவுடிதான்’ படத்தின் காட்சிகள் இடம் பெற்றது.

-விளம்பரம்-

தனுஷ் தொடர்ந்த வழக்கு:

இதனால் நயன்தாராவுக்கு எதிராக தனுஷ் தரப்பில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அதில், நடிகை நயன்தாரா மீது உரிமையியல் வழக்கு தாக்கல் செய்ய தனுஷ் தரப்பில் அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. அது மட்டும் இல்லாமல் தனுஷ் வைத்த குற்றச்சாட்டுக்கு நயன்தாரா- விக்னேஷ் சிவன் இருவருமே பதிலளிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவு போட்டு இருந்தது.

நீதிபதி உத்தரவு:

இந்த நிலையில் இன்று தனுஷ் போட்ட வழக்கு விசாரணைக்கு வந்திருக்கிறது. அப்போது இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, இது தொடர்பாக ஜனவரி எட்டாம் தேதிக்குள் நயன்தாரா- விக்னேஷ் சிவன் மற்றும் நெட்பிளிக்ஸ் நிறுவனம் ஆகியோர் பதிலளிக்க வேண்டும் என்றும், இந்த வழக்கினுடைய இறுதி விசாரணையும் அன்றே நடத்தப்படும் என்றும் உத்தரவிடப்பட்டு இருக்கிறது. நயன்தாரா தரப்பில் இருந்து என்ன பதில் வரப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Advertisement