‘ராக்கெட்டரி’ படத்தால் சொந்த வீட்டை இழந்தாரா மாதவன் ? – அவரே சொன்ன விளக்கம்.

0
301
madhavan
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக மிக பிரபலமான நடிகராக திகழ்பவர் மாதவன். இவர் திரைப்பட நடிகர் மட்டுமில்லாமல் எழுத்தாளர், படத்தயாரிப்பாளர், நிகழ்ச்சி தொகுப்பாளர் என பன்முகம் கொண்டவர். இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கடந்த 2000 ஆம் ஆண்டு வெளியான ‘அலைபாயுதே’ என்ற படம் மூலம் தான் மாதவன் தமிழ் சினிமா உலகில் அறிமுகமாகி இருந்தார். இவரின் முதல் படமே சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது. அதனைத் தொடர்ந்து இவர் பல படங்களில் நடித்திருந்தார்.

-விளம்பரம்-

மேலும், இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம், இந்தி என பிற மொழி படங்களிலும் நடித்திருக்கிறார். இடையில் கொஞ்சம் மாதவன் சினிமாவில் இருந்து பிரேக் எடுத்து கொண்டாலும் தற்போது படங்களில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். அதிலும் சமீப காலமாக மாதவன் நடித்த விக்ரம் வேதா, இறுதி சுற்று போன்ற பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. ஆரம்பத்தில் தமிழ் சினிமாவில் நுழைந்த போது சாக்லட் பாய் என்ற முத்திரையுடன் வந்த மாதவன் தற்போது ஒரு சிறந்த நடிகராக விளங்கி வருகிறார்.

- Advertisement -

மாதவனின் திரைப்பயணம்:

அதோடு மாதவன் படங்களில் மட்டும் இல்லாமல் வெப் சீரிஸிலும் பட்டைய கிளப்பி வருகிறார். தற்போது மாதவனே இயக்கி, நடித்திருக்கும் படம் ‘ராக்கெட்ரி தி நம்பி எஃபெக்ட்’. இது இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன் வாழ்க்கையை மையப்படுத்தி எடுத்திருக்கும் படம். இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி இருந்தது. அதோடு இந்த படம் தமிழ், கன்னடம், தெலுங்கு, ஆங்கிலம், இந்தி என ஐந்து மொழிகளிலும் வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் நம்பி நாராயணன் வேடத்தில் மாதவன் நடித்து இருக்கிறார். அவரது மனைவியாக சிம்ரன் நடித்திருக்கிறார்.

ராக்கெட்ரி தி நம்பி எஃபெக்ட் படம் :-

மேலும், இந்த படத்தில் கௌரவ வேடத்தில் இந்திப் பதிப்பில் ஷாருக்கானும், தமிழ் பதிப்பில் சூர்யாவும் நடித்திருக்கிறார்கள். தற்போது இந்த படத்தின் புரமோஷன் பணிகளில் மும்முரமாக நடந்து கொண்டு இருக்கிறார். இந்நிலையில் இது தொடர்பாக மாதவன் செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்திருக்கிறார். அதில் மாதவன் கூறியிருந்தது, விக்ரம் வேதா படம் முடிந்ததும் இஸ்ரோ விஞ்ஞானியின் வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவங்களை வைத்து திரைப்படம் எடுக்க கூறி எனது நண்பர் பரிந்துரைத்தார். தற்போது படமும் ரிலீஸ் ஆகி மக்களிடையே நல்ல வரவேற்பது பெற்று வந்தது.

-விளம்பரம்-

சமூகவலைதளத்தில் பரவி வந்த வதந்தி :-

இந்நிலையில் சமூக வலைதளங்களில் ராக்கெட்டரி படம் குறித்து சில வதந்திகள் பரவி வந்தது. அது என்னவென்றால் ராக்கெட்டரி திரைப்படம் ரிலீஸ் ஆகி மக்களிடையே நல்ல வரவேற்பையும் கைதட்டுகளையும் வாங்கினாலும். இப்படம் வியாபார ரீதியாக தோல்வியை சந்தித்ததாகவும் வதந்திகள் வந்த வண்ணமே இருந்தது. இதை அடுத்து சமூக வலைதளத்தில் இளைஞர் ஒருவர் பதிவிட்டிருந்தது என்னவென்றால் ராக்கெட்டரி படம் வியாபார ரீதியாக தோல்வியை சந்தித்ததால் மாதவன் அவருடைய சொந்த வீட்டையே விற்கும் நிலைக்கு ஆளாகியுள்ளார் அதே நேரத்தில் மாதவன் அவரின் மகன் நீச்சல் போட்டியில் இன்று பல பதக்கங்களை வாங்கி நாட்டிற்காக பெருமை சேர்த்துக் கொண்டிருக்கிறார் என பதிவிட்டு இருந்தார்.

மாதவனின் பதில் :-

அந்தப் பதிவை பார்த்த மாதவன் அதற்கு பதில் அளித்து இருந்தார் ” தயவுசெய்து என்னை யாரும் தியாகியாக ஆக்க வேண்டாம். உட உணாமையில் ராக்கெட்டரி படம் தயாரிப்புக்கு சம்பந்தப்பட்டவர்கள் அனைவரும் இந்த வருடம் வருமான வரியை பெருமையுடன் செலுத்த உள்ளனர். கடவள் அருளால் இந்த படம் மூலம் அனைவரும் லாபமே அடைந்துள்ளோம். இதுதான் உண்மை மற்றும் இந்த படத்தின் மூலம் நான் என் வீட்டையோ அல்லது வேறு எதையும் நான் இழக்கவில்லை என நடிகர் மாதவன் சமூக வலைதளங்களில் பரவி வந்த வதந்திகளுக்கு முடிவு கட்டினார்.

Advertisement