முஸ்லமாக மாறச்சொல்லி மூன்றாம் மனைவி நிர்பந்தித்தாரா. அவரே சொன்ன விளக்கம்.

0
10235
yuvan
- Advertisement -

இசைஞானி இளையராஜாவிற்கு கார்த்திகேயன், யுவன் சங்கர் ராஜா, பவதாரணி என்ற மூன்று பிள்ளைகள் உள்ளார்கள் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று தான். . இவர்கள் மூவருமே தன் தந்தையைப் போல இசையில் புலமை பெற்று வருகிறார்கள். இளையராஜாவின் குடும்பமே இசை குடும்பம் தான். இளையராஜாவிற்கு பிறகு சினிமா உலகில் இசையில் நிலையான இடத்தைப் பிடித்தவர் யுவன் சங்கர் ராஜா.
இளையராஜாவின் மகன் யுவன்ஷங்கர் ராஜாவின் இசைக்கு மிகப்பெரிய ரசிகர் கூட்டம் உள்ளது.

-விளம்பரம்-
https://www.instagram.com/p/BxKAtPtDjXt/

தனக்கென ஒரு பாணியில் கிட்டத்தட்ட தன் தந்தையை ஒத்தது போல இசையமைக்கும் யுவனுக்கும் ஏன் இன்னும் தேசிய விருது கிடைக்கவில்லை என்பது அனைவருக்கும் ஆச்சரியமான ஒன்றாகும். அரவிந்தன் துவங்கி தற்போது வரை யுவன் எண்ணெற்ற இசை ஆல்பங்களை கொடுத்திருக்கிறார். யுவன் சங்கர் ராஜா கடந்த 2003 ஆம் ஆண்டு சுஜயா என்பவரை திருமணம் செய்துகொண்டார். பின்னர் அவரை 2007 ஆம் ஆண்டு விவாகரத்து செய்துவிட்டார்.

- Advertisement -

அதன் பின்னர் 2011 ஆம் ஆண்டு ஷில்பா என்பவரை திருமணம் செய்து கொண்ட யுவன் அவரையும் விவாகரத்து செய்துவிட்டார். அதன் பின்னர் கடந்த 2015 ஆம் ஆண்டு ஜப்ருன் நிஷா என்பவரை மூன்றாம் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு 2016 ஆம் ஆண்டு ஒரு மகளும் பிறந்தார். மூன்றாம் திருமணத்திற்கு முன்பாகவே யுவன் சங்கர் ராஜா இஸ்லாம் மதத்தை ஏற்று தனது பெயரை அப்துல் காலிக் என்று பெயரை மாற்றிக்கொண்டார்.

யுவன் ஷங்கர் ராஜா மூன்றாம் திருமணம் செய்துகொள்ள தான் இஸ்லாம் மதத்திற்கு மதம் மாறினார் என்றும் கூறப்பட்டது. இந்த நிலையில் யுவன் மனைவி ஜப்ருன் நிஷாவிடம் இன்ஸ்டாகிராமில் ரசிகர் ஒருவர், நீங்கள் தான் யுவனை நிர்பந்தித்து இஸ்லாம் மதத்திற்கு மாற்றினீர்களா என்று கேட்டிருந்தார். அதற்கு பதில் அளித்த அவர், நான் யுவனை சந்திப்பதற்கு 3 வருடங்களுக்கு முன்பாகவே அவர் இஸ்லாம் மதத்தை பின்பற்றி வந்தார்.

-விளம்பரம்-

மேலும், இதுபோன்ற கேள்விகளுக்கு ஒருநாள் நான் யுவனை லைவ் வர சொல்கிறேன் அதை அவரிடமே கேளுங்கள் என்றும் கூறியுள்ளார். அதே போல மற்றொரு நபர், யுவன் எத்தனை ஆண்டுகளாக நோன்பு இருந்து வருகிறார் என்று கேள்வி கேட்டதற்கு அவர் 8 வருடங்களாக பின்பற்றி வருகிறார் என்றும் கூறியுள்ளார்.

Advertisement