வெள்ளை முடி இருந்தால் என்ன ? – இளநரையுடன் மணமேடை ஏறிய பிரபல நடிகரின் மகள். குவியும் பாராட்டுக்கள்.

0
704
Niyati
- Advertisement -

உணவு, வாழ்க்கை முறை உள்ளிட்ட காரணங்களால் இளநரை என்பது தற்போது இளம் வயதினருக்கு மத்தியில் அதிகரித்து வருகிறது. ஆனால், 40 வயதை கடந்தவர்கள் கூட இளநரை மறைந்து தாங்கள் இளமையாக காட்சியளிக்கவே விரும்புவார்கள் இப்படி ஒரு நிலையில் எந்த வித அலகாரமும் இன்றி, இயல்பாக திருமணத்தில் பங்கேற்ற நியாதி, ‘எந்த நேரத்திலும் நீங்கள் நீங்களாகவே இருங்கள்’ என்ற மெசேஜை உலகிற்கு சொல்லியுள்ளார் பிரபல நடிகரின் மகள். .ஹிந்தியில் மிகப் பிரபலமான நடிகர் திலிப் ஜோஷி. இவர் திரைப்படங்கள் மட்டும் இல்லாமல் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றிருக்கிறார்.

-விளம்பரம்-

பிரபல நடிகரின் மகள் :

இவர் போர்பந்தரில் குஜராத்தி குடும்பத்தை சேர்ந்தவர். இந்நிலையில் இவருடைய மகள் நியாதிக்கு திருமணம் நடந்துள்ளது. நடிகர் திலிப் ஜோதியின் மகள் நியாதி இளநரையுடன் திருமணக்கோலத்தில் கலந்து உள்ளார். இதை பார்த்த நெட்டிசன்கள் பாராட்டி தள்ளியுள்ளனர்பொதுவாகவே திருமணங்களின் போது மணமகள் பயங்கரமாக மேக்கப் எல்லாம் செய்து தங்களை பிரம்மாண்டமாக அலங்கரிப்பார்கள்.

- Advertisement -

ஆனால், பிரபல நடிகரின் மகளாக இருந்தும் நியாதி தன்னுடைய திருமணத்தின் போது இளநரை உடன் எந்தவித ஆடம்பரமும் இல்லாமல் எளிமையாக மணமகன் யசோவர்தனை திருமணம் செய்து உள்ளார். மேலும், இவர்களுடைய திருமணம் குஜராத் பாரம்பரியப்படி நடந்துள்ளது. தற்போது அவர்களுடைய திருமண புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இதனை பார்த்து பிரபலங்களும், ரசிகர்களும், நெட்டிசன்களும் வாழ்த்து கூறி பாராட்டை தெரிவித்து வருகின்றனர்.

இழைநரையுடன் திருமணம்

அதற்கு முக்கிய காரணம் இளம் வயதை உடைய நியாதி தன்னுடைய இளநரையை பற்றிய கவலைப்படாமல் அப்படியே மணகோலத்தில் வந்து திருமணம் செய்துகொண்டார். மேலும், எந்த நேரத்திலும் நீங்கள் நீங்களாகவே இருங்கள், யாருக்காகவும் உங்களுடைய அழகை மாற்றிக் கொள்ள வேண்டாம் என்பதை நியாதி அவருடைய திருமணத்தின்போது கூறி உள்ளார். மேலும், உணவு, உடை போன்ற காரணங்களால் தான் சிறுவயதிலேயே இளநரை ஏற்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-

தைரியத்திற்க்கு குவியும் வாழ்த்து :

இந்நிலையில் இது குறித்து இன்ஸ்டாகிராமில் நெட்டிசன்கள் கூறி இருப்பது, நீங்கள் உங்கள் நரை முடியை மறைக்காமல் இருந்ததற்கு நன்றி. திருமண புகைப்படம் அழகாக உள்ளது என்று கூறுகின்றார். இன்னொருத்தர், மணமகள் மன உறுதியோடு தலைக்கு வர்ணம் பூசாமல் திருமணத்தில் பங்கேற்று உள்ளார். அவருடைய தைரியம் பாராட்டக்குரியது என்று கூறி உள்ளார். இப்படி பலரும் தங்களுடைய வாழ்த்துக்களையும் நியாதியின் தைரியத்தை குறித்து வாழ்த்தியும் வருகின்றனர்.

திலீப் ஜோதி மகிழ்ச்சி :

தற்போது நடிகர் திலீப் ஜோதி மகளின் திருமண புகைப்படங்களை லட்சக்கணக்கான மக்கள் பார்த்து லைக்ஸ்களை குவித்து வருகின்றனர். மேலும், தன்னுடைய மகளின் திருமணம் குறித்து திலீப் ஜோதி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கருத்து ஒன்றை பதிவிட்டு உள்ளார். அதில் அவர் கூறி இருப்பது, இந்த அற்புதமான பயணத்தில் எனது மகள் நியாதி மற்றும் எனது குடும்பத்தில் புதிதாக இணையும் எனது மருமகன் யசோவர்தன் ஆகியோர் சிறந்து விளங்க நான் வாழ்த்துகிறேன். எங்களுக்கு ஆதரவாக இருப்பதன் மூலம் எங்கள் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்ட அனைவருக்கும் நன்றி. திருமண தம்பதிகளுக்கு நல்வாழ்த்துக்கள் என்று கூறியிருக்கிறார். இவரின் பதிவு தற்போது சோஷியல் மீடியாவில் பயங்கர வைரலாகி வருகிறது. அதே போல

Advertisement